குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, October 15, 2018

சித்த வித்யா குருமண்டலத்தின் ஸ்ரீ காயத்ரி உபாசனா பத்ததி - 01


இதுவரை காலமும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசப்படி தினசரி ஜெப சாதனை செய்து வந்தவர்கள் உபாசனை எனும் படியிற்குள் நுழையலாம். இதுவரை செய்து வந்த ஜெபசாதனை மனதினை ஒழுங்குபடுத்தி ஒரு ஒழுக்கத்தில் கொண்டுவருவதற்குரிய ஒரு பயிற்சியாக செயற்பட்டிருக்கும்.

நாம் ஏன் காயத்ரி சாதனை செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு சுருக்கமான பதிலாக வாழ்வினை ஒழுங்கு படுத்தி சரியான இலட்சியத்தில் நிறுத்தி இந்த வாழ்வை இன்பமயமாக மாற்றி வாழ்வில் இறுதி இலக்கான இறையை எம்மில் காணல் என்பதை அடைவதற்குரிய பயிற்சிதான் காயத்ரி சாதனை.
இந்த நோக்கத்தை சாதிப்பதற்கு உலக வாழ்க்கையுடன் இருந்து அனுபவத்தைப் பெற்று அந்த அனுபவத்தில் மயங்கிடாமல் அறிவின் துணை கொண்டு ஞானமாக்க அன்னை காயத்ரியின் பேரொளி எமக்கு துணை புரியும். இந்தப்பேரொளியை எமது மனம், உடல், பிராணன், குடும்ப வாழ்க்கை, சமூக வாழ்க்கை, உலக வாழ்க்கை ஆகியவற்றில் கொண்டுவரும் முயற்சியே காயத்ரி சாதனை.

இதன் முதற்படியாக குறித்தளவு காலம் குரு-அகத்திய-காயத்ரி சாதனையை செய்துவரும்படி கூறுகிறோம். இப்படி செய்துவருவதால் உங்கள் உடல், மனம், புத்திகளில் அடுத்த நிலைகளை புரிந்து கொள்வதற்குரிய பக்குவம், தன்மை மனதிலும், புத்தியிலும் ஏற்படும். மேலும் தொடர்ச்சியாக செய்துவரும்போது உங்கள் உடல், மனம், குடும்ப வாழ்க்கை என்பவை ஒரு ஒழுங்கிற்குள் வருவதை அவதானிக்கலாம்.

பலசாதகர்கள் ஜெப எண்ணிக்கையில் தமது பக்குவத்தை நிர்ணயிக்க முயல்கிறார்கள். இது தவறான எண்ணம்; அதிக எண்ணிக்கை ஜெபம் செய்வதால் தாம் அதிக முன்னேற்றம் அடைந்தவர்கள் எனக்கருதுவது முற்றிலும் தவறான எண்ணம். ஆன்ம முன்னேற்றம் என்பது அடிப்படையில் பண்பு மாற்றம்.  நாம் முன்னேறி இருக்கிறோம் என்பது எமது குணங்களும், பண்புகளும் செயல்களும் மாறி இருப்பதைக் கொண்டே அறியலாம். குருவிற்கு அருகில் இருப்பதாலோ, சாதனா தொடர்பான அதிக விஷ்யங்களை அறிந்திருப்பதாலோ, அதிக எண்ணிக்கை காயத்ரி ஜெபம் செய்திருப்பதாலோ ஒருவர் ஆன்ம முன்னேற்றம் பெறுவதில்லை. ஒருவர் பக்கும் பெற அதிக எண்ணிக்கை ஜெபம் செய்ய வேண்டி இருந்தால் அவரது கடன் பாக்கி அதிகமாக இருக்கிறது என்பதுதான் பொருள்.

