குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, November 10, 2023

மகாலக்ஷ்மியினை அழைப்பதற்குரிய நிபந்தனை

 

மகாலக்ஷ்மி என்பது ஒளியும், இனிமையும் கொண்ட அற்புத வடிவுடன் அழகு, இசைவு, சந்த நயம், நுண்ணிய, வளமையான அதிசய திவ்ய சம்பத்து, ஜீவனை கவர்ந்து இழுக்கும் காந்த சக்தி, உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் நளினம், ஞானமும், ஆற்றலும் மாத்திரம் அன்னையின் வெளிப்பாடு அல்ல. அதி நுண்ணிய இரகசியம் ஒன்று அவளின் இயல்பில் உள்ளது. அது இன்றேல் ஞானமும் சக்தியும் முழுமை பெறாது. பூரணம் பரிபூரணமாகாது. ஞானத்திற்கும் ஆற்றலுக்கும் மேல் என்றுமுள்ள எழிலும், தெய்வீக இரகசியங்களால் பற்ற முடியாத ஒரு இசைவு, எவராலும் தடுக்க முடியான மோகன சக்தி என்பவை உள்ளது. இதுவே உலகில் உள்ள அனைத்துப் பொருட்களையும், அணுக்களையும், செயல்களையும் படித்து, கூட்டி இணைத்து, மறைவில் நின்று தன்னுடைய லீலையை நடாத்திக்கொண்டு அவற்றை சந்தங்களாகவும், வடிவாகவும் ஆக்கிக்கொண்டு உள்ளது. இந்த சக்தியையே நாம் மகாலக்ஷ்மி என அழைக்கிறோம்.

உடல் கொண்ட ஆன்மாக்களுக்கு இவகளைவிட வசீகரமான தெய்வ சக்தி வடிவம் இல்லை. அவள் இறைவனின் இனிமையை, போதை தரும் அந்த ஜாலத்தை வீசுகிறாள். அவளருகில் இருப்பது ஒரு ஆனந்த பரவசமாகும். இதயத்தில் அவளை உணர்வது வாழ்க்கையை ஆனந்த பரவசமாக்குவதும், அற்புதமாகவும் ஆக்கும்.

வனப்பும், வசீகரமும் கதிரவனிடமிருந்து ஒளி பரவி வருவதுபோல் அவளிடமிருந்து பரவி வருகிறது. அவள் தனது அற்புத நோக்கை நாட்டுமிடமெல்லாம், புன்னகை எழிலைப் பொழியுமிடமெல்லாம் ஆன்மா பிடிபட்டு அவளுக்கே வசப்பட்டு அளவில்லாத ஆனந்தத்தில் ஆழ்த்தப்படுகிறது. அவள் கரங்களின் ஸ்பரிஸம் காந்தம் போன்றது. அவற்றின் நுண்ணிய பிரபாவம் மனதையும், உடலையும், பிராணனையும் மாசு நீக்கி நயமாக்குகிறது.

ஆயினும் இந்த மோகன சக்தியின் சாந்தித்தியத்தை தரிப்பதும், அவளது நிபந்தையை பின்பற்றுவதும் எளிதன்று, மனம், ஆன்மா ஆகியவற்றில் இசைவினையும் அழகினையும் கொண்டு வருதல்,எண்ணங்களிலும், உணர்ச்சிகளிலும் இசைவினையும் அழகினையும் கொண்டு வருதல், ஒவ்வொரு வெளிப்புறச் செயலிலும், அசைவிலும் இசைவினையும் அழகினையும் கொண்டு வருதல்,வாழ்விலும், சூழலிலும் இசைவினையும் அழகினையும் கொண்டு வருதல், இதுவே மகாலஷ்மியின் ஆற்றலை எமக்குள் அழைப்பதற்கான நிபந்தனை.

