குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, November 19, 2023

குமார தந்திரம் கூறும் ஸுப்ரமண்யரின் சோடஷ (பதினாறு) தியான ரூபங்கள் - 12 : ப்ரம்ம சாஸ்தா தியானம்

{கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, விசாகம், ஒவ்வொரு மாத சஷ்டியிலும் முருக உபாசகர்கள் தியானிக்கத் தக்க ரூபங்கள் ப்ரம்ம சாஸ்தா தியானம்}
**********************************************************************************பன்னிரண்டாவது ரூபம் ப்ரம்ம சாஸ்தா தியானம்

பிரம்மா என்பது பௌதீக உலகைப் படைக்கும் சக்தி; ஆரம்பத்தில் ஐந்து தலைகளுடன் சதாசிவருக்கு சமமான படைப்பாற்றலுடன் இருந்து வீண் ஆணவத்தினாலும் பொய்மையினாலும் காலபைரவரிடம் ஒரு தலையை இழந்து, பின்னர் பிரணவப் பொருளின் உண்மை விளக்கம் அறியாமல் சுப்பிரமணியரிடம் மாட்டிக்கொண்டு குட்டு வாங்கியவர். 

ஒவ்வொரு மனிதனிடமும் படைப்பு ஆற்றல் (creativity) அவனது மனதில் கற்பனைத் திறனாக இருக்கிறது; ஆனால் அது சிவத்தை நோக்கி இல்லாத போதும், இந்த படைப்பின் இரகசியமான பிரணவ இரகசியம் அறியாமல் இருக்கும் போது அது விகல்பம், விபர்யம் என்ற பொய்யறிவாகிப் போகிறது. இதனால் நாம் வீண் ஆணவங்களை ஏற்படுத்திக்கொண்டு துன்புறுகிறோம். 

இப்படி மனம் விகல்பம் என்ற வீண் கற்பனையும், விபர்யம் என்ற பொய்யறிவாலும் வீண் ஆணவம் கொண்டிருக்கும் போது நாம் பிரம்ம சாஸ்தா ரூபத்தினை தியானிக்க வேண்டும். சாஸ்தா என்றால் குரு, தலைவன், அரசன் என்று பொருள். நாம் வலிமையற்று, பொய்யான அறிவினால், ஆணவத்தினால் கலக்கமுறும் போது நாம் பிரம்ம சாஸ்தாவை தியானித்தால் அவர் எமக்கு சரியான வழியில் எமது படைப்பாற்றலை வழிப்படுத்துவார். 

ஆணவம் அழிக்கும் பூரண சத்துவ மூர்த்தி இவர்! 

வாமே கரே ச யுகளே வரகுண்டி கேச 

ஸவ்யேக்ஷ ஸுருத்ரமபயம் தததம் விசாகம் 

வல்யாயுதம் வனகலோசன மேக வக்த்ரம் 

வந்தாமஹே வனஜன ஸம்பவ சாஸிதாரம்

 இடது கரத்தில் வரதம், கெண்டிகையும் 

வலது கரத்தில் அபயம் அக்ஷர மாலையைத் தரித்தவரும் 

விசாகன் என்ற பெயருடையவரும் வள்ளி தேவியுடன் கூடிய, 

அலர்ந்த செந்தாமரை போன்ற கண்கள் உடையவரும் அழகிய முகமுடையவரும், 

பிரம்மாவின் ஆணவத்தைக் குட்டி தண்டித்தவருமான பிரம்ம சாஸ்தாவை வணங்குகிறேன்.



அடுத்தது வள்ளீ கல்யாண சுந்தர ஸ்வாமி தியானம்


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...