அடுத்து நாம் ஆன்ம முன்னேற்றம் பெற்றுவிட்டோம் என்பதை குருவிடமோ, எவரிடமோ சான்று பெறவேண்டிய அவசியம் இல்லை. அது மற்றவர்களுக்கு விளம்பரப்படுத்தி தம்மை உயர்வாக காட்ட வேண்டிய வியாபார உத்தி இல்லை. நாம் உண்மையில் ஆன்ம முன்னேற்றம் பெற அந்த பண்பு எம்மைச் சூழ ஒரு காந்தமாக சூழந்து எம்மைச் சுற்றியுள்ளவர்களை உயர்த்தும்.  எவருக்கும் நாம் ஆன்ம முன்னேற்றம் அடைந்து வருகிறோம் என்று வாயால் சொல்லி விளங்கப்படுத்த தேவையில்லாமல் போகும்.

ஆக இப்படி ஒருவரின் ஆன்ம முன்னேற்றத்திற்கு துணைபுரியும் சாதனங்களே இந்த சாதனை, உபாசனை எல்லாம். இந்த நூலில் காயத்ரி உபாசனையினைப்பற்றி கூறுவோம்.

உபாசனை என்றவுடன் பலரும் பூஜையும் தியானமும் என்று நினைத்துக்கொள்கிறார்கள். உபாசனை என்ற சமஸ்க்ருத சொல்லின் பொருள் உப + ஆசனம் = அருகில் அமருதல் என்று பொருள்படும். ஆக நாம் ஒரு தெய்வத்தை உபாசிக்கிறோம் என்றால் அந்த தெய்வத்திற்கு அருகில் அமர்கிறோம் என்று பொருள்.  பொதுவாக ஒரு கம்பனியில் தலமை நிர்வாகிக்கு அருகில் அமர்ந்து செயல்புரியும் நிலை பெறவேண்டும் என்றால் அதற்குரிய தகுதிகளும், செயல்திறனும் இருந்தால் மட்டுமே அந்த வாய்ப்பினைப் பெறமுடியும் என்ற நிலை இருக்கும்போது தெய்வ சக்தியின் அருகில் அமர வேண்டுமானால் எமக்கு அதற்கான தகுதி இருக்க வேண்டும் அல்லவா? அதுவும் உலகின், அறிவின், பிராணனின் தாயாகிய காயத்ரியிற்கு அருகில் இருக்க வேண்டுமென்றால் அந்ததகுதி கட்டாயம் இருக்க வேண்டுமன்றோ?

சரி இனி எமது உதாரணத்திற்கு வருவோம், கம்பனியின் தலமை நிர்வாகியுடன் வேலை செய்ய, உதவி செய்ய எமக்கு விருப்பம், ஆனால் அதற்குரிய போதிய அனுபவமும், திறனும் எம்மிடம் இல்லை. எனினும் எனது ஆர்வமும், உத்வேகமும் உண்மையானது என்று தெரிந்த தலமை நிர்வாகி என்ன செய்வார், சரி உன்னை நான் எனது தற்காலிக உதவியாளனாக சேர்த்துக்கொள்கிறேன், வேலையை கற்றுக்கொள், குறித்த காலத்திற்குள் தகுந்த பண்பும், திறனும் வந்தால் உன்னை நிரந்தரமாக பதவியுயர்வு தருகிறேன் என்று சொல்லி பயிற்சிக்காலம் தருவார்கள் அல்லவா? இதைப்போன்றதே நாம் இப்போது கற்கப்போகும் ஸ்ரீ காயத்ரி உபாசனா பத்ததி.

அன்னை ஸ்ரீ காயத்ரியின் பண்பினை, ஆற்றலை, அருளை எம்மில் ஈர்த்து வளர்க்க நாம் பக்குவப்பட வேண்டும். அதற்கான பக்குவத்தை அவளைத்தவிர வேறு எவரிடமும் நாம் பெற முடியாது. ஆகவே எமது இந்த உலகவாழ்க்கையில் எம்மை துன்பத்தில் ஆழ்த்தும், புலன் களையும், அதன் இன்பங்களையும் அவளிடம் சமர்ப்பித்து அதை தெய்வத்தன்மை ஆக்கிக்கொள்ளும் பயிற்சியே காயத்ரி உபாசனை.

