குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, July 04, 2023

மாத்தளையில் இடம்பெற்ற நிகழ்வுகள்

அம்பாளை உபாசிக்கும் எனக்கு பூரணை மிக முக்கியமான நாள்! அன்று முழுவதும் அனுஷ்டானத்தில் கழியும்! 
நேற்று அம்பாள் எனக்கு வித்தியாசமான ஒரு அனுபவத்தைத் தந்திருக்கிறாள்! 
அவுஸ்ரேலியாவில் இருந்து Muralee Muraledaran அண்ணா வந்ததால் அவரது ஆலோசனையுடன் மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் - Forum For Tamil Graduates of Matale நேற்று மூன்று முக்கிய நிகழ்வுகளை மாத்தளையில் நடத்தியிருக்கிறது. இதை இவர்கள் நடத்தினார்களா அல்லது திருவருள் நடாத்தியதா என்பது இன்னும் எனக்குள் ஓடிக்கொண்டிருக்கும் எண்ணம். 
1. காலையில் சிந்தாக்கட்டி குமரப்பெருமான் ஆலயத்தில் digital education center, பாலர் பாடசாலை, கல்வி ஆலோசனை நிலையம் ஆகியவற்றிற்குரிய அடிக்கல் ஆலய தர்ம கர்த்தா பாலா அண்ணாவுடனும் பரிபாலன சபையுடன் நிறுவப்பட்டுள்ளது. இது சிந்தாக்கட்டி கோயிலைச் சுற்றி இருக்கும் 250 குடும்பங்களின் பிள்ளைகளின் ஆரம்ப கல்வி, பாலர் கல்வி, அற நெறிக் கல்வி, பிள்ளைகளுக்கு கல்வியில் ஆர்வம் ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்படுகிறது. இதற்கு பிரம்மகுமாரி இராஜயோக நிலையத்தின் இணைப்பளர் Muthusamy Sivagnanam ஐயா அவர்களும் பங்குபற்றி பாராட்டுகளை வழங்கியிருந்தார். 
2. மதியம் கல்வித் திணைக்கள அதிகாரிகள் Monica Gomez அம்மையார், அதிபர்கள், ஆசிரியர்களுடன் Dr. Nishānthan Ganeshan - Dr. Nava Navaratnarajah ஆகிய பல்கலைக்கழக சமூக அறிஞர்களுடன் நீண்ட கல்வி சமூக கலாச்சார சமூகப் பணியில் அனுபவம், மேற்குறித்த பணிகளுக்காக அவுஸ்ரேலிய அரசாங்கத்தால் உயர் கௌரவம் பெற்ற அன்புக்குரிய Muralee Muraledaran அண்ணா அவர்களுடைய ஆலோசனையுடன் மாத்தளையில் தமிழ் கல்வி நிலை முன்னேற்றத்திற்கு தேவையான செயற்திட்டங்கள், பாடசாலைகளின் வளப்பற்றாக்குறைகள், அவறிற்குரிய தீர்வுகள் பற்றி நீண்டதொரு கலந்துரையாடல் நிகழ்வுபெற்றது. 
3. மூன்றாவது நிகழ்வு மாத்தளை காந்தி சபையின் ஏற்பாட்டில் மாத்தளையின் கல்வி, கலாச்சார வளர்ச்சியில் ஆர்வமூள்ள சமூகப் பெரியவர்களுடன் எப்படி கல்விக்குரிய தலைமத்துவம் வழங்குவது என்பது பற்றி உரையாடப்பட்டது. இதில் ஏற்கனவே மாத்தளையின் கல்வி வளர்ச்சிக்குப் பாடுபடும் சுபீட்சம் நிறுவனம், பல்வேறு ஆர்வலர்கள் கலந்துகொண்டு பெரும் ஒத்துழைப்பைத் தந்திருந்தனர். இந்த நிகழ்விற்கு தலைமையேற்ற மகாத்மா காந்திசபையின் தலைவர் திரு சந்திரசேகன் ஐயா அவர்களின் பிறந்த நாள் அன்று இந்தக்கூட்டம் நடைபெற்றது மிகச் சிறப்பான ஒரு நினைவாக இருக்கப்போகிறது. முரளி அண்ணா தனது கல்வி சமயப் பணியின் நீண்ட வெற்றிகர அனுபவத்தை அனைவருடனும் பகிர்ந்து கொண்டார். 
எந்தத் தடைகள் வந்தாலும் எப்படி அதைக் கவனிக்காமல் இலக்கை மாத்திரம் கவனித்து முன்னேறிச் செல்வது என்ற வித்தையை தனது அனுபவத்திலிருந்து முரளி அண்ணா எம் எல்லோரிடமும் பகிர்ந்துகொண்டது ஒட்டு மொத்த சமூகத்திற்கு அவர் தந்திருக்கும் பெருஞ்செல்வம்! 
அவர் ஒரு யதார்த்தவாதி என்பதையும், எடுத்ததை சாதிக்கும் விடாக்கண்டன் என்பதையும், உதவி என்பது எவருக்குத் தேவையோ அவர்களுக்கு என்ற உயரிய எண்ணம், வளங்களை வீணாக்கமல் உயர்திறனுடன் பாவிப்பது எப்படி, இருப்பதை வைத்து உயர்ந்த பலனைப் பெறுவது எப்படி என்பதையெல்லாம் நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் நேற்றுக் கிடைத்தது. 
எனக்கு மனதிற்குள் ஒரு கவலை பூரணை தினத்தில் இன்னும் கொஞ்சம் அனுஷ்டானத்தினைச் செய்திருக்கலாமே என்ற மனஓட்டத்துடன் வீட்டிற்கு வந்தால் அங்கு குருதேவர் பண்டிட் ஸ்ரீராம்சர்மாச்சார்யாவின் வாழ்க்கை வரலாறு புத்தகம் கண்ணில் பட புத்தகத்தைத் திறந்தால் கீழ்வரும் செய்தி கண்ணில் பட்டது; 
1. உண்மையான உபாசனை - தனது இஷ்ட தெய்வத்தை உபாசித்தல்
2. ஆன்ம சாதனை - அறத்திலிருந்து வழுவாத வாழ்க்கை
3. ஆராதனை (மனித குலத்திற்கு தனது அறிவு ஆற்றல் ஆகியவற்றைப் பயன்படுத்தி தொண்டு செய்தல்)
இன்றைய நாளை நீ வீணாக்கவில்லை உனது சமூக முன்னேற உனது நேரம், அறிவினைப் பயன்படுத்தி ஆராதனை செய்துவிட்டு வந்திருக்கிறாய் நிம்மதியாக நித்திரை கொள் என்றாள்!
இந்த மூன்றும் அமைந்த வாழ்க்கை ஒருவனை தெய்வீக மனிதனாகவோ, ரிஷியாகவோ, தேவதூதனாகவோ மாற்றிவிடும். இத்தகையவர்கள் எப்போதும் மக்களால் மதிக்கப்படுபவர்களாகவும், உயர்ந்த செயல்களைச் செய்பவர்களாகவும் இருப்பார்கள்.
இந்த செய்தியைப் பார்த்த மகிழ்ச்சியில் மனத்திருப்தியுடன் வேலைகள் எல்லாம் முடித்து உறங்கச் செல்லும் போது இரவு ஒன்றரை மணியாகிவிட்டது.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...