குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, March 07, 2015

காயத்ரி மந்திர சாதனையும் ஆயுர்வேத வைத்திய சித்தியும்


ஆயுர்வேத வைத்தியர் ஒருவருக்கு நோயினை நிதானிக்கும் நுண்புத்தியும், சிகிச்சி, மருந்தினை முடிவு செய்யும் ஆற்றலும் அவசியம். இது வெறும் நூற்களை கற்பதாலோ பட்டங்களை பெறுவதாலோ வருவதில்லை. மனமும், பிராணனும் உடலில் எப்படி செயற்படுகிறது என்பதனை அறியும் ஆற்றல் இருக்க வேண்டும். இதனை தருவது காயத்ரி மந்திர சாதனை. இதற்கு சான்றாக இருப்பது மாதவ நிதானம்.
ஆயுர்வேதத்தில் இன்றும் நோயினை நிதானிப்பதற்கு மூல நூலாக இருப்பது மாதவ நிதானமாகும். இதனை எழுதியவர் மாதவாச்சாரியார் எனும் பிருந்தாவனத்தில் வசித்த ஞானி ஒருவராகும். இவர் இந்த நூலினை எழுதுவதற்கு முன்னர் பன்னிரண்டு வருடம் காயத்ரி உபாசனையினை செய்து வந்தார். ஆனால் காயத்ரி தேவியின் தரிசனத்தை பெறமுடியாமல் மனம் விரக்தியாகி ஒரு தாந்திரீகரின் ஆலோசனையின் பேரில் பைரவ உபாசனையினை தொடங்கினார். பைரவ உபாசனை தொடங்கி ஒருவருடத்திற்குள் பைரவரின் தரிசனத்தை பெற்றுவிட்டார். பைரவர் மாதவாச்சாரியாரின் முன்னால் தோன்றாமல் பின்புறமாக நின்றுகொண்டு அவரது விருப்பத்தினை கேட்கும்படி கூறினார். ஆச்சரியமடைந்த மாதவாச்சாரியார் தனக்கு முன்னால் வந்து தரிசனம் தரும்படி கூற, பைரவர் “காயத்ரி சக்தியால் ஒளி நிரம்பிய சாதகன் முன்னால் நான் நிற்க முடியாது” என்று பைரவர் கூற, ஆச்சரியமடைந்த மாதவாச்சாரியார் காயத்ரி சாதானையின் மகிமையினை கேட்க, பைரவர் காயத்ரி சாதனை சகல பாபங்களையும் சித்தத்தில் இருந்து அழித்து சாதகனுக்கு இறுதியில் இறை ஞானத்தை கொடுக்கும் என்று கூறி மீண்டும் காயத்ரி சாதனையினை தொடங்கும்படி கூறி மறைந்தார். இதன் படி மாதவாச்சாரியார் மீண்டும் தனது காயத்ரி சாதனையினை தோடங்கி அதன் பயனாக விழிப்படைந்த ஞானத்தின் மூலம் மாதவநிதானத்தை எழுதினார்.

ஆயுர்வேத சித்த வைத்தியர்கள் காயத்ரி சாதனையின் மூலம் என்ன பலனை பெறலாம் என்பதனை இந்த வரலாற்று உதாரணம் விளக்குகிறது.

காயத்ரி சாதனை செய்யும் வைத்தியர்கள் தமது நுண் புத்தி விழிப்படைந்து, நோயினை சரியாக நிதானித்து தீர்க்கும் வல்லமை பெறுவார்கள் என்பது அனுபவம்! 

1 comment:

  1. ஐயா,
    வாசித்தறிந்தேன்
    நன்றி
    வி.ரவீந்திரன்.

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...