குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, July 10, 2023

ஒரு வழிகாட்டியாக இருப்பது பெரும் பொறுப்பு!

குறைகளைச் சுட்டிக் காட்ட வேண்டும்! அதேவேளை அவர்களுடைய Ego வினை கிளப்பிவிட்டு கோபத்தைத் தூண்டக்கூடாது. காயப்படுத்தி தாழ்வு மனப்பான்மை உண்டாக்கக்கூடாது! ஆர்வத்துடன் செயல் புரியும் உத்வேகத்தை உருவாக்க வேண்டும்; அதற்கு நிதானமும், சிந்தனையைத் தூண்டும் வகையிலும் உரையாட வேண்டும்! எனது மாணவர் ஒருவர் ஒரு முறை கூறினார் “ஐயா உங்களிடம் கேள்வியைக் கொண்டுவந்தால் பதிலை நாம் தேடி உணரும் வகையில் அழகாக எமக்குள்ளே திருப்பி விடுவீர்கள்” என்று! 
ஆம் கற்பித்தலின் முதல் நியதி “எவருக்கும் எதையும் கற்பிக்க முடியாது, அவர்கள் ஏற்பு நிலையில் இல்லாமல்” என்பதே!
ஒரு மாணவர் பல வருடங்களுக்கு நொந்து நொடிந்து வந்தபோது ஆலோசனை கூறி உளத்தை மீளமைத்து வாழ்க்கைப் போராட்டத்தில் சண்டை பிடிக்க வீரனாக்கினால் சிலமாதங்களில் தனது பழைய பழக்க வழங்கள், சிந்தனை முறைகளுக்குள் போய் ஒளிந்து கொண்டு அண்ணா பயமாக இருக்கிறது என்று வெருண்டு கொண்டு வருவார்! 
இப்போது அவருக்கு நிதிப்பிரச்சனையாம்! அதற்கு அனுப்பிய வழிகாட்டல் இங்கும் சிலருக்கு பொருந்தும்! உபயோகமாக இருக்கலாம். 
*******************************************
அன்பின் மாணவரே, 
உங்களுடைய நிதிப்பிரச்சனைக்கு உங்களுடைய பேராசைகள், நிதி ஒழுக்கமே காரணம். 
இங்கு பேராசை என்பது உயர்ந்ததை அடையவேண்டும் என்ற ஆசை இருக்கக் கூடாது என்பதல்ல! உயர்ந்த விஷயத்தை குறுக்கு வழியில் அதற்குரிய உழைப்பை, விலையைக் கொடுக்காமல் ஏமாற்றி இலாபம் பெற நினைக்கும் எண்ணம்! 
நீங்கள் உழைக்கும் பணத்தைக் கணக்குச் செய்தால் சாதாரணமாக ஒரு பட்டதாரி உழைப்பதை விட அதிகமாக உழைக்கிறீர்கள்.
நீங்கள் செலவு செய்வதை ஆராய்ந்து பாருங்கள்; அவற்றில் போலிப்பகட்டு இருப்பின் திருத்திக்கொள்ளுங்கள். 
தர்ம காரியங்களுக்கு பணம் செலவழிக்கும் போது உங்களிடம் பணம் இல்லை என்று மனதில் சூழ் நிலையை உருவாக்கி அகத்தில் தரித்திரம் உருவாக்குவது பின்னர் எதிர்வினையாக பேராசைப்பட்டு ஏமாறுவது என்ற நிலை உங்களில் இருக்கிறதா என்பதை கவனியுங்கள். 
நான் எல்லோராலும் விரும்பப்பட வேண்டும், மதிக்கப்பட வேண்டும் என்ற உளத்தாழ்வு நிலை இருந்தால் அதை ஈடுகட்ட எனது நிதி வலிமையை விட பகட்டாக மற்றவர்களுக்கு உதவுகிறேன் என்று சென்று மாட்டிக்கொள்கிறீர்களா என்பதை கவனியுங்கள்.
தினசரி உங்கள் தொழிலில் உழைப்பைச் செலுத்தாமல் பணம் கிடைத்தவுடன் ஓய்வாக இருப்பது, உல்லாச மன நிலை வருவது, பிறகு பணம் முடிந்தவுடன் பயம், கவலை கொள்வது போன்ற தவறுகளைச் செய்கிறீர்களா என்பதைக் கவனியுங்கள்! 
இப்படி தகுந்த ஒழுக்கத்தினைப் உங்களில் உருவாக்காமல் உங்களைச் சுற்றி உலகமே சூழ்ச்சியால் இயங்குவது போல கற்பனைப் பயத்தை உருவாக்கி உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளாதீர்கள். 
மீண்டும் மீண்டும் இதைப் படித்து உங்களில் இந்த அகக்காரணி இருக்கிறதா என்பதை கவனித்து திருத்திக்கொள்ளுங்கள்! 
திருத்த வேண்டும் என்றால் விழிப்புணர்வுடன் சுய பச்சாதாபம் காட்டாமல் உங்கள் எண்ணங்களை நீங்கள் கவனிக்க வேண்டும்!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...