- குருபரம்பரையிநூடக தாந்திரிகசாதனையில் பயணித்து சித்தி பெற்ற குருவிடம் இருந்து சக்தி பரிமாற்றம் – இதனை தீக்ஷை என்பார்கள்
- அதன் பின்னர் தொடர்ச்சியான பயிற்சி – இதனை சாதனை என்பார்கள்
- முன் துணிவில்லாமல் (prejudice), எண்ணங்கள் அற்ற மனத்துடன் குருபரம்பரைக்குரிய மூல நூற்களை கற்றல்,
- மேலும் தெய்வம் எனும்போது தாந்திரீகம் எங்கோ வானத்தில் இருக்கும் அனுபவத்திற்கு வராதா கற்பனையான எதையோ தெய்வம் என்று கற்பிப்பதில்லை. அதனால் எமக்கு உபதேசிக்கும், தெய்வ சக்தியை பரிமாறும் குருவே முதல் தெய்வம், அந்த குருவில் தெய்வ சக்தியை அறிந்து, பின்னர் தன்னில் தெய்வ சக்தியை விழிப்பித்து தெய்வமாகும் முறையே தாந்த்ரீகம் ஆகும்.
- எண்ணங்கள் அற்ற மனம் என்பது குருவினதும் தெய்வ அனுக்கிரகத்தினால் வருவது. இது அமைந்தால் மட்டுமே தாந்திரீகத்தில் உபதேசிக்கப்படும் விடயங்களை விளங்கி கொள்ள முடியும்.
- தாந்திரீகம் சக்தியை உருமாற்றி உயர்ந்த சக்தியாக்கி வாழ்க்கைக்கு தேவையான போகத்தையும், யோகத்தையும் அடைவிக்கும்.
- பதஞ்சல யோகம் யோகம் என்பது சித்த விருத்தி நிரோதம் என்று கூறும். சித்தத்தின் விருத்தியை கட்டுப்படுத்த இரண்டு கையிறுகள் உண்டு. ஒன்று மனம், மற்றது பிராணன். இதில்பிராணனே மனதிற்கு சக்தியை கொடுத்து சித்தத்தின் விருத்தியை தூண்டுவது. இதுவே சக்தி மூலம். தாந்திரீகம் பிராணனை கட்டுப்படுத்தும் வழிகளை கூறும்.
- தாந்திரீகம் என்றால் தற்போது பலரும் எதோ காம களியாட்டம் நடாத்தும் பயிற்சி என்று நினைத்துக்கொண்டுதான் அனுகிகிரார்கள். தாந்திரீகம் மனிதநிரின் எந்த உணர்ச்சிகளையும் அடக்க, அழிக்க சொல்வதில்லை, மாறாக இயல்பாக ஏற்றுக்கொள்ள சொல்கிறது. இந்த அடிப்படையில் மனிதனது (கோபம், பொறாமை, குரோதம், காமம், மோகம், என) ஒவ்வொரு உணர்ச்சியிலும் ஏற்படும் பிராணனின் செலவை மிச்சப்படுத்தி எப்படி உயர்வாக ஆக்குவது என்ற வழிகளை சொல்லும். இந்த வழிகளில் காமத்தினை தெய்வ சக்தியாக உயர்த்துவதும் ஒரு வழியே அன்றி அது மட்டுமே தாந்திரீகம் இல்லை.
- இப்படி பிராண சக்தியை உயர்த்துவதற்குரிய அடிப்படை மனிதனது சக்தி எப்படி செலவாகிறது என்பதனை அறிதல், அதற்குரிய வழி முக்குணங்கள். முக்குணங்களில் சத்துவம் என்பது சக்தி இயல்பான இயற்கை நிலையில் இருப்பது, ராஜசம் என்பது அளவுக்கு மீறி செல்வாகுவது, தாமசம் என்பது அளவற்ற சக்தி பாவிக்காமல் தேங்கி கிடப்பது.
