குரு நாதர் ஆசியுடன்
குரு நாதர் ஆசியுடன்.............
இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!
இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!
ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ
ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ
ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ
ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !
ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ
ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!
ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ
இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!
மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here
2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்
நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.
அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே
உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!
ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே
இங்கே
Friday, April 27, 2018
ஸ்ரீ அரவிந்தரின் தெய்வீக வாழ்க்கை வாசிப்புக்கள
Thursday, April 26, 2018
ஸ்ரீ அரவிந்தரின் சாவித்ரி காவியச் சுருக்கம் - ஸ்ரீ காயத்ரி சாதனை
Friday, April 20, 2018
பகவத் கீதை - யோக விளக்கம் 01
Wednesday, April 18, 2018
சோதிடமும் இயற்கையும்
அக்ஷயதிருதியை பரிசு!
- ஆயுள் ஸ்திர மந்திரம்,
- நோய் தீர்க்கும் சஞ்சீவினி மந்திரம்,
- புத்தியை சீர்படுத்தும் மந்திரம்,
- கணவன் மனைவி மனம் ஒன்று பட்டு குடும்ப ஒற்றுமை சீராக்கும் மந்திரம்,
- பண ஆகர்ஷண லக்ஷ்மி மந்திரம்,
- இரகசிய பகைமை அகற்றும் மந்திரம்,
- ஆபத்துக்களை தடுக்கும் மந்திரம்,
- மனச்சுத்தி மந்திரம்,
- பெண்களுக்கான சௌபாக்கிய மந்திரம்,
- வாழ்வில் நன்மையை ஈர்க்கும் ஸ்வஸ்தி மந்திரங்கள்,
- மன சமனிலை ஏற்படுத்தி நிம்மதி ஏற்படுத்தும் சாந்தி மந்திரங்கள்,
- மனதினை வலுப்படுத்தும் சிவ சங்கல்ப மந்திரங்கள்,
- தேவர்களும் இயற்கை சக்திகளும் ரக்ஷிக்கும் ரக்ஷணை மந்திரங்கள்,
- தேவ திருப்தி மந்திரங்கள்,
- தீர்த்த ஆசீர்வாதம்,
- அக்ஷதை ஆசீர்வாதம்,
- குங்கும ஆசீர்வாதம்
- மங்கள மந்திரங்கள்
Monday, April 16, 2018
காயத்ரி குப்த விஞ்ஞானம் பாடங்கள் 21, 22, 23 & 24
பாடம் 21 & 22
பாடம் 23 & 24
- காயத்ரி குப்த விஞ்ஞானம் பாடம் 01 & 02
- காயத்ரி குப்த விஞ்ஞானம் பாடம் 03 & 04
- காயத்ரி குப்த விஞ்ஞானம் பாடம் 05 & 06
- காயத்ரி குப்த விஞ்ஞானம் பாடம் 07 & 09
- காயத்ரி குப்த விஞ்ஞானம் பாடம் 08 & 10
- காயத்ரி குப்த விஞ்ஞானம் பாடம் 11 & 12
- காயத்ரி குப்த விஞ்ஞானம் பாடம் 15 & 16
- காயத்ரி குப்த விஞ்ஞானம் பாடம் 17 & 18
- காயத்ரி குப்த விஞ்ஞானம் பாடம் 19 & 20
- காயத்ரி குப்த விஞ்ஞானம் பாடம் 21 & 22
- காயத்ரி ஸ்ம்ருதி 01
- காயத்ரி ஸ்ம்ருதி 02
- காயத்ரி ஸ்ம்ருதி 03
Monday, April 02, 2018
தினசரி சாதனை - சில அனுபவ குறிப்புகள்!
- தினசரி ஒழுங்காக உங்கள் ஆச்சாரியர் உபதேசித்த படி சாதனை செய்து வரவேண்டும்.
- உங்கள் சாதனையில் மாறுதல் செய்வதாக இருந்தால் உங்கள் உபதேச குருவுடன் உரையாடி அவர் ஆலோசனைப்படி மட்டும் செய்யுங்கள். எக்காரணம் கொண்டும் தன்முனைப்பில் அதிகம் செய்ய வேண்டும் என்ற பேராசையில் முயற்சிக்க வேண்டாம். திருமூலர் கூறிய "ஈசனோடாயினும் ஆசை அறுமின்" என்ற வார்த்தைகளை ஞாபகம் வைத்து சாதனையில் மெதுவாக, அமைதியாக ஆனால் உறுதியாக முன்னேறுங்கள்.
