குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, January 16, 2012

சித்த வித்யா பாடங்கள் 06: மனதினை சுத்தி செய்யும் பயிற்சி முறை


இன்றைய யோகவகுப்புகள் அனைத்தும் மனதினை கட்டுப்படுத்தும் முறையினை சொல்லித்தருவதாகவும், உயர்ந்த தியானப்பயிற்சிகளை சொல்லித்தருவதாகவும் கூறிவருகின்றன. எப்படி இருப்பினும் பட்டம் பெறவேண்டுமென்றால் முதலாம் வகுப்பிலிருந்து ஒழுங்காக கற்று உயர் வகுப்புகள் தேறிய பின்னரே பல்கலைக்கழகம் செல்லமுடியும் என்பதுபோல் உயர்ந்த யோகப்பயீற்சிகள், தியானம் செய்வதற்கு முன்னர் அடிப்படை பயிற்சிகள் கட்டாயம் செய்யப்படவேண்டியவை என்பதனை அனேகமாக யோகம் பயில்பவர்கள், தியானம் பயில்பவர்கள் பறந்து விடுகின்றனர். ஒரு வீட்டிற்கு குடிபோகவேண்டுமென்றால் முதலில் வீட்டினை சுத்தப்படுத்தி வெள்ளையடித்து அழகு படுத்துவதுபோல் சித்த வித்தைக்கு அடிப்படையான மனதிற்கும் இவ்வாறனதொரு சுத்தி செய்யும், ஒழுங்க்குபடுத்தும் படிமுறை அவசியமாகும். இது இல்லாமல் எந்தவொரு மனப்பயிற்சியினையும் செய்ய ஆரம்பிப்பது தகுந்த ப்லனை தராது, ஏன் தெய்வ வழிபாட்டின் மூலம் பயன் பெறவேண்டும் என நினைப்பவர்கள் கூட இங்கு கூறப்படும் பயிற்சியினை செய்து வந்தால் துரிதமாக பலன் காணலாம். 

மனதினை சுத்தி செய்வது என்பது மனதில் எழும் உணர்ச்சிகளை உத்வேகங்களை கட்டுப்படுத்தி மனதை பயன் தரும் நேர் எண்ணங்களை (Positive thoughts) உருவாக்க செய்யப்படும் பயிற்சியாகும். பொதுவாக நம்மில் பலர் ஒரு விடயத்தினை தெரிய ஆரம்ப படிமுறையான கேள்வி கேட்கும் மேல்மனதை பழக்கப்படுத்திக்கொள்வதால் எப்போது நேர்மறை எண்ணங்களை (Negative thoughts) உருவாக்க பழகி விடுகிறோம், உதாரணமாக எமது மனம் நம்பினால் மூட நம்பிக்கையாக நம்பும், அல்லது சந்தேகப்பட்டால் முழுமையாக சந்தேகிக்கும், ஆனாம் நேர் எண்ணங்கள் என்பது சரியான விதத்தில் ஒரு விடயத்தினை ஆராய்ந்து, அது சரிவருமா இல்லையா என்பதனை துணிந்து, வரும் இடர்களை எதிர்பார்ப்புடன் சமாளித்து, அதன் பின் எந்த பின்வாங்கலும் இன்றி செய்துமுடிப்பது. ஆனால் மனம் வலிமையற்று இருக்கும் போது எப்போது துன்பமாகவும் எதிர்மறையாகவுமே எண்ணும். 

இந்த பயிற்சியினை செய்துவருவதன் மூலம் மனம் நேர் எண்ணங்களை உருவாக்குவதற்கு பழக்கப்படும். இதனால் மனம் சரியான விதத்தில் இயங்கி உங்களுக்கு காரிய வெற்றியினைத் தரும்.

பயிற்சி நிபந்தனைகள்
  • பயிற்சியினை உண்மையில் பலன் காணவேண்டும் என்ற சிரத்தையுடன் செய்யவேண்டும், 
  • தினசரி காலை மாலை குறித்த நேரத்தினை ஒதுக்கிகொண்டு அதே நேரத்தில் தொடர்ந்து செய்து வரவேண்டும்.
  • இடமும் ஒரே இடமாயிருத்தல் நன்று. 
  • பலன் தெரிவதற்கு குறைந்தது மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக பயிற்சிக்கவும், அதன் பின்பும் அனுதினம் உங்கள் சாதனையுடன், வழிபாட்டுடன் செய்துவரலாம். 

