குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, November 12, 2023

தரும வியாதன் கதையின் நீதியாக கர்ம யோக விதிகள்

 

இன்றைய கர்ம யோகவகுப்பில் தரும வியாதன் கதையின் நீதியாக கர்ம யோக விதிகள் கூறுப்பட்டிருப்பதை உரையாடினோம்.

இதில் ஒரு மாணவருக்கு எப்படி வாசுகி அம்மையாருக்கு கொங்கணவருக்கு காட்டில் நடந்த சம்பவம் தெரியவந்தது என்ற கேள்வி, அதற்கு பதில் ;

வாசுகி அம்மையாரும் தரும வியாதனும் ஆர்வத்துடனும் இதயபூர்வமாகவும் தங்கள் கடமைகளைச் செய்தார்கள். இப்படிச் செயல் புரிவதால் மனதிற்கு ஒரு நுண்மையான ஆற்றல் வாய்க்கிறது; அதன் பலனாக அவர்கள் தெளிந்த அறிவினை/ ஞானத்தினைப் பெற்றார்கள். வாழ்க்கையில் எந்த நிலையிலுள்ள கடமைகளைச் செய்தாலும், பலனில் பற்றில்லாமல் செய்தால் அது நம்மை ஆன்ம அனுபூதி என்னும் நிலைக்கு நிச்சயம் அழைத்துச் செல்லும் என்பதாகும்.

புராணங்களை கதைகளைப் எப்படிப் படிக்க வேண்டும் என்பதை நாம் இளையோருக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டும்;

கதை என்பது மனதிற்கு ஒரு மாதியுரு அறிவினை (model knowledge) இனைத் தரும் கருவிகள்; இங்கு கதாப்பாத்திரங்களை ஆராய்வதை விட குறித்த சூழலில் அந்தக் கதாப் பாத்திரங்களின் எண்ண ஓட்டம், அறிவு என்பவற்றை எமது மனதிற்கு தந்து அறிவு புகட்டுகிறது; அதேபோன்ற ஒரு சூழலில் நாம் அந்த அறிவினைப் பயன்படுத்தலாம் என்பதே எம்மிடம் புராணங்கள், இதிகாசங்கள், என்று பல்லாயிரம் கதைகள் இருப்பதன் நோக்கம்!

கதை என்பது கதை சொல்லியின் மனம் எப்படி இயங்கியது என்பதன் கோட்பாடு! இந்த அனுபவம் எமக்கு எப்படி உதவும் என்பதைப் பற்றிய சிந்தனை இருக்க வேண்டும்.

கதையால் எனக்கு என்ன பலன் என்ற சிந்தனையும் நோக்கமும் இருக்க வேண்டும்! எமது வாழ்க்கையில் இலட்சியத்திற்கு தேவையற்ற கதைகளை ஒதுக்க வேண்டும்!

விஞ் ஞானியாக வேண்டும் என்றால் நியுட்டனின், ஐன்ஸ்டீனின் கதை படிக்க வேண்டும்! கம்பராமாயணம் உதவாது!

தொழில் முனைவோன் ஆகவேண்டும் என்றால் ரத்தன் டாடா வின் கதை படிக்க வேண்டும்;

கதைகளுக்கூடாக அறிவினைப் பெறும் நோக்கம் இருக்க வேண்டும்! அதைவிட்டுவிட்டு இராமன் நல்லவனா, இராவணன் கெட்டவனா என்று கதையின் பாத்திரங்களை வைத்து வெட்டிக்குதர்க்கம் பேசுவது மனதிற்கு கிளுகிளுப்பூட்டும் நல்ல பொழுதுபோக்கு! அறிவு வளராது!

 


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...