குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, March 23, 2020

காயத்ரி ஜெப எண்ணிக்கையும் வாழ்க்கை முன்னேற்றம் பாவப்பிராயச்சித்தங்கள்

இயற்கை விதிக்கு முரணான செயல் பாவங்கள் எனப்படுகிறது. இவற்றை நாம் செய்யும் போது அது எமது மூளையில் முடிச்சுகளை உருவாக்கி சம்ஸ்காரங்கள் என்ற சித்தப்பதிவுகளை ஏற்படுத்தி விடுகிறது. இந்த சித்தப்பதிவுகள் எமது வாழ்க்கையில் துன்பத்தினைத் தந்துகொண்டு எமது முன்னேற்றத்தை அடைய விடாமல் தடுத்துக்கொண்டு இருக்கும். உயர்ந்த விடயங்களை கற்றுக்கொள்ள விடாமல் எம்மில் உணர்ச்சிக் கொந்தளிப்பினை ஏற்படுத்தி உள்ளத்தில் சம நிலை அற்ற தன்மையை ஏற்படுத்தி மனதையும் உடலையும் வருத்திக்கொண்டு இருக்கும். 

இந்த நிலவரத்திலிருந்து மீண்டு வர மிக அரிய சாதனம் காயத்ரி மந்திர அனுஷ்டானம். இந்த அனுஷ்டானத்தை தினசரி சந்தியாவந்தனம் கடமையாக இல்லாதவர்களும் குரு உபதேசம் பெற்று செய்துவரலாம். 


காயத்ரி மந்திரம் குறித்தளவு ஜெபம் பூர்த்திக்கு என்ன பலன் என்பதை சாஸ்திரப்பூர்வமாக கீழே தந்துள்ளோம். இந்த எண்ணிக்கைகள் தினசரி சந்தியா வந்தனம் செய்பவர்களுக்கோ, அல்லது அவரவர் குரு உபதேசப்படி காயத்ரி ஜெபம் தினசரி செய்பவர்களுக்கு மட்டுமே பலனளிக்கக் கூடியது. குருமுகமாக உபதேசம் கடைப்பிடிக்காமல் பிரச்சனைகளில் மாட்டிக்கொண்டவுடன் மாத்திரம் சாதனை/ஜெபம் என்று அலைந்து திரியும் கொண்ட மனமுடையவர்களுக்கு இவற்றை விட அதிக ஜெப எண்ணிக்கை தேவைப்படும். இங்கு தரப்பட்டவை சாஸ்திரப்பிரமாணம் மாத்திரமே; குருவாக்கியப்பிரமாணம் சாஸ்திரப் பிரமாணத்தை விட உயர்ந்தது என்பது மனதில் இருத்துங்கள்.

{காயத்ரி ஜெப பிரபாவம் பற்றி நண்பர் ஒருவர் கல்ப க்ரந்தங்கள், புராணங்களில் இருப்பவற்றைத் தொகுத்து தந்ததை சாதகர்களுக்காக தமிழாக்கித் தந்துள்ளோம்}

  • ஒரு கோடி ஜெபப் பூர்த்தி - மோக்ஷம்
  • லக்ஷ ஜெபப் பூர்த்தி - சொர்க்கப் பிராப்தி
  • ஐம்பதாயிரம் ஜெபம் - செல்வம் அடையவேண்டிய மனோ இச்சை பூர்த்தியாகும்.
  • ஐம்பதாயிரம் ஜெபம் -  நல்ல மனைவி/மகன்/மகள் கிடைக்க
  • ஒரு கோடி ஜெபப் பூர்த்தி - இராஜ்ய ப்ராப்தி, இன்றைய காலத்தில் அரசியலில் உயர் நிலை அல்லது வியாபார சாம்ராஜ்யம்
  • இருபத்தி ஐயாயிரம் ஜெபப் பூர்த்தி - செல்வம், உடல் நலம், ஆயுர் விருத்தி
  • இருபத்தியையாயிரம் ஜெபப்பூர்த்தி - மழை விருத்தி, தொழில் இடத்தில் செல்வாக்கு
  • ஒரு லக்ஷ ஜெபம் - உயர் பதவி பெற
  • இருபத்தியையாயிரம் ஜெபப் பூர்த்தி - உடலில் உள்ள எந்த நோயிலிருந்தும் விடுதலை
  • ஒரு கோடி ஜெபம் - பிரம்ம ஹத்தி முதலான மகாபாவங்களில் இருந்து விடுதலை. 
  • ஒரு லக்ஷ ஜெபம் - த்விஜன் (அறிவுள்ளவன்/உபதேசம் பெற்ற சாதகன்) ஆக இருந்து தங்கத்தை அபகரித்தல், மது அருந்துதல், சாஸ்திரத்தில் விதிக்கப்பட்ட பாவத்தைச் செய்திருந்தால் அதற்கான பிராயச்சித்த ஜெபம்