- ஆச்சாரியாரிடமிருந்து பதில் கிடைக்கவில்லை என்றால் எக்காரணம் கொண்டும் எந்த வித மனக்குழப்பங்களையோ, தாம் கவனிக்கப்படவில்லை என்ற மனக்குறையையோ, தர்க்கிக்கவோ செல்லாதீர்கள். உங்களுக்கு உபதேசிக்கப்பட்டதை தொடர் ச்சியாக பயிற்சி செய்யுங்கள். நீங்கள் சரியான பக்குவமடைந்தால் எவராலும் உங்களுக்கு ஆன்ம உயர்வை தடுக்க முடியாது என்ற பிரபஞ்ச உண்மையை மனதில் வையுங்கள்.
- ஆச்சாரியார் எக்காரணம் கொண்டும் தமது சொந்த விருப்பத்தில் இவர் எனக்கு அதிக உதவி செய்கிறார் அதனால் அவரிற்கு உயர்ந்த சாதனா இரகசியங்களை உபதேசிப்போம் என்று உபதேசம் செய்ய எந்த அதிகாரமும் இல்லை என்ற உண்மையை அறியுங்கள்.
- ஒருவர் முன்னேறுவது அவரவர் சொந்த முயற்சியும், சாதனையில் உள்ள சிரத்தையுமே.
- மற்ற சாதகர்கள் என்ன சாதானை செய்கிறார்? அவரிற்கு ஏன் வேறு விதமாக சாதனை செய்யச்சொல்லியுள்ளார்? போன்ற விஷயங்களில் மனதை செலுத்தாதீர்கள். இது முழுமையாக உங்கள் ஆன்மீக முன்னேற்றத்தை தடை செய்யும்.
- உங்களுக்கு சந்தேகம் எதுவும் இருந்தால் எதுவித பயமும் இல்லாமல் நேரடியாக உபதேச ஆச்சாரியரிடம் உரையாடுங்கள். வீணான மனக்குழப்பங்களால் வேறு எவரிடமும் உரையாடுவது மீண்டும் உங்கள் சாதனையில் மனக்குழப்பங்களை ஏற்படுத்தும்.
- காயத்ரி சித்த சாதனைகளில் உள்ள பண்புகள் உங்களில் வளர்ந்து வருவதை உறுதிப்படுத்தும் படி உங்களை நீங்கள் உருவகப்படுத்துங்கள். ஏதாவது தவறு நடந்துவிட்டால் உடனடியாக அது அறியாமையில் நடந்து விட்டது என்பதை உணர்ந்து அது இனி ஏற்படாது என்று உறுதி எடுத்துக்கொள்ளுங்கள். குரு மண்டல அருளும், காயத்ரியின் தெய்வ குணங்களும் விழிப்படையும் என்னில் இத்தகையவை இனி நிகழாது என்பதை உறுதியாக உங்கள் ஆழ்மனதிற்கு சொல்லுங்கள்.
"உதவி கேட்காதவரே பலவீனமானவர்"
"உதவி கேட்காதவரே பலவீனமானவர்" முதலில் பார்க்கும்போது, உதவி கேட்பது பலவீனம் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் இதற்கு நே...
-
போகர் ஏழாயிரத்தில் சில பாடல்கள் - உரை நடையில் ஒரு வாசிப்பு ஓம் போக நாதர் பாதம் போற்றி இது போகர் ஏழாயிரத்தினை வாசித்து யோக தாந...
-
இதனுடன் தொடர்புடைய மற்றைய பகுதிகள் பகுதி - 01 பகுதி - 02 பகுதி - 03 பகுதி - 04 பகுதி - 05 பகுதி - 06 பகுதி - 07 ***************...
-
இந்த மனோன்மணி அகவல் எனது பாட்டனாரின் சித்தர் பாடல் தொகுப்பில் இருந்தது. எனது சிறுவயதில் எனது தந்தையார் கந்தர் சஷ்டி கவசம் படிப்பதை பார்த்த...