பயிற்சி:
காலை கிழக்கு திசை நோக்கியும், மாலை மேற்கு நோக்கியும் பார்த்து அமைதியாக உட்கார்ந்து கொள்ளவும். கால்களை மடித்து உட்காரக்கூடியவர்கள் சுகாசனம், பத்மாசனம், சித்தாசனம் இவற்றில் அமர்ந்து கொள்ளலாம், முடியாதவர்கள் சௌகரியமாக உட்கரக்கூடிய நாற்காலியிம் முதுதண்டு நேராக இருக்க கூடியவாறு அமர்ந்துகொள்ளவும். பிராணாயாமம் தெரிந்தவர்கள் சில முறை செய்துகொள்ளலாம், மற்றையவர்கள் மெதுவாக ஆழமான மூச்சு சிலதடவைகள் உள் இழுத்து வெளிவிட்டு தளர்ச்சியாக அமர்ந்து கொள்ளவும். பின்னர் (காலையிலாயின்) கிழக்கு திசையினை நோக்கி அமர்ந்து கொண்டு கண்களை மூடி கீழ்வரும் வாக்கியங்களை மனதில் உச்சரித்துக்கொண்டு, உங்கள் மூளையிலிருந்து உருவாகும் எண்ண அலைகள் கிழக்கு திசை பூராகவும் பரவுவதாக மனதில் பார்க்கவும், இவ்வாறு ஐந்து நிமிடங்கள் செய்தபின்பு, தெற்கு திசை நோக்கி திரும்பி ஐந்து நிமிடங்கள் மேற்கூறிய பாவனையினை செய்யவும், அதன்பின் மேற்கு, வடக்கு திசைகள் நோக்கியும் செய்யவும். மாலையில் மேற்கு தொடங்கி, வடக்கு, கிழக்கு, தெற்காக செய்து முடிக்கவும். 

பயிற்சியின் போது கூறவேண்டிய வாக்கியம்: 
"கிழக்கு திசையில் (மற்றைய திசைகளுக்கு அதன்படி மாற்றிக்கொள்ளவும்) உள்ள மனிதர்கள், ஜீவராசிகள், உயிரினங்கள், அனைத்தும் எப்போதும் நல்ல ஆரோக்கியத்துடனும், இன்பமாகவும் இருக்க வேண்டும், கிழக்கு திசை எப்போதும் நலமாக இருக்கட்டும்" 

இந்த பயிற்சி செய்யும் போது மனம் முழுமையாக விழிப்புணர்வுடன் குறித்த திசையில் ஒன்றி மனதாலோ, அல்லது வாயினாலோ கூறலாம்.

பலன்கள்
தொடர்ச்சியான பயிற்சியால் மூன்றுமாதங்களில் பலன் தெரியும், கீழ்வரும் அறிகுறிகள் மூலம் மனம் பலமடைந்து சுத்தியாகியுள்ளது என்பதனை அறிந்து கொள்ளலாம்
  • முன்னர் உங்களுக்கு இருந்து தீய உணர்வுகள் தற்போது அடிக்கடி மனதில் தோன்றுவது மறைந்திருக்கும் அல்லது குறைந்திருக்கும். 
  • அவற்றை தூண்டும் சந்தர்ப்பங்கள் சூழ் நிலைகள் ஏற்பட்டபோதும் அவை மனதில் குறித்த உணர்ச்சிகளை தூண்டியிருக்காது. 
  • வெறுப்புள்ள நபர்களை காணும்போது மனதில் அந்த உணர்ச்சி தோன்றாதிருத்தல். 
  • மனதில் அன்பு, பாசம், கருணை, இரக்கம் போன்ற உணர்வுகள் தோன்றுதல். 

இவற்றின் மூலம் உங்களது மனம் சுத்தியடைந்துள்ளதை அறிந்து கொள்ளலாம். இதன் பின் நீங்கள் செய்யும் எந்த சித்த வித்தை, மனப்பயிற்சிகளும் வெற்றியளிக்கும்.

முயற்சித்து பலன் பெறுங்க்கள்.

ஸ்த்குரு பாதம் போற்றி!


4 comments:

  1. மிக எளிய, அற்புதமான பயிற்சியும் பிரார்த்தனையும்..

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    ReplyDelete
  2. நல்ல பதிவு.
    நன்றி.

    ReplyDelete
  3. miga arumaiyana pathivu nantri ...

    ReplyDelete
  4. Dear sir,

    Very nice I do follow.
    Thank you

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...