குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, March 10, 2020

நோய் வருதலுக்கான சில சூக்ஷ்ம காரணங்கள்

நோய் வருதலுக்கான சில சூக்ஷ்ம காரணங்கள்;

ஸ்ரீ அன்னையின் உரையாடலிலிருந்து சில பகுதிகள்; இது இன்றைய காலப்பகுதிக்குப் பொருத்தமானது. 

{இந்த உரையாடல் யோக சாதனை செய்யும், மனம், உணர்வு, பிராணன் என்பவற்றைப் பற்றிய அடிப்படைப் புரிதல் உள்ள சாதகர்களுக்கானது; ஆகவே யோகம் பயிலாதவர்கள் இதை பெரிதாக எடுத்துக்கொண்டு குழம்பத் தேவையில்லை;}

நோய்வருதலுக்குக் இரண்டு காரணிகள் கருத்தில் கொள்ளப்படுகிறது. வெளியிலிருந்து உங்களைப் பாதிக்கும் காரணியும் உங்கள் அகத்திலிருந்து வரும் காரணியும். 

உங்களது அகக்காரணியின் ஒருபகுதி நோய் வருதலுக்குக் காரணியாக இருக்கிறது, அந்தப்பகுதி உங்களுக்கான பாதுகாப்பினை நீக்குகிறது. பாதுகாப்புத் தரும் காரணியை எதிர்த்து ஒதுக்குகிறது. சில சமயம் அந்தக்காரணியே நோயினை உங்களுக்குள் வரவேற்கிறது. இத்தகைய சிறு அசைவு உங்களில் (உங்கள் உணர்வு, மனதிற்குள்) இருந்தாலே அவை நோயினை வரவேற்று உங்களைத் தாக்கி விடும். 

இதைச் சொன்ன பின்னர் சாதகர் பாதுகாப்புத் தரும் காரணி, பாதுகாப்பு நீக்கப்படுகிறது என்பதன் பொருள் என்ன என்று ஸ்ரீ அன்னையிடம் கேட்கப்படுகிறது. 

யோகத்தில் நாம் உயர்ந்த உணர்வு நிலை (Higher consciousness state) நிலையில் இறைசக்தியுடன் தொடர்பு கொள்கிறோம். அப்போது அந்த உணர்வு நிலை எம்மைச்சூழ இத்தகைய எதிர்சக்திகள் எம்மைத் தாக்காது ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்குகிறது. ஆனால் சாதகன் தனது சந்தேகபுத்தியாலோ, பயத்தாலோ தனக்கு ஆபத்து நேர்ந்து விடுமோ என்றோ, அல்லது அதீத நம்பிக்கையால் தனக்கு எதுவும் நடந்து விடாது என்று உணர்வைத் தளர விட்டாலோ அந்தப்பாதுகாப்பு வளையத்தை நாம் நீக்குகிறோம். என்கிறார். 

இன்றைய நிலையில் இந்த முகநூல் நன்றாகவே அனைவரையும் பயத்தில் ஆழ்த்தி பிராண நிலையில் வலுவிழக்கச் செய்து நோயைப் பெரியளவில் உள்வாங்கும் காரணியாக இருக்கப்போகிறது என்பது சிறப்பம்சம். 

The Mother, [*Questions and Answers (1953): 22 July 1953


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...