குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, April 27, 2018

ஸ்ரீ அரவிந்தரின் தெய்வீக வாழ்க்கை வாசிப்புக்கள

மனிதனின் சிந்தனை விழிப்புணர்வு எண்ணம், துன்பங்களில் இருந்து விடுபடல், மனித எண்ணம் அடையக்கூடிய அதியுயர் நிலை, மனித உடலில் தெய்வ சக்தியை விழிப்படைய வைத்தல், தன்னை அதியுயர் சீரான தன்மையுடையவனாக ஆக்குதல், தூய உண்மை, கலப்பற்ற ஆனந்தம், இரகசியமான அம்ருதத்துவம் ஆகியபற்றியவை. 

பண்டைய மனித அறிவின் உதயம் இந்த சிந்தனை பற்றி அதிக தகவல்களை கூறுகின்றது. இன்றைய மனிதனின் தேடலும் வெளிப்புற விஷய ஞானத்தில் இருந்து விடுபட்டு இத்தகைய உண்மைகளை தேடுவதிலேயே ஆர்வம் செல்வதை அவதானிக்கலாம். 

பண்டைய ஞானத்தின் சூத்திரம் கடவுள், ஒளி, விடுதலை, அம்ருதத்துவம் ஆகிய நான்கினை விளக்கியே நிற்கிறது. 

இதைப்பற்றி தொடர்ச்சியாக ஆராய்ந்த இலட்சியவாதிகள் இவற்றை அடைவதற்கான வழி சாதாரண உலக அனுபவத்துடன் முரண்படுவதையும்,  இந்த உயர்ந்ததும், ஆழமானதுமான உறுதிமொழி மனிதனின் பொது அனுபவத்திலிருந்து அசாதாரணமாக இருப்பதையும், இதை மனித குலம் அடைவதற்கு, தமது குழுக்கள் புரட்சிகரமான தனிமனித முயற்சியா அல்லது பரிணாம வளர்ச்சியால் ஏற்படும் பொது வளர்ச்சியா சிறந்தது என ஆராய தலைப்பட்டனர். 

இந்தப்பாதையை அறிவதற்கும், தெரிவதற்கும் மிருக குணமும் ஆணவமும் உள்ள இந்த உணர்வில் தெய்வ தன்மையி விழிப்பிக்கவும், எமது தெளிவற்ற மெலிதான ஒளியுள்ள மனதை அதியுயர் பிரகாசமான உயர் ஒளியாக மாற்றுவதற்கும், அமைதியை கட்டமைக்கவும், தற்காலிகமான அழுத்தத்தையும் உணர்ச்சிகளால் வரும் துன்பத்தை தீர்க்கவும், பூரண விடுதலையை அடையவும், இயந்திரத்தனமான வாழ்க்கையில் இருந்து விடுபடவும், இறப்படையும், மாறும் இந்த உடலில் அம்ருதத்துவத்தை அடையவும் ஜடத்தில் இறை சக்தி உண்டென்பதும், இயற்கையில் புவியின் பரிணாம கூர்ப்பாகவும்  அமைக்கப்பட்டுள்ளது. 

சாதாரண லௌகீக புத்திக்கு , எது தனது எல்லையையும், அதன் சாத்தியங்களையும் தனது அனுபவத்திற்குள் மட்டும் அறியக்கூடியதாக உணர்வு உள்ளதோ அது தான் அறியாத உணராத ஒரு உண்மையுடன் முரண்படும். இத்தகைய புத்தி தான் அறிந்தது மட்டுமே அதன் நம்பகத்தன்மைக்கு உறுதி அளிக்கும். 

தொடரும் (???) 

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...