குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, July 02, 2023

பாடசாலையில் ஆற்றிய உரையின் தொகுப்பு

30-ஜூன்-2023 - வெள்ளிக்கிழமை - மாத்தளை இந்துக்கல்லூரி மாணவர்களுக்கு ஆற்றிய உரையின் சுருக்க செம்மை வடிவம். நிகழ்ச்சி கலந்துரையாடல் வடிவில் உற்சாகமாக அமைந்திருந்தது. பதிவு நான் கூறிய முக்கிய கருத்துக்களின் தொகுப்பாகும். 
நிகழ்ச்சி அழைப்பு மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் - Forum For Tamil Graduates of Matale
ஏற்பாடு பாடசாலை நிர்வாகம்
******************************************
அன்பான மாணவச் செல்வங்களே, 
கற்றல் பற்றி கற்க இங்கு கூடியிருக்கிறோம்; 
கற்றலில் நீங்க பாவிக்கும் உறுப்புகள் என்ன? 
செவி - கண்
செவிகளால் கேட்டு கற்றலை ஆரம்பிக்கிறோம்; ஆசிரியர் வகுப்பில் பாடம் நடாத்தும் போது எமது செவிகள் கேட்டுக்கொண்டு இருக்க வேண்டும்;
நாம் எப்போது முறையாகக் கேட்போம்; கவனிக்கும் போது! ஆகவே கவனமாக கேட்டால் மாத்திரமே கற்றல் நிகழும்! 
எனக்கு முன்னர் அதிபர் உரையாற்றினார். அதிபர் கூறிய விடயத்தை கவனமாக கேட்டவர்கள் கையை உயர்த்துங்கள்! பலரும் உயர்த்தினர்! 
யாருக்கு அதிபர் கூறிய விடயத்தைச் மீண்டும் சொல்ல முடியும்! 
உடனே ஒரு மாணவன் எழுந்து அதிபரின் உரையை சுருக்கமாக அழகாகக் கூறினார். 
நல்லது, இப்போது கவனம் எப்படி வரும்?
கவனம் விருப்பம் இருந்தால் வரும்! நாம் விருப்பமுடைய விஷயங்களைக் கவனிக்கிறோம் அல்லவா? இதை நீங்கள் அவதானித்திருக்கிறீர்களா? 
ஆகவே கற்றலின் முதல் படி:
ஆசிரியர் கூறுவதைக் கவனமாக கேட்டல்
கவனமாகக் கேட்க வேண்டும் என்றால் நாம் ஒவ்வொரு பாடத்திலும் விருப்பத்தை உண்டு பண்ண வேண்டும். 
எப்படி ஒவ்வொரு பாடத்திலும் எமக்கு விருப்பத்தை உண்டுபண்ணுவது? 
அதற்கு குறித்த பாடத்தை கற்பதால் எனக்கு என்ன நன்மை என்பதை உணர்ந்துகொள்வதால் எமக்கு விருப்பம் உண்டாகும்;
தமிழ் மொழியைப் படித்தால் அதில் ஆயிரக்கணக்கான பழமையான கலாச்சாரம், பண்பாடு இவற்றை நாம் அறிந்துகொண்டு மனதிற்கு மகிழ்ச்சியும் சந்தோஷமும் அறிவும் உண்டாகும். 
சிங்கள மொழியைப் படித்தால் எமது நாட்டில் எம்முடன் வாழும் சிங்கள சகோதரகளுடன் அன்னியோன்யமாக பழக முடியும்; இணைந்து வேலை செய்ய முடியும். 
ஆங்கிலம் படித்தால் உலகில் பெரும்பகுதிக்குச் சென்று உயர்கல்வி கற்க முடியும், தொழில் செய்ய முடியும். 
இதைப் போல் ஒவ்வொரு பாடமும் எம்மை குறித்த துறை சார்ந்த அறிவினைத் தந்து எம்மை இந்த உலகில் முழுமையுள்ளவர்களாக ஆக்கும். 
