குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, July 03, 2022

தலைப்பு இல்லை

 

உயிர்ப்பூ மற்றும் ஈகல்வி குழுவினர் மலையகத்தில் உணவுற்பத்தியினை ஊக்குவிக்கும் திட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

இடர்கால எளிய உணவு மரவள்ளி

இதன் நாற்றுத்தடி பராமரிப்பு பற்றிய சிறிய குறிப்பு

மரவள்ளி நாற்றுதடி

*****************

பீடைகள், காலநிலைக் காரணிகள் வெட்டப்படும் மரவள்ளித்தடியினை நீர்ப்பதம் அற்றுப் போகச் செய்து முளைத்திறனை அற்றுப்போகச் செய்ய முடியும்.

இதை முறையாக சேமிப்பதன் மூலம் நல்ல தரமான நடவுத்தடியினைப் பெறலாம்.

நடவுத்தடி புதிதாக வெட்டப்பட்டதாகும், நன்கு மொத்தமானதாகவும், காயமற்றதாகவும், ஒரு தடியில் ஆகக்குறைந்தது 06 - 08 கணு உள்ளதாக, 20 - 30 cm இல் இருக்க வேண்டும்.

ஆபிரிக்காவில் மரவள்ளி நாற்றுத்தடிகளுக்கு என தனியான கொட்டகை இருக்கும்.

- ஓலையால் வேயப்பட்ட

- மணல் நிரப்பப்பட்ட - சேமிக்கும் போது வேர்பிடித்தால் கழற்ற இலகுவாக இருக்கும்.

- 50 தடிகளைக் கட்டி நிமிர்த்தி வைக்கக்கூடிய

கொட்டகைகள் இருக்கும்.

உடனடியாக பெறப்படும் மரவள்ளித்தடிகளை நடமுடியாவிட்டால் என்ன செய்வது?

*************************************

மரவள்ளிக்கிழங்கு நடவுத்தடி பராமரிப்பு பின்வரும் படிகளை உள்ளடக்கியது:

தேர்ந்தெடுக்கப்பட்ட மரவள்ளித் தண்டுகளை 1-மீ நீளத்தில் வெட்டி 50-தண்டு மூட்டைகளாகக் கட்டவும்.

• மரவள்ளித்தடி மூட்டைகளை வேப்ப மரப்பட்டை, இலைகளை எரித்த சாம்பல் கரைசலில் நனைத்து காற்றில் உலர வைக்கவும். ஊறவைத்துவிடக்கூடாது. ஒரு தடவை முக்கி எடுத்து வெளியே எடுக்க வேண்டும்.

• உலர் பகுதிகளில் பாதுகாப்பதற்காக துளையிடப்பட்ட பொலித்தீன் பைகளில் தண்டுகளை பேக்கேஜ் செய்யவும்.

• தண்டுகளின் முளைக்கும் பக்க முனைகளை தண்டின் நுண்துளை மண்ணைத் தொடுவதை உறுதிசெய்து மூட்டைகளை நிமிர்த்தி வைக்கவும். வாரத்திற்கு இருமுறை மண்ணை ஈரப்படுத்தவும். முளைக்க ஆரம்பிக்கும் போது வாரத்திற்கு ஒரு முறை குறைக்கவும்.

• நடப்போகிறோம் என்றால் தேவையான தடிகளை எடுத்து முளைகளை அகற்றவும். தண்டுகளை நனைப்பதற்கு வேப்ப சாம்பலை படிப்படியாக தண்ணீரில் கலக்கவும்.

• நடவு செய்வதற்கு ஏற்ற சூழ்நிலையில் தண்டுகளை எடுத்து சிறுதுண்டுகளாக்கிப் பயன்படுத்தவும்.

கொண்டுவரும் போதும், வைத்திருக்கும் போதும் தண்டுகள் காயப்படக்கூடாது.

citation: FAO. 2018. Seeds toolkit - Module 6: Seed storage. Rome, 112 pp. Licence: CC BY-NC-SA 3.0 IGO

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...