குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, March 25, 2021

தலைப்பு இல்லை

இன்று பங்குனி ஆயில்யம்!

யாழ்ப்பாணத்து சிவயோக சுவாமிகளின் திருவடிக்கலப்பு நாள்!

சுவாமிகள் பெற்ற மகாவாக்கியங்களை அவரவர் உலகப்பிரச்சனைக்கு உகந்தபடி பேச்சுவழக்கில் பாவித்தாலும் அவை நான்கும் சிவயோகத்தின் உயர் அனுபவத்தின் சாரம்;

எப்பவோ முடிந்த காரியம்

நாம் அறியோம்

ஒரு பொல்லாப்பும் இல்லை

முழுதும் உண்மை

எந்த ஒரு காரியமும் ஸ்தூலத்திற்கு வருமுன்னர் அது சூக்ஷ்மத்தில் முடிவுற்று, சூஷ்மத்தில் தோற்றம் பெற முன்னர் காரணத்தில் முடிவுற்று விடும். சித்தர் தத்துவத்தில் நோய் தோற்றம் ஸ்தூலத்தில் தோன்றுவதற்கு பலமாதங்களுக்கு முன்னர் சூக்ஷ்ம உடலில் தோன்றி, சிலவருடங்களுக்கு முன்னர் காரணத்தில் தோன்றுகிறது என்பதும் அதை எப்படி அறிவது என்பதும் விளக்கப்பட்டிருக்கிறது. ஆகவே காரணத்தில் முடிவுற்று, சூக்ஷ்மத்தில் எப்போதோ முடிந்த காரியம் சூக்ஷ்மத்தில் வந்து, பிறகு இருந்து அழுது, புலம்பி என்ன பயன்; நாம் காணும் அனைத்தும் எப்பவோ முடிந்த காரியம்!

நானும் இறைவனும் வேறல்ல என்ற சிவபோக நிலை அடைந்துவிட்டால் பிறகு நான் அறிகிறேன் என்ற நிலை இல்லை.

நாம் எமக்கு நடப்பதைக் கண்டு தீமை, துன்பம் ஆகிவிடும் என்று அஞ்சிப் புலம்புகிறோம்; ஆனால் நடப்பவை அனைத்தும் எமக்கு ஏதோ ஒருவழியில் ஞானத்தைப் புகட்டவே திருவருள் நடாத்துகிறது என்று அறிந்தவனுக்கு எதுவும் பொல்லாப்பு இல்லை!

அனைத்தும் அந்த சத்தியமயமான - (உண்மை) சிவத்தின் வெளிப்பாடு என்று அறிந்த பின்னர் உலகில் எதை நாம் பொய் என்று ஒதுக்க முடியும்! ஆகவே முழுவதும் உண்மை!

***********************************

யோகர் சுவாமிகளை செல்லப்பர் ஒவ்வொரு பங்குனித் திங்கள் அன்றும் நடையாக மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோயிலிற்கு அழைத்துச் சென்று இரவில் பொங்கலிட்டு படைத்துவிட்டு சாப்பிட உட்காரும்போது பொங்கல் பானையை உடைத்தெறிந்துவிட்டு போதும் செல்வோம் என்று அழைத்து வந்துவிடுவாராம்!

(செல்லத்துரை சாமியிடம் கேட்டது)

*************************************************

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

மந்திர ஸாதனை துரிதமாக பலனளிக்க வழி

 நீங்கள் உங்கள் வீட்டைச் சுத்தப்படுத்தி அழகுபடுத்த விரும்புகிறீர்கள், இதற்கு ஒரு தொழில் சார்ந்த நிபுணரை அழைக்கிறீர்கள். அவரிடம் உங்கள் வீட்ட...