இப்படி காதால் கேட்டு மனதில் விருப்பத்துடன் கவனமாக கற்றதை மீட்க நாம் பயன் படுத்தும் இன்னுமொரு உறுப்பு கண்கள்! 
கண்களால் நாம் வாசித்து அறிவினைப் பெறுகிறோம்; வாசிப்பது நமது மனதில் நிற்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு முறை இருக்கிறது; 
ஒரு பாடத்தை மூன்று முறை கட்டாயம் வாசிக்க வேண்டும்;
முதலாவது முறை வாசிக்கும் போது அந்தப் பாடம் என்ன சொல்ல வருகிறது என்பதை கவனித்து வாசிக்க வேண்டும். இதன் மூலம் ஒரு புரிதலை நாம் பெற்றிருக்க வேண்டும்,
இரண்டாவது முறை நான் புரிந்துகொண்டது சரியா என்பதை அவதானித்து வாசிக்க வேண்டும். இரண்டாவது வாசிப்பில் நான் பாடத்தில் எதையும் விடவில்லை என்பதை உறுதிப்படுத்தி வாசிக்க வேண்டும். 
மூன்றாவது முறை ஞாபகத்தில் ஏற்றிக்கொள்ள வாசிக்க வேண்டும். 
இந்த மூன்று வாசிப்புகளும் முடிந்த பின்னர் குறித்த பாடத்திற்குரிய கேள்விகளைச் செய்து எவ்வளவு பாடத்தை என்னால் கிரக்கிக்க முடிந்திருக்கிறது என்பதை நாமே சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். 
இப்போது கண்களையும் கற்பதற்கு எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்துகொண்டோம். 
எத்தனை பேரிடம் கணனி இருக்கீறது? கணனியில் நீங்கள் தகுந்த தேடலைச் செய்வதன் மூலம் எதையும் சுயமாக கற்க முடியும். 
சரி நான் இன்று உங்களுடன் உரையாட வந்திருப்பது விஞ் ஞானக் கல்வியில் உங்களுக்கு ஆர்வத்தை ஊட்டுவதற்காக? 
அறிவியல் அல்லது விஞ் ஞானம் என்பது மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்டது
உயிரங்கிகளைப் பற்றிய படிப்பு உயிரியல் எனப்படும்
இரசாயனத்தைப் பற்றிய படிப்பு இரசாயனவியல் எனப்படும்
பௌதீக உலகின் சக்திகள், இயக்கம் பற்றிய படிப்பு பௌதீகவியல் எனப்படும். 
இந்த மூன்று துறைகளையும் ஒருங்கே சேர்த்து நாம் விஞ்ஞானம் அல்லது அறிவியல் என்று சொல்லுவோம். 
இந்த மாணவர் குழுவில் ஆசிரியரை, பெற்றோரை கேள்விக்கு மேல் கேள்வி கேட்டு அடம்பிடிக்கும் மாணவர்கள் கையை உயர்த்துங்கள்? 
சிலர் கையை உயர்த்தாமல் நல்ல பிள்ளைகள் போல் இருக்கிறார்கள்; உண்மையில் கேள்விக்கு மேல் கேள்வி கேட்பவர்களுக்கு விஞ் ஞான கல்வி இலகுவாக வரும். 
யாருக்கு புதிய விஷயங்களை அறிந்துகொள்ள ஆர்வம், ஊக்கம் கேள்வி இருக்கீறதோ அவர்களுக்கு அறிவிய உகந்த துறை. 
அறிவியல் கல்வி கற்றால் பலவிதமான தொழில்கள் இருக்கிறது; எல்லோருக்கும் தெரிந்த மருத்துவன், பொறியியலாளர் தொடங்கி நீங்கள் விரும்பி விளையாடும் கிரிக்கட், விளையாட்டுகளுக்கு கூட அறிவியல் நன் கு தெரிந்திருக்க வேண்டும். 
வாழ்க்கையில் வெற்றி பெற இலக்கினை நிர்ணயித்தல் அவசியம்;
கல்விக்கு இலக்கினை நிர்ணயித்துக்கொண்டு இந்த பாடசாலை வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள்!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...