- ஆக மாணவனின் நிலை அறிந்து குருவானவர் அவனுக்குரிய வழிகளை உபதேசிப்பார். இயல்பான சத்துவ நிலையினை அடைந்து பிராண சக்தி சமநிலை அடைவதே தாந்திரீகத்தின் இலக்கு. குறித்த ஒரு சாதகனில் காம மையம் வேலை செய்யாமல் பிராண சக்தி அளவுக்கு அதிகமாக தேங்கி இருப்பின் அத்தகையவனுக்கு காம மையத்தை தட்டி எழுப்பும் ராஜச குண சாதனைகளை வழிகாட்டி சக்தியை செலவழித்து சமநிலைக்கு கொண்டுவரும் படி செய்வார். அதுபோல் அளவுக்கு அதிகமாக செலவழிக்கும் ராஜச குணத்தவனிற்கு பிராண செலவை குறைக்கும் வழிகள் போதிக்கப்படும்.
- இப்படி செலவாகும் பிராணனை சேமித்தால் அந்த சேமிப்பு பொக்கிஷமாக சேமிக்கப்படும் இடம் கோசங்கள் எனப்படும். இவை ஐந்து உண்டு. இவற்றையே பஞ்ச கோசங்கள் என்று கூறுவார்கள். இவற்றை தற்காலத்தில் யோகம் கற்பிப்பவர்கள் மனிதனுக்கு ஐந்து உடல் உண்டு என்றும், அவை படர்ந்து உள்ளதாகவும் கதைகூறி கற்பனை செய்ய சொல்கிறார்கள். உண்மையில் கோசம் என்றால் புதையல், பொக்கிஷம் அல்லது செல்வ சேமிப்பு என்றே அர்த்தம். உடல், மனம், பிராணன், புத்தி ஆன்மா ஆகியவற்றில் இயங்கும் பிராண சக்தியை தகுந்த சாதனைகள் மூலம் சேமித்து வைக்கும் நிலையே பஞ்ச கோசம் எனப்படும். இப்படி செமிப்பவர்களுக்கே பஞ்ச கோசம் விருத்தியாகும்.
குரு நாதர் ஆசியுடன்
குரு நாதர் ஆசியுடன்.............
இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!
இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!
ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ
ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ
ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ
ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !
ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ
ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!
ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ
இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!
மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here
2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்
நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.
அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே
உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!
ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே
இங்கே
Friday, April 24, 2015
தாந்திரீக சாதனை கற்க விரும்புபவர்களுக்கான சில அடிப்படை புரிதல்கள்
"உதவி கேட்காதவரே பலவீனமானவர்"
"உதவி கேட்காதவரே பலவீனமானவர்" முதலில் பார்க்கும்போது, உதவி கேட்பது பலவீனம் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் இதற்கு நே...
-
போகர் ஏழாயிரத்தில் சில பாடல்கள் - உரை நடையில் ஒரு வாசிப்பு ஓம் போக நாதர் பாதம் போற்றி இது போகர் ஏழாயிரத்தினை வாசித்து யோக தாந...
-
இதனுடன் தொடர்புடைய மற்றைய பகுதிகள் பகுதி - 01 பகுதி - 02 பகுதி - 03 பகுதி - 04 பகுதி - 05 பகுதி - 06 பகுதி - 07 ***************...
-
இந்த மனோன்மணி அகவல் எனது பாட்டனாரின் சித்தர் பாடல் தொகுப்பில் இருந்தது. எனது சிறுவயதில் எனது தந்தையார் கந்தர் சஷ்டி கவசம் படிப்பதை பார்த்த...
ஐயா,
ReplyDeleteநன்றி
வி.ரவீந்திரன்.
ஐயா இந்த பதிவு முன்பே படித்து இருந்தாலும் இப்போது படிக்கும் போது தான் புரிகிறது
ReplyDeleteநன்று