எங்கே உலக ஆந ந்த்தின் உள்ளார்ந்த சந்தங்களுக்குள் உறவு உள்ளதோ, எங்கே சர்வ ஸௌந்தர்யத்தின் அழைப்பிற்கு பதில் உள்ளதோ, எங்கே இறைவன் பால் திரும்பிய வாழ்க்கையில் இணக்கமும், ஒருமைப்பாடும், இன்ப ஓட்டமும் உள்ளதோ, அத்தூய சூழலிலேயே அவள் எழுந்தருள திருவுளம் கொள்கிறாள்.

அவலட்சணமானவை, அற்பத்தனமானவை, தரித்திரம் பிடித்தவை, கீழானவை, அழுக்கானவை, முரட்டுத்தனமானவை, பண்பு நயமற்றவை எல்லாம் அவள் வருகையைத் தடுப்பவை.

அன்பும், அழகும் இல்லாத அல்லது அவை பிறக்க விரும்பாத இட த்தில் அவள் வர விரும்புவதில்லை. அவை இழிவானவற்றுடன் கலந்து உருத்திரிந்திருந்தால் அவள் விரைவில் திரும்பி போய் விடுகிறாள். அவள் தனது செல்வ ங்களைப் பொழிய விரும்புவதில்லை.

மனித இதயங்களில் அவள் இறங்கும் போது அங்கு சுய நலம், பகை, பொறாமை, குரோதம், அசூயை, பூசல் இவை சூழ்ந்திருந்தாலோ துரோகம், பேராசை, நன்றியின்மை, மனதில் கலந்திருந்தாலோ, முரட்டு வெறியும், பண்பற்ற ஆசையும் பக்தியை மாசு படுத்தினால் அத்தகைய உள்ளங்களில் அழகும், அருளும் பொலியும் அந்த தேவி தங்குவதில்லை. ஒருவித தெய்வீக அருவெருப்புடன் விலகிச் சென்று விடுகிறாள். ஏனெனில் அவள் எவரையும் வற்புறுத்தி வரும் சக்தி அல்ல. இந்தக் கசப்பான தன்மை வெளியேறும் வரை தன்னை திரையிட்டு வைத்துக்கொண்டு காத்திருப்பாள்.

சந்நியாச வரட்சியையும், கடுமையையும் அவள் விரும்புவதில்லை. அவள் இதயத்தின் ஆழ்ந்த உணர்ச்சிகளை அடக்குவதும், ஆன்மாவின் அழகு அமிசங்களை ஒடுக்குவதும் அவளுக்கு சம்மதமில்லை. ஏனெனில் அவள் அன்பு, அழகு ஆகியவற்றின் மூலமே அவள் மனிதரை கடவுளின் செல்வாக்கின் கீழ் கொண்டு வர விரும்புகிறாள். அவளது ஆற்றலினால் வாழ்க்கை ஒரு தெய்வீக கலைச் செல்வமாக மாறுகிறது. உலகம் ஒரு திவ்யாந்த மாகிறது. உலகின் செல்வங்கள் எல்லாம் உயர்ந்த ஓரு ஒழுங்கமைப்பிற்காக ஒன்று சேர்க்கப்படுகிறது. அவளது ஐக்கிய திருஷ்டியாலும் ஆத்ம வீச்சினாலும் மிக எளிய சாதாரண பொருட்களும் அதிசயமானவை ஆகிறது.

அவளை இதயத்தில் ஏற்றால் ஞானத்தை அற்புதச் சிகரங்களுக்கு உயர்த்தி அறிவையெல்லாம் கடந்த ஆ ந ந்த பரவசத்தின் ஆழ்ந்த மறைபொருட்களையெல்லாம் ஏற்றுக்கொண்ட இதயத்திற்கு வெளிப்படுத்துகிறாள். பக்தியை தீவிர தெய்வீக வசீகரத்துடன் இணைக்கிறாள். வலிமைக்கும், சக்திக்கும் அளவுடன் இசைந்து செயற்படும் சந்த த்தைக் கற்பிக்கிறாள். சித்தியின் மீது அதை என்றுமே நிலைத்து நிற்கச் செய்யும் மோகன சக்தியை வீசுகிறாள்.

ஸ்ரீ அரவிந்தர்


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...