குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, January 05, 2012

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா - அகஸ்திய மகரிஷியின் ஞானப்பாடலின் சித்த வித்யா விளக்கம்


அகஸ்திய மகரிஷியின் ஞானப்பாடல் கீழ்வருமாறு, 

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே

பொதுவாக இந்தப் பாடலை வைத்துக்கொண்டு அகஸ்திய மகரிஷியே சொல்லிவிட்டார், மனம் செம்மையாக இருந்தால் மந்திரமும் ஜெபிக்கத்தேவையில்லை, பிரணாயாமம் செய்யத்தெவையில்லை என வாதிடுவோரும், பொருள் கொள்வோரும் உள்ளனர், ஏன் சில காலங்களுக்கு முன் நானும் அப்படித்தான் நினைத்திருந்தேன். அப்படியானால் எல்லா நூற்களிலும் என் மந்திரங்களும் யோக சாதனைகளும் கூறி உள்ளார்கள்?

இந்தப்பாடலை நேற்றுக்கண்ணுற்றப்போது அதனை வாசிக்கும் போது மனதில் கீழ்வருமாறு பொருள் தோன்றியது. 

மனது செம்மையாக முதலில் மந்திரம் ஜெபி!அப்படி மனது செம்மையான பின்பு பின்பு மந்திரம் செபிக்க வேண்டாம்,அந்த நிலையில் அசபையான மந்திரம் தானகவே ஜெபிக்கப்படும். 

அடுத்து மனது செம்மையாக அதன்பின் வாயுவை உயர்த்தும் பிராணாயாமத்தினை செய்,இதன் மூலம்  மனமது செம்மையானால் வாயுவை உயர்த்தும் பயிற்சியை நீ தொடர்ந்து செய்யத்தேவை இல்லை,தானாகவே மூச்சு கட்டுப்படும். 

அடுத்து மனது செம்மையாக்க வாசியாகிய பிராணனை ஆறாதாரங்களில் நிறுத்தப்பழகு அதன்பின் நீ மனமது செம்மையாக‌ வாசியை உன் முயற்சியால்  நிறுத்த வேண்டா,ஆதாரங்களில் தானாகவே வாசியாகிய பிராணன் நிலைப்படும். 

இவ்வளவற்றையும் நீ செய்து உனது மனம் செம்மையானால் உன்னிடமுள்ள மந்திரங்கள் எல்லாம் செம்மைதான். அதாவது சித்தி பெற்ற நீ சொல்லும் சொற்கள் எல்லாம் மந்திரமாக மாறும். 

ஆக இந்தப்பாடலிலேயே சித்த சாதனையின் படிமுறைகளையும், செய்முறைகளையும் பரிபாஷையாக சொல்லியுள்ளார் குருதேவர்! 

எப்படியெனில் ஒரு தந்தை மகனிற்கு லௌகீக ஒழுக்கத்தினை, வாழ்க்கையில் முன்னேற போதிக்கும் போது கூறும் பாணி எப்படி இருக்கும்?

"மகனே உனது படிப்பை முடித்தபின்பு நீ படிப்பைப் பற்றி சிந்திக்க வேண்டியதில்லை, நீ கற்ற கல்வி உனக்கு நல்ல தொழிலைத் தேடித்தரும், தொழில் கிடைத்த பின்பு அதனை ஒழுங்காக செய்தால் பதவியுயர்வு தேடி வரும்,அப்போது நீ தொழிலைப்பற்றி சிந்திக்கத்தேவையில்லை,பதவி வந்தால் செல்வாக்கும், பணமும் தானக வரும், அவை வந்தால் உலக‌இன்பம் தானாக வரும், அந்த நிலையில் 

உலகவின்பம் உண்டெனில் கற்க வேண்டா
உலகவின்பம் உண்டெனில் தொழிலும் வேண்டா
உலகவின்பம் உண்டெனில் பதவியும் வேண்டா
உலகவின்பம் உண்டெனில் அனைத்தும் உண்டே"

ஏனெனில் நீ ஒழுங்காக கற்றாலே இவை அனைத்தும் உனக்கு ஒழுங்காக முறையாக  கிடைக்கும்"

எனக்கூறுவது போல் சித்த வித்தை கற்கும் மாணவனிற்கு ஞானத்தந்தை அகஸ்தியர் கூறுகிறார்;

"மகனே ஞானம் பெற உன் மனம் செம்மையாக வேண்டும், அதற்கு நீ முதலில் மந்திரம் செபிக்கவேண்டும், பின் உனது மூச்சினால் பிராணனை கட்டுப்படுத்தும் சாதனையினை ஒழுங்காக செய்யவேண்டும், பிராணபலம் நன்கு பெற்றபின்பு வாசியினை சூஷ்ம உடலிலுள்ள ஆதாரங்களில் நிறுத்துவதற்கு பழகவேண்டும், இவற்றை எல்லாம் ஒழுங்காக செய்த நிலையில் உனது மனம் செம்மையான நிலையின் பின் ,

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே

ஏனெனில் அனைத்தும் உன் முயற்சியில்லாமலே தானாக நடக்கும் என்பதால்! என கூறியிருக்கிறார். 

இறுதியாக இந்த புரிதல்  இலக்கண ரீதியில்  சரியா பிழையா எனத்தெரியவில்லை, ஆனால் அனுபவ ரீதியில் சரியானதே, 

குருவைப்பணிந்து அவர் பாதத்தில் சமர்ப்பித்து இதனை பதிகிறேன். இந்த புரிதலால் பலன் இருப்பின் பயன் பெற்றுக்கொள்ளுங்கள்! 

ஓம் அகஸ்திய மாமகரிஷி குரவே நமஹ!
சத் குரு பாதம் போற்றி!


3 comments:

  1. மனமது செம்மையாகும் வரை எல்லாம் தேவை.,செம்மையானால் இவைகள் எல்லாம் இயல்பாகிவிடும்.

    தொடருங்கள்....

    வாழ்த்துகளுடன்

    ReplyDelete
  2. நல்ல கருத்துடைய விளக்கம். நம் சித்தர்கள் பாடல்களின் பல பொருட்கள் நமக்கு பக்குவம் வந்த பிறகுதான் ஓரளவுக்காவது விளங்குகிறது..

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete
  3. அய்யா சிறு வயதில் இருந்து ஓடும் மூச்சு காற்றை ஏன் குழப்ப வேண்டும். மனம் எங்கே உள்ளது என்று கண்டு பிடியுங்கள்.... பின்பு மனதை செம்மை படுத்த வழி என்ன என்று சித்தர்கள் பாடல்கள் மூலம் நாம் அறியலாம். சும்மா இருந்து சுகம் பெறுவது எக்காலம். என்றும் ஒரு சித்தர் பாடியுள்ளார்.

    சும்மா இருப்பது எப்படி என்று நல்ல ஒரு சற்குருவாய் நாடுவது நலம்.

    Please visit: www.vallalyaar.com

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...