குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, October 29, 2018

தீபாவளி ஸ்பெஷல்: ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வரர் அருளிய மகாலக்ஷ்மி தத்துவம்




குரு நாதரின் உரையில் கற்ற படி மகாலக்ஷ்மி அருள் தேவைப்படுவதன் காரணங்களை நிரற்படுத்தியுள்ளோம்.


1. தேவர்கள், மனிதர்கள், சித்தர்கள், யோகிகள் என அனைவரது குறிக்கோளும் “இன்பத்தை அனுபவித்தல்” என்பதே. 

2. தியாகம், தானம், ஆன்மீக பயிற்சி, உழைப்பு, வியாபாரம் என்ற எல்லா முயற்சிகளும் இன்பத்தை அடைவதற்கான முயற்சிகளே. 

3. தெய்வ வழிபாடு செய்வது, யோக சாதனை செய்வதும் இன்பத்தை அடையவே. 

4. ஆன்மாக்கள் தமது உண்மை உருவில் இன்பமே வடிவானவர்களாக இருந்தாலும், மாயையின் தொடர்பால், தன்னிலை மறைய, தன்னைப்பற்றியிருக்கும், கவசங்களால் வெளிப்படாமல் உறைந்திருக்கும் இன்பத்தை வெளிப்படுத்தி அனுபவிக்க முயலும் போராட்டமே இந்த உயிர்வாழ்க்கை. 

5. மண்ணுலக மக்கள் பெறும் இன்பத்தை விட அதிக இன்பத்தைபெறும் தேவர்கள் கூட அதனிலும் மேலான இன்பத்தை அன்பவிக்க பலவித முயற் சிகள் செய்வத வண்ணமே உள்ளனர். 

6. உயிர் வாழ்க்கையின் குறிக்கோள் இன்பமயமான வாழ்க்கையை பெறுதல். 

7. இப்படி இன்ப மயமான வாழ்க்கையை குறுகிய காலத்திற்குள் பெறுவதற்காக அறியாமையில் பாப காரியங்களை செய்து அந்த சிறிய இன்ப அனுபவத்திற்காக பின்னர் பெரும் துன்ப சுழலில் உழலுபவர்கள் பலர். 

8. இன்பம்தான் குறிக்கோள் என்று தெரிந்தும் அதைப்பெற என்ன செய்யவேண்டு என்று தெரியாமல் எதையாவது செய்து பின்னர் துன்பத்தில் உழலுபவர்கள் அனேகர். 

9. கர்ம வினைகளில் உழன்று விதியின் கைப்பாவையாக செயற்படும் மனிதன் தனது கர்ம வினைகளுக்குட்பட்ட மனம் சொல்லும் படி நடந்து இன்பமடைய முடியாது என்பது வெளிப்படையான உண்மை. 

10. சாதாரண மனிதன் விதியின் விளையாட்டில் கைப்பொம்மைதான். அவனால் துன்பத்திலிருந்து தனியாக மேலேறி வரமுடியாது. 

11. மனிதன் தனது சொந்த முயற்சியால் நிலையான இன்ப நிலையை அடைய முடியாது. அதற்கு அவனிலும் மேம்பட்ட உயர்ந்த தெய்வ சக்தி இருத்தல் வேண்டும் 

12. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொன்று இன்பத்தை தருவதாக இருக்கும்; அழகு, ஆரோக்கியம், பலம், செல்வம், நன்மக்கள், வீடு, வாசல், கீழ்ப்படிதலுள்ள மனைவி, பசுக்கள், வாகனம் போன்ற செல்வங்கள் இவற்றுள் அடங்கும். 

13. இவற்றை பெறுவதற்கு மனிதனில் ஒருவகை தெய்வ சக்தி அவனில் செயற்பட வேண்டும். 

14. இப்படி சகல சம்பத்துகளையும் மனிதனுக்கு அளிக்கவல்ல தெய்வ சக்தியையே நாம் “ஸ்ரீ மகாலக்ஷ்மி” என்று அழைக்கிறோம். 

15. லக்ஷ்மி என்ற சொல்லுக்கே இன்பம் சந்தோஷம் என்று பொருள்.

மேற்கூறிய 15 குறிப்புகளும் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வரரால் உபதேசிக்கப்பட்ட மகா லக்ஷ்மி தத்துவத்தின் சுருக்கமாகும்.
இந்த தத்துவத்தை எம்மில் செயற்படுத்துவதே ஸ்ரீ மகாலக்ஷ்மி சாதனா ஆகும்.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...