குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, April 20, 2014

ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் நீக்கி கிரக பலம் பெற நவக்கிரக காயத்ரி சாதனைகள்

இன்றைய உலகில் ஜோதிடத்தினை நம்பி விதியினை பழி கூறாதவர்கள் இருக்க முடியாது. கிரகங்கள் எவ்வாறு செயற்படுகிறது என்ற உண்மைகளை மறைந்து சனி உன்னை பார்க்கிறான், கெட்டகாலம் என்று கிரகங்களை பயம் கலந்த எண்ணத்தோடு ஆயிரக்கணக்கான ரூபாய்களை செலவழித்து பரிகாரம் செய்கிறோம், சாந்தி செய்கிறோம் என்று நேரத்தையும், பணத்தையும் செலவழிக்கின்றார்கள்.

எங்கும் அலையாமல் இப்படிப்பட்ட பிரச்சனையில் இருந்து மீண்டுவர வழி உள்ளதா என்றால் ஆம் உள்ளது. அந்த வழியினைத்தான் பலன் பெறவேண்டும் என்று எண்ணும் அன்பர்களுக்காக கூறப்போகிறோம். இதில் கூறப்பட்ட வழியில் நீங்கள் முயற்சித்து வேறெதனாலும் பெறமுடியாத பலன்களை துரிதமாக பெறமுடியும். இதற்குரிய தகுதி உங்கள் முயற்சியும் சிரத்தையும் மட்டுமே ஆகும்.

யாருக்கு இவை உபயோகப்படும்?
யாருக்கு துன்பங்கள், தொல்லைகள் இருக்கின்றனவோ, ஜாதகத்தில் கிரக தோஷங்கள் இருக்கின்றது எனக்கூறப்படுகிறதோ, எந்தவிதமான ஜாதகக் கோளாறுகள், எந்தக்கிரங்களாவது பலமிழந்து, நீச்சமடைந்து இருப்பின் அவற்றால் நல்ல பலன்கள் பெறவேண்டி இருப்பின், வேலை கிடைக்காமை, தீராத நோய்கள், பணப்பிரச்சனை, இன்னும் பல நன்மைகள் 

எப்படி சாதனையினை தொடங்குவது?
  • முதலில் காயத்ரி சித்த சாதனைப்பயிற்சியினை ஞாயிற்றுக்கிழமை தொடங்கவேண்டும். இந்தப்பயிற்சியில் குரு நாமம், காயத்ரி மந்திரம் பின்பு சித்த சாதனை ஆகியவற்றை தரப்பட்ட அறிவுரைப்படி செய்யவேண்டும். இந்த கையேட்டினை பெறுவதற்கு எமக்கு மின்னஞ்சலில் அறியத்தரவும்.
  • அத்துடன் உங்களுக்கு பலமிழந்து காணப்படும் கிரக நிலை எதுவேன்பதனை ஒரு ஜோதிடரின் உதவி கொண்டு அறிந்து கொள்ளுங்கள். எம்மிடம் ஜாதகம் அனுப்பி இவற்றை சொல்லும்படி கேட்க வேண்டாம்,
  • அந்த விபரத்துடன் எமக்கு மின்னஞ்சலில் அறியத்தரவும். உங்களுக்குரிய நவக்கிரக சாதனை என்னவேன்பதனை அறியத்தருகிறோம்.
  • இந்த முறை தினசரி 15 – 25 நிமிடங்கள் ஒதுக்கி உங்கள் வீட்டில் இருந்தவாறே செய்துவர அத்தனை ஜாதகப் பிரச்சனைகளிலிருந்தும் மீண்டு இன்பமான வாழ்க்கையினை பெறலாம். 


இந்த சாதனை எப்படி உங்களுக்கு பலன் தரும்?
எமது சித்தப்பதிவுகளிற்கு ஏற்ப பலனைத்தருவதே நவக்கிரகங்களின் வேலை. ஆக கிரகதோஷம் என்பது எமது சித்தத்தில் பதிந்த பாவப்பதிவுகளிற்கு ஏற்ப பிறப்பின் போது எமது சூஷ்ம உடலில் கிரகங்களின் சக்தியின் அளவு கூடிக்குறையும் நிலையே ஆகும். பரிபூரணமாக இருந்தால் நன்மையையும், நீச்சமாக இருந்தால் அதனால் கிடைக்கக்கூடிய நன்மை கிடைக்க முடியாத நிலைமையும் ஏற்படுகின்றன. இந்த கிரகங்களின் சக்தி எம்மில் நிறைந்து இருந்தால் மட்டுமே வாழ்க்கையில் எம்மால் குறிந்த நன்மைகளை பெறமுடியும்.

சாதனா மார்க்கம் என்பது சித்தர்களும் ரிஷிகளும் இந்த நிலையில் இருந்து மீண்டு வருவதற்கு எமக்கு அருளிய ஒரு அரிய வழி, இதன் மூலம் நாம் எமது சித்தத்தில் உள்ள பாவப்பதிவுகளை மாற்றி, பற்றாக்குறையாக உள்ள கிரகங்களின் சக்தியினை எம்மில் ஈர்த்து நன்மை பெறும் முறை.

இதற்கு எம்மைவிட வலிமையான ஒரு தெய்வ சக்தியின் உதவியும், அந்த சக்தியுடன் எம்மை இணைக்கும் குருமண்டலமும், சக்தியினை பெறுவதற்குரிய கருவியும் அவசியம். இதற்காக நாம் காயத்ரி மந்திரத்தினையும், குரு மண்டல மந்திரங்களையும், சில மந்திரங்களையும் பயன்படுத்துகிறோம்.

மூல காயத்ரி (தத் ஸவிதுர் வரேண்யம் .................) பிரபஞ்ச மூலசக்தி, இந்த மந்திரத்திற்கு சித்தத்தில் பதிந்துள்ள பாவ சம்ஸ்காரங்களை (பதிவுகளை) அகற்றும் வல்லமை உண்டு. தரப்பட்ட காயத்ரி சித்த சாதனையினை சித்த வித்யா குருமண்டல மந்திரங்களுடன் நாற்பது நாட்கள் (இது எல்லோருக்கும் பொருந்தாது, அவரவர்கள் நிலைக்கு ஏற்ப பல மண்டலங்கள் செய்ய வேண்டி வரும்) செய்து, குறித்த கிரக மந்திரங்களை செய்யும் போது நாம் மேலே விளக்கிய முறையில் உங்களது துன்பங்கள் தீர்ந்து இன்ப வாழ்க்கை பெறுவீர்கள்.


இந்த முறைகளில் பயிற்சித்து பயன் பெறவிரும்புபவர்கள் மின்னஞ்சலில் அறியத்தரவும். 

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...