குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, March 28, 2015

சித்தர் யோக ஆசிரியர் யோகி வே. இராஜா கிருஷ்ண மூர்த்தி ஐயா அவர்களின் ஆசியும் வீட்டில் வாசியோக பாடங்களும்

பேராசிரியர், முனைவர் யோகி வே. இராஜா கிருஷ்ண மூர்த்தி ஐயா அவர்கள் சித்தர் வழியில் உயர்ந்த சாதனையான சிவயோகத்தில் இருந்து காயசித்தி, யோக சித்தி, வேதை சித்தி பெற்றவர். சித்தர் மருத்துவம், கற்பம், யோக சாதனை என்பவற்றை  விஞ்ஞான ரீதியாக விளக்கும் ஆற்றல் உள்ளவர். ஐயா விவசாய விஞ்ஞானத்தில் (வேளாண்மை) முனைவர் பட்டம் பெற்ற ஒய்வு பேராசிரியர்.

சித்தர்களின் வாசி யோகத்தினை தற்காலத்து மக்கள் விளங்கிக்கொள்ளும் படி யாரையும் பயமுறுத்தாமல், குழப்பாமல் எளிய பாடங்களாக எழுதி அனைவரும் பயன்படும்படி வெளியுட்டுள்ளார். தனது அனுபவத்துக்கு வராத எதையும் வெளிப்படையாக தனக்கு தெரியாது என்று கூறும் வெளிப்படையான மனமுடையவர். அதேபோல் தான் அறிந்த அனுபவித்த விடையத்தை அதீத கற்பனைகளை சேர்க்காமல் உறுதியுடன் உரைப்பவர்.

தன்னுடன் உரையாடும் அனைவருக்கும் “இறை அருள் பெறுக! தான் அவன் ஆகுக” என்ற சித்தர்களின் உயர்ந்த இலட்சியத்தை ஆசியாக கூறி அவர்கள் மனதில் உயர்ந்த ஆன்ம இலட்சியத்தை விதைப்பவர்!  

ஐயாவுடன் எனக்கு தொடர்பை ஏற்படுத்தி தந்தது அகத்தியர் ஞானம் முப்பது, பல்லாண்டுகளாக குருநாதர் ஆணையில் நாம் கற்று வரும் அகத்தியர் ஞானத்திற்கு ஐயா சுருக்க பொருள் கூறியிருக்கிறார். அதே நூலை நாம் இங்கு ஒவ்வொரு திங்கட்கிழமையும் மாலையில் ஒருமணிநேரம் கற்று வருகிறோம். தற்போது குருநாதர் அருளால் முழுமயான விரிவான சித்த வித்யா உரையினை எழுதி வருகிறோம். அதற்கு ஐயா மதிப்புரை தருவதாக ஆசி கூறியிருக்கிறார். 

ஐயாவுடன் சித்தர் தத்துவங்கள், விஞ்ஞானம் பற்றி உரையாடும்போதெல்லாம் எனது எழுத்துக்களையும், வலைத்தளத்தையும் பற்றி கூறுவதற்கு மனம் ஒப்புவதில்லை. பெரியவரான அவரது அறிவிற்கும் ஞானத்திற்கும் முன்னால் சிறியவனான எனது எழுத்துக்கள் எம்மாத்திரம்! இந்த நிலையில் ஐயா எனது வலைத்தளத்தை பார்த்தபின்னர் அவராக தெரிவித்த வாழ்த்துக்களும், ஆசிகளும் என்னை ஆனந்தத்தின் எல்லைக்கே கொண்டு சென்றது.

அவரது வாழ்த்தும் ஆசிகளும் வருமாறு;
“ஆன்மிக தகவல் , சித்தர்கள் பற்றிய செய்திகள் ஜோதிடம் , வைத்தியம் ஆகி அனைத்தும் குவித்து வைத்துள்ள பெரும் பொக்கிஷம் இந்த வலை பூ . அருமையான பதிவுகள் .  அறிய செய்திகள். நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் . தங்களுக்கும் தங்களை சரந்தவர்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் . எல்ல வளமும் நலமும் கிடைக்க இறை அருள் புரிக . !!!
அன்பான ஆசியுடன் 
வே. இராஜா கிருஷ்ண மூர்த்தி 


ஐயாவின் வாசி யோக பாடங்களை இந்த தளத்தில் படிக்கலாம் ; http://www.siddharyogam.com/

யோக சாதனை, சித்தர் நூற்கள் படிப்பவர்களுக்கு பல அரிய அனுபவ உண்மைகளை விளக்கும் தளம்.

எமது வாசகர்கள் அனைவரும் வாசித்து பயன் பெறுக!

1 comment:

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...