குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, November 20, 2023

குமார தந்திரம் கூறும் ஸுப்ரமண்யரின் சோடஷ (பதினாறு) தியான ரூபங்கள் - 14: பால ஸ்வாமி தியானம்

{கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, விசாகம், ஒவ்வொரு மாத சஷ்டியிலும் முருக உபாசகர்கள் தியானிக்கத் தக்க ரூபங்கள் பால ஸ்வாமி தியானம்}
______________________________________________
பதினான்காவது மூர்த்தம் பாலஸ்வாமி தியானம் 

பரம்பொருளை வாத்ஸல்யத்துடன் குழந்தையாக கருதி தியானிக்க சிறந்த வடிவம்; பூரண ஸத்வ வடிவம்! புதிதாக திருமணமாகி நற்குழந்தைகள் வேண்டுபவர்கள் உபாசிக்க வேண்டிய தியான ரூபம்.  

இன்று திருமணமாகி குழந்தைகள் இன்றி இருக்கும் பலர் உடலியல் ரீதியாக பிரச்சனை இன்றி இருந்தாலும் மனதில் உணர்ச்சியளவில் சத்துவமும், வாத்ஸல்யமும் இல்லாததால் குழந்தைப் பேறு இன்றி தவிக்கிறார்கள். அவர்கள் மன நிலையே அவர்களுக்கு குழந்தைப் பேற்றை தருவதில்லை! அவர்கள் இந்த பாலஸ்வாமியினை தியானித்து வந்தால் நிச்சயம் ஸத்புத்திரப் பேறு கிடைக்கும். 

பலருடைய திருமண உறவு எரிச்சலும், குரோதமும், சண்டையும் நிறைந்த தாமஸ வாழ்க்கையாகத்தான் இருக்கிறது; இந்த ஸ்வாமியினுடைய ரூபம் ஸத்துவ குணத்தை வளர்க்க வல்லது. 

மேலும் இந்த பாலஸ்வமியைத் தியானிக்கும் யோகி எப்போதும் மனதளவில் இளமையாக இருப்பான்! ஸ்ரீ லலிதை உபாசனையில் ஏன் பாலை அவசியமோ அதுபோன்றதே பரமேச்சுவரரை உபாசனை செய்பவர்களுக்கு பாலஸ்வாமி! எமது மனதைக் கள்ளம் கபடம் இல்லாமல் குழந்தை போல் வைத்திருக்க உதவும் உபாசனை இந்த திருவுருவம். 

தியான ஸ்லோகம் 

*****************************

பத்ம ஸவ்ய கடிஸம் யுத வாமம்

பத்ம காந்தி நிபமேக முகஞ்ச

பால விருத்திகர மீச்வர சூநும்

பால முந் நத புஜம் ப்ரணதோஸ்மி

வலது கரத்தில் தாமரையும், இடது கை இடுப்பிலுமாக வைத்துக்கொண்டு, தாமரை போன்ற செந் நிற உடல், இளைமையை அபிவிருத்தி செய்பவரும், உயர்ந்த கையை உடையவரும், பரமேஸ்வரரின் குழந்தையான பால ஸ்வாமியை நமஸ்கரிக்கிறேன்.





No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...