குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, April 20, 2018

பகவத் கீதை - யோக விளக்கம் 01


பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர் கூறுகிறார்..

"யதா யதாஹி தர்மஸ்ய க்லானிர்-பவதி பாரத
அப்யுத்தானம் அதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம்"

அர்ஜுனா! உலகில் தர்மம் குறைந்து, அதர்மம் மேலோங்கும் போதெல்லாம் என்னை நான் பிறப்பித்துக் கொள்கிறேன்.

"பரித்ராணாய ஸாதூனாம் விநாசாய துஷ்க்ருதாம்
தர்ம-ஸம்ஸ்தாபனார்தாய சம்பவாமி யுகே யுகே!"

நல்லவர்களைக் காப்பதற்கும், தீயவர்களை அழிப்பதற்கும், தர்மத்தை நிலை நாட்டுவதற்கும் நான் யுகங்கள் தோறும் அவதரிக்கிறேன்.

மேலே உள்ள பகவத்கீதை சுலோகங்களை படித்து விட்டு உலகில் அதர்மம் நடக்கம் போது வானத்தில் இருந்து கிருஷ்ணன் வெள்ளைக்குதிரையில் வருவான் என்று கற்பனை செய்து கொண்டு இருப்பவர்கள் பலர். இப்படி பக்தியால் கெஞ்சி கூத்தாடி இறைவனிடம் தம் பிரச்சனைகளை கொட்டி விடலாம் என்று நினைப்பவர்களும் ஸ்ரீ க்ருஷ்ணன் என்ன சொல்ல வருகிறான் என்பது அதிர்ச்சியாக இருக்கும்.

யார் க்ருஷ்ணன்?
எமக்குள் உயிராய் இருக்கும் இறையே க்ருஷ்ணன், அந்த உயிர் வெளிப்படுத்தும் அறிவே க்ருஷ்ணன் (பிரமாணம் பகவத்கீதை (அத்தியாயம் ஏழு: ஞான விஞ் ஞான யோகம், பூரணத்தின் ஞானம் 7.21 : எல்லோரது இதயத்திலும் நான் பரமாத்மாவாக இருக்கிறேன், 7.8: மனிதரில் திறமையாகவும் இருப்பது நானே.)

யார் அர்ஜுனன்?
மாயையின் வசப்பட்டு, தமஸ் நிறைந்த எமது மனமே அர்ஜுனன்,

எது உலகு?
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், மனம், புத்தி, அஹங்காரம்இந்த எட்டும் சேர்ந்ததே  மனிதனே உலகு.

எங்கு தர்மம் குறைகிறது?
ஒவ்வொரு மனிதனிலும் அவன் உடலும் மனமும் சேர்ந்த அவனது உலகிற்குள் சத்துவ, ராஜோ தமோ குணத்தால் தான் செய்ய வேண்டிய காரியத்தில் சிரத்தை குறையும் போது “அவனுக்குள்” தர்மம் குறைகிறது.

தர்மம் என்பது என்ன?
உலகும் தானும் ஒத்திசைவாக இயங்க ஒருவன் கடைப்பிடிக்கவேண்டிய மன, உடல் நியதிகள்.

அதர்மம் என்பது என்ன?
எது தானும் உலகும் ஒத்திசைவாக இயங்க தடையாக இருக்கிறதோ அதுவே அதர்மம்.

நல்லவர் யார்?
தர்மத்தின் வழி (மேலே கூறிய வரைவிலக்கணப்படி) சிந்திக்கும் எண்ணங்களும் அவற்றை உருவாக்கும் மனத்தின் ஒரு பாகம்.

தீயவர் யார்?
மனதையும் உடலையும் உலகுடன் ஒத்திசைவாக்காமல் அதர்ம வழி எண்ணத்தை உண்டுபண்ணு எமது மனத்தின் ஒரு பாகம்.
தர்மத்தை நிலை நாட்டுவதற்கும் நான் யுகங்கள் தோறும் அவதரிக்கிறேன் என்பதன் விளக்கம் என்ன?

ஒவ்வொருவருடைய மனம் தர்மத்தில் இருந்து விலகி அதர்மத்தில் குழம்பும் போது ஒவ்வொருவருக்குள் உயிராய் இருக்கும் க்ருஷ்ணன் அறிவாய் மனதில் தோன்றி ஒவ்வொருவரையும் தர்ம வழி செலுத்துவதே இயற்கையின் நியதி!

ஆக இந்த சுலோகத்தின் பொருள் க்ருஷ்ணன் எங்கோ பிறந்து கத்தி எடுத்துக்கொண்டு வந்து தீயவர்களை கொல்வான் என்று தீவிரவாத எண்ணத்துடன் எண்ணாமல், ஒவ்வொருவரும் தமக்குள் அறிவாய் விளங்கும் உயிரின் ஆற்றலைக்கொண்டு தமது மனத்தில் உதிக்கும் அதர்ம எண்ணத்தை அழித்து தர்ம எண்ணத்தை நிலை நாட்டவேண்டும் என்பதே இதன் பொருள்.

நான் அவதரிப்பேன் என்பதன் பொருள் உயிரான இறை அறிவால் மனதில் வழி வெளிவருவேன் என்பதே!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பதஞ்சலி யோக சூத்திர வகுப்பு – 02

    15-ஜனவரி-2024 பதஞ்சலி யோக சூத்திர வகுப்பு – 02 இன்று நீங்கள் கற்றுக்கொண்ட பதஞ்சலி சூத்திரங்கள்: சூத்திரம் – 03: ததா த்ரஷ்டு: ஸ்வ...