குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, November 26, 2023

சித்தாந்த தீக்ஷை உடையவர்களுக்கு ஆகாத உணவுப் பொருட்கள்

 

தம்பி Arunachalam Ambalam ஒரு பதிவிட்டிருந்தார்: ஆன்மீகம் என்ற பெயரில் உணவினை உயர்வு தாழ்வு கற்பிப்பது இங்கு பெரும் பிரச்சனை! உண்மையில் நாம் உடலாலும், மனதாலும் செய்யும் காரியத்திற்கு உகந்த உணவு என்பதே அடிப்படை விதி!

கிரணாகமத்தின் படி சித்தாந்த தீக்ஷை உடையவர்களுக்கு ஆகாத உணவுப் பொருட்களாக சிலதைப் பட்டியலிட்டிருந்தார்.

வெங்காயம்

வெள்ளிப்பூண்டு

சுரக்காய்

மாமிசம்

மச்சம்

இதை நாம் சரியாக அர்த்தப்படுத்திக் கொள்வதென்றால் கிரணாகமம் விதித்த வகையில் ஒருவன் தீக்ஷை பெற்று சாதனை புரிந்து அந்த ஆகமம் கூறும் உயர் சித்தி பெற விரும்புவன் மேற்குறித்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்பதாகும்! இது எல்லோருக்கும் பொதுவாகச் சொல்லப்பட்டதாகக் கருதிக்கொண்டு குழம்பக்கூடாது.

அதில் வெங்காயமும், வெள்ளிப்பூடு, சுரக்காய் மிக முக்கியமானது. பல ஆன்மீக சாதனை செய்பவர்கள், தியான மார்க்கிகள் இதை தவிர்க்க வேண்டும் என்று கூறப்பட்டாலும் இதற்குரிய காரணம் என்னவென்பது பலருக்கும் விளங்குவதில்லை.

இதை நாம் ஆயுர்வேத திரவிய குண விஞ்ஞானத்தின் மூலம் அணுகினால் இதன் விடை கிடைக்கும்.

வெங்காயம் முத்தோஷங்களில் வாதத்தையும், கபத்தையும் அதிகரிக்கும்; ஆனால் பித்தத்தைக் கூட்டாது;

இதேபோன்ற செய்கைதான் வெள்ளைப் பூடும் செய்யும்.

ஒருவன் தனது ஆன்ம சாதனையில் நீண்ட நேரம் மனதை ஒருமுகப்படுத்த அக்னியாகிய பித்தத்தின் துணை தேவை; உடலில் தேவையான அளவு அக்கினி இருந்தால்தான் ஒருவன் நீண்ட நேரம் மனதை ஒருமுகப்படுத்தி தாரணை, தியான, சமாதி நிலைக்குள் செல்ல முடியும். உடலில் கபம் அதிகமாக இருந்தால் சோம்பலும், வாதம் அதிகமாக இருந்தால் மனதிலும், உடலிலும் பதட்டம் அதிகமாக இருப்பதால் அதிக நேரம் தியானம் செய்ய முடியாமல் உடல் தடுக்கும்.

சுரக்காய் கசப்புச் சுவையுடன் உதான வாயுவைத் தூண்டக்கூடியது; இது வாந்தியை ஏற்படுத்தி ஹிருதயத்திற்கு நெருக்கத்தைக் கொடுக்க கூடியது. தியானம் செய்பவர்கள் பஞ்சப்பிராணன் களான பிராண, அபான, உதான, சமான, வியான வாயுக்களில் பிராண அபானக் கலப்பையே தமது கும்பகம், தாரணை, தியானத்தில் செய்கிறார்கள். இவை இரண்டும் கலக்கும் போது மற்றைய வாயுக்கள் அடங்கி இந்த பிராண அபானக் கலப்பிற்கு ஒத்துழைக்க வேண்டும். சுரக்காய் சாப்பிட்டு விட்டு தியானம் செய்யும் போது உதான வாயுக் கிளர்ச்சியால் நீண்ட நேரம் தியானம் செய்ய முடியாது என்பதால் இங்கு சுரக்காய் விலக்கப்பட்டிருக்கிறது.

இங்கு வாசிப்பவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும் உயர் ஆன்ம சாதனையில் குருமுகமாய் தீட்சை பெற்று தியான சித்தி, சமாதி ஸித்தி பெற விரும்புவர்களுக்கே இந்த உணவு விதிகள் எல்லாம்!

உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுபவர்கள் எதையும் அளவாக உங்கள் ஜீரண சக்திக்கு தக்க உண்ணலாம்! எந்த தீங்கும் வராது!

உடலில் பலம், காம உணர்வு விருத்தி, தோல் நோய் உள்ளவர்கள் வெங்காயம், வெள்ளைப்பூடு நன்றாகச் சேர்த்துக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...