குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, October 15, 2018

தாமரை கூறும் வாழ்க்கை தத்துவம்

இந்தப்படம் காலி நகரத்தில் உள்ள புத்த விகாரை ஒன்றில் எடுக்கப்பட்டது.
Image may contain: flower, plant and nature
வீட்டில் தாமரை வளர்க்க என்று கிழங்குடன் எடுத்து வந்து ஒரு சீமெந்து தொட்டியில் போட்டு சில வாரங்களுக்கு முன்னர் வளர்க்க ஆரம்பித்தேன். இரண்டு வாரம் சென்று பார்க்கும்போது இலைகள் கருகி, தாமரை இலைகள் சுருங்கி விட்டிருந்து. எடுத்துப்பார்க்கும் போது வேர்கள் கிழங்களில் பாசி படர்ந்து மூடியிருந்தது. இதுவே அதன் இறப்பிற்கு காரணமாயிருந்தது.
இங்கு பதிவிட்டிருக்கும் படம் அளவான களியும் மண்ணும் சேர்ந்த சேற்றுடன், அளவான நீர் விடப்பட்ட சீமெந்து தொட்டியில் வளர்க்கப்பட்டிருந்தது. மூன்றடிகளுக்கு மேல் இலைகள் செழித்து அழகிய தாமரை மலர்ந்திருந்தது.
இரண்டையும் பார்த்து சிந்தித்த போது உதித்த சிந்தனை;
தாமரை ஞானத்தின் குறியீடு, இந்தியத்தத்துவ மரபில் தாமரை என்பது உயர்ந்த ஞானத்தின் குறியீடு. இந்த தாமாரை மலர்வதற்கு குளம் என்ற அமைப்பும், அதனுள் நீரும், சேறும் அளவாக இருந்தால் தாமரை செழித்து வளர்கிறது.
அதுபோல் உடல் என்ற தொட்டியில் உலக வாழ்க்கை என்ற சேற்றில் நிலைகொண்டு, பிராணன் அல்லது உயிர் சக்தியின் துணைகொண்டு வாழ்வின் அனுபவத்தை வளர்த்தால் ஞானம் என்ற தாமரை மலர்கிறது.
எனது தொட்டியில் தாமரை பாசி படர்ந்து இறக்க காரணம் மண்ணும் களியும் போடாதது, இதுபோலவே இன்று பலரும் உயர்ந்த விஷயத்தைப்பெற உலகை விட்டு ஓடவேண்டும் என்று நினைத்து மிதக்கும்போது பாசி பிடித்து இறந்து விடுகிறார்கள்.
ஆக சேற்றில் இருந்துதான் செந்தாமரை மலர்கிறது,
துன்பம் நிறைந்த உலகிலிருந்துதான் இன்பம் மலர்கிறது, 
சிறிய இந்த உடலில்தான் இறை சக்தி வசிக்கிறது!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...