குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, November 08, 2023

கலைகள் மனதிற்கு கெடுதியானவையா?

    

                          இப்போது ஒரு பிரச்சனை பாடசாலை மாணவர்களுக்கான விவாதப் போட்டியில் இரண்டு சினிமா நடிகர்களில் எவர் சிறந்தவர் என்ற விவாதத்தின் தலைப்பு சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.

எந்தவொரு கலையும் எமது மனதை உயர்ந்த நிலையில் வைத்திருப்பதற்கான ஒரு தூண்டலாகும்! கவலைகளுக்கும், குழப்பத்திற்கும் உள்ளாகும் மனதை ஒரு உயர்ந்த ஆனந்த நிலைக்கு கொண்டு செல்லுவதற்கான ஒரு தூண்டலே

இசை

நாடகம்

நடனம்

சினிமா

இவை எமது மனதை ஒரு பரவச நிலைக்கு உட்படுத்தி எம்மை ஒரு அமைதி நிலைக்கு கொண்டுவரவேண்டும்.

இங்கு அந்தக்கலையின் கருவிகளான நடிகர், நடிகையர் மீது வீண் மோகம் கொள்வது ஒரு மனப் பிறழ்வு! இந்தக் கலைகள் சமூகத்தின் மனதை வசப்படுத்தி கருத்தியலைப் புகுத்த வல்லவை!

கலையின் அனுபவத்தைத் தாண்டி அந்த அனுபவத்தினைத் தரும் கருவிகளைக் கொண்டாடத் தொடங்கும் போது மனிதன் முட்டாளாகிறான்.

கலைகளில் உயர்வு நிலை கண்ட தமிழர்கள் அதன் அதியுச்ச பிறழ்வு நிலையில் இருக்கிறார்கள் என்பதை தற்போது நாம் காணக்கூடியதாக இருக்கிறது.

ஆட்டத்தைப் பாராமால் ஆடும் மங்கையில் மயங்குதலும்,

நடிகனின் வீர உணர்ச்சியை அனுபவிக்காமல் நடிகனே வீரன் என்று நம்பும் மனமும் தான் உருவாகி வருகிறது;

ஒரு நடிகனின் நடிப்பை நடிப்பின் இலக்கணத்தின் படி சரியாக நடிக்கிறாரா என்று ஆராயும் பண்பு ஆரோக்கியமானது! ஆனால் நடிகனை நடிப்பிற்கு அப்பால் சென்று நடித்த துதிபாடும் மன நிலையில் இத்தகைய நிகழ்ச்சிகளை நடாத்துவது தவறான உதாரணம்! கலைகளின் உயர்ந்த இலட்ச்சியத்திலிருந்து தாழ் நிலைக்கு கொண்டுவரும் நிலை!

இதேபோல் பட்டிமன்றங்கள் - விவாதங்கள் என்பவை எமது தர்க்க மனத்தை (logical mind) விருத்தி செய்யும் களங்கள்! ஆனால் மற்றவர் மூக்கை அறுக்க வேண்டும், வெட்டிப்பேச வேண்டும் என்ற தன்மை அதிகமாகும் போது இவை குதர்க்க மன்றங்கள் ஆகிவிடும்.

கலை மனதை, பண்பை உயர்த்த உதவும் ஒரு கருவியாக நாம் பயன்படுத்தும் போது அது எப்போதும் நன்மையானது! மனதைக் கெடுக்கும், மனத் தாழ் உணர்ச்சிக்கு கொண்டு செல்லும் போது அது தவறானது!

இதை கலைத்துறையின் அறிஞர்கள் தெளிவாக அடுத்துவரும் தலைமுறையினருக்கு கற்பிக்க வேண்டும்!

ஒரு கலைப்படைப்பு நடைபெற்ற யதார்த்த நிகழ்வினை பகிர்வதற்கான ஒரு ஊடகம், அதை உருவாக்கியவரின் உணர்ச்சிகளைப் பிரதிபலிக்கிறது, சிக்கலான ஒரு விடயத்தை எளிமையாகச் சொல்ல வருகிறது, ஒரு கருத்தியலைப் புகுத்தி எமது சமூகத்தின் நடைமுறையை மாற்ற முயல்கிறது, ஒரு நிறுவனத்தின் கருத்தினை மனதில் புகுத்துவதற்கு முயல்கிறது போன்ற தெளிவுகளை இத்தகைய பட்டிமன்ற ஒருங்கிணைப்பாளர்கள் மாணவர்களுக்கு கற்பித்து முறைப்படுத்தப்பட்ட, உயர்ந்த மனப்பாங்குடைய தன்மையில் ஆய்வுப்பட்டி மன்றங்களாக இவை நடாத்தப்பட வேண்டும்.

விவாதமன்றங்களின் அறிஞர்களாகத் திகழும் Laleesan Laleesan ஐயா, பேராசிரியர் Pirashanthan Srivaratharajan ஆகிய துறை சார் அறிஞர்களின் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

Gnanadas Kasinathar Archaren Srirangaraja Vimalathithan Vimalanathan Nalliah Kumaraguruparan Ashokbharan உங்கள் உரையாடலும் இங்கு சிந்தனையைத் தூண்டக்கூடியது.



No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...