குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, March 19, 2020

கொள்ளை நோய்த் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள எளிய மனச்சாதனை - சாதகர்களுக்கு மட்டும்

தற்போதைய கொள்ளை நோய் நிலவரத்தில் குரு அகத்திய காயத்ரி சாதனா செய்யக்கூடியவர்களுக்கு உதவக்கூடிய சில பிரயோக முறைகளை இங்கு கூறுகிறோம்; பலர் வீட்டிலிருந்து வேலை செய்வதால் இந்த சாதனையை தாராளமாகச் செய்யலாம்.

முதலில் உங்கள் தினசரி குரு அகத்திய காயத்ரி சாதனாவை செய்து முடித்துவிடுங்கள். புதியவர்களாக இருந்தால் சாதனை முறையினை இங்கு பாருங்கள்.

அதன் பின்னர் கண்களை மூடி தேவி பேரொளி வடிவமாக இருப்பதை மனக்கண்ணில் பார்த்து தீர்க்க சுவாசத்துடன் சில நிமிடங்கள் அந்த ஒளியை மனக்கண்ணில் பார்த்து அந்த ஒளி மெதுவாக உங்கள் தலையுச்சியினூடாக முள்ளந்தண்டினூடாகப் பரவி மூலாதாரம் வரை பரவுவதாக பாவியுங்கள்.  இப்படிப் பரவிய ஒளி ஒவ்வொரு ஆதாரங்களினூடாகவும் உடலில் உள்ள நரம்புக்கலங்களில் பரவுவதாக பாவிக்க வேண்டும்.

தலையில் மூளையில் உள்ள ஒவ்வொரு கலங்களும் இந்த ஒளி பரவி ஒவ்வொரு கலத்தையும் ஆரோக்கியமாக்குகிறது என்று மனதினால் காணவேண்டும்.

பின்னர்

  1. கண்கள்
  2. மூக்கு, சுவாசக்குழாய், சுவாசப்பைக்குள் இந்த ஒளி பரவி இரத்தத்தில் கலப்பதை பாவிக்க வேண்டும். 
  3. வாய், நாக்கு, உணவுக்குழாய், இரைப்பை, கல்லீரல், மண்ணீரல், சதையி, சிறுகுடல், பெருங்குடல், குதம் வரை பரவி அனைத்துக்கும் இந்த ஒளி பரவி அவற்றை உயிர்ப்படையச் செய்வதாக பாவிக்க வேண்டும். 
  4. இப்படி தலை முதல் காலை வரை ஒவ்வொரு உறுப்பின் வெளிப்புறத்தையும் கவனித்து அவற்றில் இந்த ஒளி நிரம்பி வெளியேறுவதாகப் பாவிக்க வேண்டும். 
  5. இறுதியாக எமது உடலில் இருந்து இந்த ஒளி நிரம்பி வெளியாகி எம்மை சூழ ஒரு ஒளி வட்டத்தை உருவாக்குவதாக பாவிக்க வேண்டும். 
  6. இந்த ஒளி வட்டத்திற்குள் எந்த தீய சக்தியும் வரமுடியாது. 
  7. எம்முடன் தொடர்பு கொள்ளும் எல்லோரும் இந்த சக்தியைப் பெற வேண்டும் என்று சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும். 
  8. ஒவ்வொரு உறுப்புகளில் எமது மனக்கண் பார்வையைச் செலுத்தும் போதும் ஒரு தடவை காயத்ரி மந்திரத்தை மனதில் ஜெபிக்க வேண்டும்.
இப்படி எமக்கு பாவனையைச் செய்த பின்னர் எமது குடும்ப உறுப்பினர்களுக்கு {தாய், தந்தை, மனைவி/கணவன், பிள்ளைகளுக்கு} எமது மனகண்ணில் இதோபோல் பாவனையை  நாம் செய்யலாம். அவர்களைத் தவிர்ந்து வேறு எவருக்கும் இதைச் செய்ய முயல வேண்டாம். 

இந்த அறிவுறுத்தலை பலதடவை படித்து நன்கு புரிந்த பின்னர் செய்ய முயற்சிக்க வேண்டும். சந்தேகங்கள் இருப்பின் எம்முடன் உரையாட வேண்டுகிறோம். 


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...