  • ஒரு லக்ஷ ஜெபம் - கோஹத்தி (பசுவை துன்புறுத்திய, கொன்ற) தோஷத்திற்கு
  • ஓரு லக்ஷ ஜெபம் - பெண்களை குழந்தகளைக் கொன்றவர்கள், நன்றி கெட்டவர்கள், மற்றவர் சொத்துக்களை அபகரிப்பவரர்கள் இவர்களுடன் தொடர்பினைக் கொண்டிருப்பதால் வரும் பாவத்திற்கான பிராயசித்தம். 
  • ஒரே கோத்திரத்தில் மணம் செய்வதால் ஏற்படும் பாவத்திற்கு - ஐம்பதாயிரம் ஜெபம்
  • மாற்றான் மனைவி, குடும்ப கௌரவத்தைக் கெடுத்தல், பெண்களை கொடுமைப் படுத்தல், மற்றவர் நிலத்தை அபகரித்தல், துன்புறுத்தல், வீடுகளைக் கொளுத்துதல் போன்ற பாவப் பிராயச்சித்த ஜெப எண்ணிக்கை - இருபத்தியையாயிரம்.
  • தவறான நபர்களிடமிருந்து நன்  கொடை பெறுதல், எடுத்துக்கொண்ட உறுதிமொழியில் இருந்து தவறுதல், நித்திய கர்மம், கோயில் பணிகளில் இருந்து தவறுதலுக்கு பிராயச்சித்த ஜெப எண்ணிக்கை எட்டாயிரம். 
  • வேதத்தில் பிராயச்சித்த கர்மங்களாகக் கூறப்படுவதற்கு மாற்றாக கீழ்வரும் எண்ணிக்கை காயத்ரி ஜெபம் பயன்படுத்தலாம். 
  • தினசரி சந்தியா வந்தனம் செய்யாதவனது தர்ப்பணங்களை எந்த தேவதைகளோ, பித்ருக்களோ ஏற்றுக்கொள்வதில்லை. 
  • ஒரு தடவை காயத்ரி ஜெபிப்பது  அன்றைய பகலில் செய்த பாவங்களை அனைத்தையும் இல்லாதாக்கும். 
  • பத்துத் தடவை காயத்ரி ஜெபிப்பது அன்றைய நாளின் இரவு பகல் இரு நேரத்திலும் செய்த பாவங்களை நீக்கும். 
  • நூறு தடவை காயத்ரி ஜெபிப்பது ஒரு மாதத்தில் செய்த பாவங்களை அனைத்தையும் நீக்கும். 
  • ஆயிரம் தடவை காயத்ரி ஜெபிப்பது ஒருவருட பாவங்களை அனைத்தையும் நீக்கும். 
  • ஒரு லக்ஷ ஜெப பூர்த்தி அந்தப்பிறப்பில் செய்யப்பட்ட பாவங்கள் அனைத்தையும் நீக்கும்
  • பத்து லக்ஷ ஜெபப் பூர்த்தி எல்லாப்பிறப்புகளிலும் செய்யப்பட்ட பாவங்களையும் நீக்கும்.
Translation of this post Gayatri mantra prabhAvam 

ஆகவே சாதகர்களே நாம் ஏன் குறித்தளவு எண்ணிக்கை தினசரி சாதனை செய்து வாருங்கள் என்று கூறுகிறோம் என்பதன் அர்த்தம் விளங்கியிருக்கும்.

நாம் இந்தப்பிறப்பில் செய்த பாவங்களை வயதின் ஆயிரம் மடங்குகளில் காயத்ரி அனுஷ்டானம் செய்து நீக்கி விடலாம். உதாரணமாக உங்கள் வாழ்க்கையில் பிரச்சனை இந்தப்பிறப்பில் செய்த பாவங்களால் வருவதாக இருந்தால், உங்கள் வயது 30 என்று கொண்டால் முப்பதாயிரம் ஜெபம் தாண்டும் போது உங்கள் வாழ்க்கை மாறுதலடையும்.

அப்படி மாறுதல் அடையவில்லை என்றால் ஜெபத்தைத் தொடர ஐம்பதாயிரம் அடையும் போது உங்கள் வாழ்க்கை மன அமைதியுடையதாக இருக்கும். அதிக பாவங்களைச் செய்தவராக இருப்பின் அவற்றிற்கு பிராயச்சித்த ஜெபங்களை செய்தாகவேண்டும். இப்படி ஒரு லக்ஷ ஜெபம் பூர்த்தியாகும் போது உங்கள் பாவ சம்ஸ்காரங்கள் தீர்ந்து புது வழி பிறக்கும்.



No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பதஞ்சலி யோக சூத்திர வகுப்பு – 02

    15-ஜனவரி-2024 பதஞ்சலி யோக சூத்திர வகுப்பு – 02 இன்று நீங்கள் கற்றுக்கொண்ட பதஞ்சலி சூத்திரங்கள்: சூத்திரம் – 03: ததா த்ரஷ்டு: ஸ்வ...