குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, December 28, 2012

காயத்ரி ஜெபம் (பகுதி - 02) ரிஷிகேஷத்தின் ரிஷி சுவாமி சிவானந்தர் அருளியது


காயத்ரி ஜெபத்தின் பயன்கள் 

காயத்ரி வேதங்களின் தாய், அனைத்து பாபங்களையும் அழிக்கும் வல்லமை உள்ள மந்திரம். பூவுலகிலும், தேவருலகிலும் காயத்ரியிற்கு மேலான தூய்மைப்படுத்தும் புனிதமளிக்கும் ஒன்று இல்லை. காயத்ரியினை மட்டும் ஜெபிப்பது நான் கு வேதங்களையும் அதன் அங்கங்க்களுடன் ஜெபித்து பெறும் ஞானத்தினை தரவல்லது. இந்த ஒரு மந்திரம் ஒவ்வொரு நாளும் குறைந்தது மூன்று தடவைகள் ஜெபித்தாலே கைவல்யத்தையும் மோஷத்தையும் தரவல்லது. இதன் விரிவே மற்ற வேத மந்திரங்களின் விரிவு, இந்த மந்திரத்தின் தொடர்ச்சியான சாதனை நல்லாரோக்கியம், அழகு, வலிமை, வனப்பு, வீரியம் மற்றும் பிரம்ம தேஜஸ் எனப்படும் வசீகர காந்தசக்தியினை தரவல்லது. காயத்ரி எல்லாவித துக்கங்களையும் அழிக்க வல்லது. காய்த்ரி அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு வகையான புருஷார்த்தங்களையும் தர வல்லது. மனிதனை பீடித்துள்ள அறியாமை, காமம், கர்மம் என்ற மூன்று முடிச்சுகளில் இருந்தும் விடுவிக்க கூடியது. காயத்ரி மன தினை தூய்மைப்படுத்தி மனச்சக்தியினை வளர்க்க வல்லது. தொடர்ச்சியான சாதனையினால் அஷ்ட சித்திகளையும் தரவல்லது. காயத்ரி மனிதனை சக்தியுள்ளவனாகவும் ஞானவானாகவும் ஆக்குகிறது. இறுதியாக காயத்ரி சாதகன் பிறப்பு இறப்பு என்ற சுழல்ற்சியிலிருந்து விடுபட்டு முக்தி எனும் மோஷத்தினை அடைகிறான். 

தொடர்ச்சியான சாதனையினால் மனம் தூய்மை அடைகிறது. அதனால் மனம் நற்குணங்களினால் நிறைகிறது. தொடர்ந்து சாதனையினை புரிந்து வரும் போது மனதில் நல்ல சம்ஸ்காரங்கள் பதிகின்றன. மன தில் எண்ணுவதைப்போல் மனிதன் உருவாகிறான் என்பது உளவியல் விதியாகும். மனதினை நல்ல எண்ணக்களில் பழக்கும் மனிதனின் வாழ்க்கை மனதில் நல்ல எண்னங்களை ஈர்த்து நல்வாழ்க்கை அமையத்தொடங்குகிறது. காயத்ரி சாதனையில் காயத்ரி தேவியின் உருவை எண்ணி தியானிக்க தொடங்கும் மனது இந்த ஆற்றலைப்பேறத்தொடங்க்குகிறது. இடது மூளையில் பதியப்படும் எண்ணங்கள் சம்ஸ்காரங்கள் எனப்படும் (இவை நேரடியாக ஆழ்மனதில் பதியும்). இப்படி பதியும் எண்ணங்களை திரும்ப திரும்ப பதிப்பிக்கும் போது அந்த சம்ஸ்காரங்கள் வலிமையடைகின்றன. இதன்பயனாக மனதில் பழக்க வழக்கங்களும் செய்கைகளும் உருவாகின்றன. (இவை நல்லவற்றிற்கும் கெட்டவற்றிற்கும் பொதுவானது), எவன் ஒருவன் தெய்வீக எண்ணங்களை தொடர்ச்சியாக பதிப்பித்து தியானத்தின் மூலமும் தாரணை மூலமும் தனது மனதினை தெய்வத்தன்மை ஆக்குகிறானோ அவன் தெய்வத்தன்மை உடையவனாகின்றான். அவனது பாவனையினால் தூய்மை அடைகின்றான். தியானிப்பவனும் தியானமும், ஏகாக்கிரமும்(மன ஒருமை) ஏகாக்கிரம் செய்பவனும் ஒன்றாகின்றனர். இதுவே சமாதி எனப்படும், இது தொடர்ச்சியான உபாசனயினால் கிடைக்கின்றது. இவற்றை காயத்ரி உபாசனை செய்பவன் சுலபமாக அடைகின்றான். .

அடுத்த பதிவில் காயத்ரி மந்திர சித்தி அளிக்கும் புரஸ்சரணம்

1 comment:

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...