குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, October 28, 2018

ஹடயோகிகளுக்கு காகபுஜண்டர் கூறும் எச்சரிக்கை

ஹடயோகிகளுக்கு காகபுஜண்டர் கூறும் எச்சரிக்கை

பாரப்பா தன்மயத்தை அறியாமல்
பக்தியுடன் ஹடயோகம் செய்வான் பாவி
வீரப்பா மூச்சடக்கி செவி வாய் மூடி
வேகமுடன் பூரிக்கில் மேனி தன்னில்
சாரப்பா மூலமதில் சொருகிக் கொண்டு
தலைவலித்து காதடைத்து முகம் கோணி
நேரப்பா கண்தெறித்து மதிகலங்கும்
நேர்மை கெட்ட ஹடயோகம் தள்ளு தள்ளே"

இதம் பொருளறிவதற்கும் முதல் வரியை சரியாக புரிந்து கொள்வது அவசியமானது.

இன்று பலர் உடல் நோய் தீர பிரணாயாமம் பழகுகிறார்கள். உண்மையில் யோக நூற்களில் கூறப்படும் பிரணாயாமம் உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்காக கூறப்பட்டதல்ல. அவை உயிரை ஒளியாக்கி அம்ருதத்துவம் பெறுவதற்காக உடலை பக்குவப்படுத்தும் மிக நுட்பமான இரகசியங்கள். இதைச் செய்வதற்கு ஒருவன் தன்னை பற்றி தான் ஆக்கப்பட்டுள்ள தத்துவங்கள் பற்றி தெளிவாக புரிந்துகொண்டிருக்க வேண்டும். அப்படி தனது உடலையும், உடலை ஆளும் சூக்ஷ்ம கருவிகளையும் தெளிவாக புரிந்து கொள்ளாமல் உடலை வளைக்கும் ஹடயோகத்தை செய்து நன்மை பெறலாம் என்ற அறியாமையில் எவராவது ஹடயோகம் செய்தால் அதனால் நடக்கு விளைவை இந்தப் பாடல் சொல்லுகிறது.

மனதினை சரியான இயம நியமத்தில் இருத்தாமல், சுத்தி செய்யாமல், மூச்சை பூரித்து கும்பித்தால், மனம் சுத்தி பெறாத காரணத்தால் மூலதாரத்தின் பிராணன் இறுகி உடல் மனக்கோளாறுகள் உண்டாகும் என்பதை விளக்கிறார்.

பிரணாயாமம், ஹடயோகம் செய்கிறோம் என்று மனக்கொந்தளிப்பு கூடி வாழ்க்கை சம நிலை அற்றுப்போகும்.

எமது அனுபவத்தில் வாசியோகம், ஹடயோகம் செய்கிறோம் என்று இப்படி துன்பப்பட்டவர்களை நிறையவே கண்டிருக்கிறோம்.

ஆக இந்த சாதனைகள் செய்ய ஆர்வமுள்ளவர்கள் தகுந்த குருவின் மூலம் கற்றுக்கொண்டு செய்யவேண்டும்

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...