குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, January 09, 2018

கேள்வி பதில் - காயத்ரி மந்திரமும் சித்தர்களும்

குருவே சரணம்!!
காயத்ரி மந்திரம் ரிஷி பரம்பரைய மட்டும் சார்ந்ததாசித்தர்கள்  இதனை எவ்வாறு எடுத்தரைக்கின்றனர்?? போகர், திருமூலர், அகத்தியர் இதன் பெருமையை பற்றி பரிபாடல்கள்  எழுதி உள்ளனரா??
வணக்கத்துடன்
கிருஷ்ணா
சென்னை

அன்பரே, வரைவிலக்கணங்கள் மனதின் பிடியில் சிக்கிய அறிவாளிகள் சித்தர்கள், ரிஷிகள் என்று பிரித்துக்கொண்டு தமக்கு ஏற்றவாறு விளக்கம் கூறித்திரிகிறார்கள்.

சித்தர் என்ற சொல் பாரத பாரம்பரியத்தில் பௌத்த மஹாயான சித்தர்கள், நாத சம்பிரதாய சித்தர்கள், தமிழ் சித்தர்கள் ஆகிய மூன்று குழுக்களில் பாவிக்கப்படுகிறது. இந்த மூன்று குழுக்களும் உடல் தாண்டிய உயர்ந்த ஞான வாழ்க்கை இருக்கிறது என்றும், அதற்கு மனிதப்பிறவியால் மட்டும் முடியும் என்ற உண்மையையும் கூறி வைத்துள்ளார்கள்.

ரிஷி என்பதன் பொருளும் த்ரஸ் என்ற சமஸ்க்ருத அடிச்சொல்லில் இருந்து வந்தது. திரஸ் என்பது திருஷ்டி அல்லது பார்வை என்று பொருள். அதாவது தமது தபஸால் பிரபஞ்சத்தின் அதிர்வை, நாதத்தை பார்த்து (கேட்டு அல்ல) அதை மனிதன் தனது வாயாலும் மனதாலும் உச்சரிக்க கூடிய வார்த்தைகளில் கொண்டு வந்தவர்களை ரிஷி என்று அழைப்பது பாரத ஞானிகளின் மரபு.

ஆகவே எவர் மந்திரங்களை பிரபஞ்ச நாத மூலத்தில் உணர்ந்து அதை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரும் தொழில் நுட்பம் தெரிந்தவரோ அவர் ரிஷி எனப்படுவார்.

தமிழ் சித்தர்கள் பலர் தமது மாணவர்களுக்கு தமிழிலேயே மந்திரங்களை உருவாக்கி தந்துள்ளார்கள். இத்தகைய சித்தர்கள் ரிஷித்தன்மை வாய்ந்தவர்கள்.

இப்போது நூற்களில் இருக்கிறதா என்று ஆதாரம் கேட்கும் அன்பர்களுக்கு நாம் உரைப்பது எமது மரபில் குருவாக்கிய பிரமாணமே நூற்களை விட உயர்ந்தது. இந்த அடிப்படையில் எமது அகத்தியர் குருமரபில் காயத்ரி சாதனை சித்தர் மரபிற்கு உட்பட்டது. இதுபற்றி விவாதிப்பதில் ஏதும் அர்த்தம் இருப்பதாக தெரியவில்லை.

எனினும் போகர் 7000 இல் 74 வது பாடலில் “தேயென்ற இருப்பத்தி நாலாய் நின்ற காயத்ரி தனைச் செபித்து” என்ற வார்த்தைகளாலும், 

அகத்தியர் பூரண சூத்திரம் 216 என்ற நூலில் 80வது பாடலில் “உரந்து வரும் காயத்ரி” என்று சிவயோகம் செய்து கற்பமுண்ணும் சாதகன் தினசரி காய்த்ரி ஜெபம் செய்ய வேண்டும் என்ற கட்டாயத்தை கூறுகிறார்.

திருமந்திரம் 994 பாடலிலும் இருபத்து நாலு எழுத்து என்று காயத்ரி மந்திரம் குறிப்பிடப்ப்டுகிறது.
ஆறு எழுத்தால் ஆறு சமயங்கள்
ஆறுக்கு நாலே இருபத்து நாலு என்பர்
சாவித்திரியில் தலை எழுத்து ஒன்று உள
பேதிக்க வல்லார் பிறவி அற்றார்களே.


ஆகவே தற்காலத்தில் பலரும் தமது மனம்போன போக்கில் கூறித்திரியும் வியாக்கியானங்களை கேட்டு மனம் குழம்பாமல் தைரியமாக நாம் கூறும் இந்த குரு – அகத்திய – காயத்ரி சாதனா உபதேசம் சித்தர் வழியை சேர்ந்தது என்பதை உறுதியாக புரிந்து கொண்டு, சாதனையில் ஈடுபட்டு நீங்கள் உலக வாழ்க்கைக்கும், ஆன்ம வாழ்க்கைக்கும் தேவையான இன்பங்களை பெற பிரார்த்திக்கிறோம். 

காயத்ரி சாதனை இல்லாமல் எவரும் பரிணாமத்தில் உயர முடியாது என்பது சித்தர்களதும், ரிஷி பரம்பரையினதும் துணிபு. 

5 comments:

  1. காயத்திரி சாதனையின் மகத்துவத்தையும் மேன்மையையும் குறித்து அறிய தந்தமைக்கு நன்றி!!

    ReplyDelete
  2. அருமையான விளக்கம் . நன்றி.

    ReplyDelete
  3. மிக அற்புதமான விளக்கம் ஐயா...

    மிக்க நன்றி

    ReplyDelete
  4. அருமை !!! நன்றி குருவே!

    ReplyDelete
  5. நன்றி ஐயா.

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...