குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, March 02, 2018

மேலைத்தேய மருத்துவமும் கீழைத்தேய {சித்த, ஆயுவேத, சீன} மருத்துவ தத்துவம் - ஒரு ஒப்பீடு


மேலைத்தேய மருத்துவத்தில் நோய் என்று வைத்தியரிடம் சென்றால் உடனடியாக அவரது உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, எந்தப்பாகம் நோயுற்று உள்ளதோ அந்தப்பாகத்தில் நோயிற்கான வெளிப்பாடு காணப்படுகிறதா என்று ஆராய்ந்து உடனடியாக அந்த குறிகுணத்திற்கான "காரணம்" நீக்கப்படும். உதாரணமாக தலைவலி என்று சென்றால் உடனடியாக தலை CT Scan எடுக்கப்பட்டு, அதன் முடிவுகளை ஆராய்ந்து, தலையில் கட்டி இருந்தால் அதை நீக்குவதற்கு அறுவை சிகிச்சை செய்யப்படும்.
இதுவே கீழைத்தேய மருத்துவரிடம் (சித்த, ஆயுர்வேத, சீன) சென்றால் அவர் கண்கள், கை, அவரில் குரலில் என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது, மன நிலை எப்படி உள்ளது, என உடலின் முழுமையான நிலையும், ஆரோக்கியமும் எப்படி இருக்கிறது என்பதை அவதானிப்பார்.
இந்த இரு முறைகளும் நோயை தீர்ப்பதில் சிகிச்சையின் முடிவில் சிறந்த முறைகளாகவே காணப்படுகிறது. ஆனால் எதிர் எதிர் திசைகளில் பயணிக்கும் முறைகள்.
மேலைத்தேய மருத்துவத்தில் இலக்கு நோயினை உடனடியாக தீர்த்தல்.
கீழைத்தேய மருத்தவத்தின் இலக்கு உடலை ஆரோக்கியமாக நீண்டகாலம் எப்படி வைத்திருத்தல்.
மேலைத்தேய மருத்துவத்தில் உடலிற்கு உயிர்தருவது எது? நோயை குணமாக்கும் காரணிகள் எவை என்பது பற்றி எந்த கவனமும் எடுக்கப்படுவதில்லை. இன்னொரு வகையில் கூறுவதானால் உடலிற்கு ஆதாரமான உயிர் பிராண சக்தி பற்றி எந்த கணிப்பும் சிகிச்சையில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை.
இதேவேளை கீழைத்தேய மருத்துவம் ஒருவனின் இயற்கை தன்மை என்ன? உடலின் முழுமையான ஆரோக்கியத்திற்கு என்ன செய்யலாம்? என்ற அடிப்படையில் உடலும் உயிரும் சேர்ந்த ஒரு உயிர்ப்புள்ள ஜீவனிற்கு அதன் ஆரோக்கியத்தை எப்படி பாதுகாப்பது என்பது பற்றிய அணுகுமுறையுடன் செயற்படுகிறது. இதனாலேயே சிகிச்சி என்பது உடல் மன சம நிலையை ஏற்படுத்தும் ஒன்றாகவே சித்த ஆயுர்வேத சீன மருத்துவத்தில் வகைப்படுத்தப்படுகிறது.
உடலையும் மனதையும் ஒன்றுபடுத்தி சிகிச்சை செய்ய முடியாத பொழுது உடல் ஆரோக்கியத்தை பெறுகிறது என்பதை கற்பனை செய்தும் பார்க்க முடியாது.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...