ஒரு விதத்தில் தற்காலத்தில் ஆளுமைத்திறன் வளர்ச்சி (Personality development) என்று சொல்லப்படுவதன் மிக உயர்ந்த வடிவம்தான் உபாசனை. ஒருவனுடைய ஆளுமை வளர்ச்சி என்பது ஒருவன் தனது வாழ்வை பார்க்கும் மனப்பாங்கு (Attitude) சார்ந்தது. அவன் தனது வாழ்க்கையில் எதுவெல்லாம் தாக்கம் புரிகிறது, தன்மீது தாக்கம் புரியும் காரணிகளை அனவது மனம் எப்படி ஏற்றுக்கொள்ளுகிறது. எப்படி எதிர்க்கிறது? எந்தக்காரணிகளை அவன் மதிப்பீடாக கொள்கிறான் என்பதைப் பொறுத்து அவனது வாழ்வின் இன்ப துன்பங்கள் தீர்மானிக்கப்படுகிறது.

வாழ்வின் பாகங்களை தெய்வத்தின் வெளிப்பாடாக பார்க்க பழகிக்கொண்டவனது வாழ்க்கை இன்பமானதாகவும், வாழ்வின் பாகங்களை துன்பமும் தீமையும் நிறைந்ததாக பார்க்க பழகிக்கொண்டவனது வாழ்க்கை துன்பமானதாகவும் மாறுகிறது. ஒவ்வொன்றின் மீதும் எத்தகைய உணர்ச்சி வெளிப்பாட்டை காட்டுகிறான் எனபதைப்பொறுத்து அவனது ஆளுமைத்திறன் வளர்ச்சி பெறுகிறது.

இந்த அடிப்படையில் வாழ்க்கையின் தெய்வீக பாகங்களை பார்க்க மனதை பழக்கும் ஒரு ஆளுமைத்திறன் விருத்தியே உபாசனை.

ஒருவன் தனது உபாசனையின் ஆரம்பத்தில் தான் உபாசிக்கும் தெய்வத்தின் பண்புகளை தனது மனதில் இருத்தி நினைவு படுத்த முயற்சித்து, பின்னர் நீண்டகாலப் பயிற்சியில் அந்தப்பண்புகளை தனது வாழ்வில் செயல்படுத்தும் போது அவனது வாழ்க்கை தெய்வீகம் நிறைந்ததாகிறது.

எமது சித்த வித்யா குருமண்டலம் கற்பிக்கும் காயத்ரி உபாசனையில் மொத்தமாக  50 படிமுறைகள் உள்ளன. இந்த 50 படிமுறைகளையும் கீழ்வரும் பெரும் பிரிவுகளாக பகுக்கலாம்
  1. தெய்வசக்தியை எம்முடன் இணைக்கும் சித்த வித்யா குருமண்டல வணக்கம்
  2. எமது சாதனையின் நோக்கத்தை உறுதிப்படுத்தும் ஸ்ரீ காயத்ரி சங்கல்பம்
  3. தெய்வசக்தியை உடலில் இருத்தும் நியாசம்
  4. பிராணனை சரி செய்யும் தீர்க்க சுவாசம், கும்பகப்பிரணாயாமம்
  5. தெய்வப்பண்புகளை எம்மில் விழிப்பிக்கும் பூஜை
  6. தெய்வ சக்தியை எம்மிலும் சூழலியும் விழிப்பிக்கும் யக்ஞம்
  7. செய்த பூஜையினது யக்ஞத்தினது பலனை எம்மில் இருத்தும் துதி, பிரார்த்தனை, காயத்ரி சித்த சாதனை.
  8. மனம் குவிந்து தெய்வப்பிராணனை ஏற்கும் பிராணாயாமம்
  9. தியானம்
  10. இறுதியாக எமது செயலில் இருந்த குற்றங்குறைகளை பொறுத்து எமக்கு நன்மையை மட்டும் வருவிக்கும் பிரார்த்தனைகள். 



அடுத்து வரும் அத்தியாயங்களில் ஒவ்வொரு படிகளினது நோக்கம், பயிற்சிக்கும் முறை என்பவற்றைப் பற்றி தெளிவான விளக்கங்களை பார்ப்போம்.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...