குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, March 15, 2015

காயத்ரி சாதனை வழிகாட்டி


எமது தளத்தினை படித்து காயத்ரி ஜெபம் செய்பவர்களுக்கும், அதிலிருந்து உயர்ந்த சாதனை செய்து மன, பிராண, ஆன்ம சக்திகளை அதிகரித்துக்கொள்ள விரும்புபவர்களுக்கும் இதனை எப்படி தொடங்குவது என்பதில் பல்வேறு மனத்தடங்கல்கள் இருக்கும். அவற்றில் இருந்து வெளியே வந்து தெய்வான்மீக பாதையில் எப்படி முன்னேறுவது என்பது பற்றி இந்த பதிவு படிமுறைகளாக வழிகாட்டும். மேலும் உங்களை நீங்கள் எந்த நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு எப்படி தயாற்படுத்திக்கொள்வதுன் என்பது பற்றி விளக்கத்தினையும் தரும்.
  1. மந்திர ஜெபம் என்பது மூடநம்பிக்கையில் அல்லது ஏதோவொரு நம்பிக்கையில் கண்ணை மூடிக்கொண்டு இயந்திர தனமாக உச்சரிப்பதில்லை. அது பிராணன் – மனம் – உடல் ஆகிய மூன்றையும் இணைத்து சக்தி பெறும் முறை.
  2. பிராணனை இணைக்க மூச்சினை மெதுவாக, ஆழமாக உள்ளிழுத்து வெளிவிட தெரிந்திருக்க வேண்டும். நிறுத்துவது அவசியமில்லை. நாடிசுத்தி தெரிந்தவர்களாக இருப்பின் குறைந்தது ஐந்து வட்டமாவது செய்துவிட்டு ஜெபத்தினை ஆரம்பிக்கவேண்டும்.
  3. மனதிற்கு காயத்ரி போன்ற மந்திரமானால் மந்திரத்தின் பொருளை கிரகித்து வைத்திருக்க வேண்டும். ஜெபத்தின் போது மனம் அலையும் வேளைகளில் மந்திரத்தின் பொருளை சிந்தித்து நிறுத்த வேண்டும்.
  4. உடல் வசதியாக இருக்கவேண்டும். ஜெபத்தின் போது முள்ளந்தண்டு, தலை நேராக இருக்கவேண்டும் என்பதே நிபந்தனை. அதற்காக உங்களால் முடியாத பத்மாசனம் போன்ற கடின ஆசனங்கள் கைவந்தபின்னரே ஜெபத்தினை ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்து விடாதீர்கள். உங்களுக்கு வசதியாக பஞ்சு மெத்தையில் அமர்ந்து சுகாசனம் இட்டு செய்யலாம்.அல்லது முதுகினை நேராக வைத்து இருக்க கூடியவாறு நாற்காலியில் இருந்தும் செய்யலாம்.
  5. இப்படி மேலே கூறிய விடயங்களை ஒழுங்கு படுத்தி கொண்டு எவ்வளவு ஜெபம் செய்வது என்பதனை துணிந்துகொள்ள வேண்டும். அந்த எண்ணிக்கை உங்களின் நாளாந்த வாழ்க்கை நடவடிக்கைகளை செய்துகொண்டு நிம்மதியாக சாதனை செய்ய கூடிய அளவாக இருக்கும். ஆரம்பத்தில் 09 என்று தொடங்கி ஒருவாரத்தில்  18 ஆக அதிகரித்து மூன்றாவது வாரத்தில்  27 ஆக்கி நான்காவது வாரத்தில் 54 எண்ணிக்கை கொண்டு வரவேண்டும். ஐந்தாவது வாரத்தில் 108 ஜெபம் செய்யும் அளவிற்கு வந்தால் ஒரு சாதகன் என்ற நிலையினை அடைந்து விட்டீர்கள் என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள்.
  6. மேலேகூரியபடி செய்துகொண்டு வருப்ம்போது காயத்ரி சித்த சாதனையினையும் சேர்த்து செய்து வரவேண்டும்.
  7. இப்படி உங்களை தாயார்படுத்திய பினனர் லகு அனுஷ்டானம் எனும் ஒன்பது நாட்களில் 24000 ஜெபிக்கும் சாதனையும், பூரண அனுஷ்டானம் எனும் நாற்பது நாட்களில் 125,000 ஜெபிக்கும் சாதனையும் விருப்பமுள்ளவர்கள் முயற்சிக்கலாம். இத்தகைய அனுஷ்டானங்கள் ஒன்று இரண்டு முடித்தபின்னர் தினசரி 108 ஜெபம் செய்து வருவார்களே ஆனால் அவர்களுடைய மன, பிராண சக்திகள் பலப்பட்டு தமது வாழ்க்கை பிரச்சனைகளை எதிர்கொண்டு வெற்றி பெறும் வலிமையினை பெறுவார்கள். 

2 comments:

  1. ஐயா,
    நன்றி
    வி.ரவீந்திரன்.

    ReplyDelete
  2. குருவிற்கு வணக்கம் நான் சிவ.வள்ளியப்பன் gs 123 தினசரி குரு நாமாவளி 9முறையும் காயத்திரி மந்திரம் 108 முறை மட்டுமே செய்து வருகிறேன் இது சரிதானா அய்யா

    நன்றி
    சிவ.வள்ளியப்பன்

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

"உதவி கேட்காதவரே பலவீனமானவர்"

  "உதவி கேட்காதவரே பலவீனமானவர்" முதலில் பார்க்கும்போது, உதவி கேட்பது பலவீனம் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் இதற்கு நே...