குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, July 07, 2013

தாந்திரீக மைதுனம் பற்றிய விளக்கம் - காயத்ரி சாதனை சித்தி அடைந்ததற்கான அடையாளங்கள் - 02


ஒரு சாதகன் தனது சாதனையில் அமரும்போது உடலுறவு கொள்ளும் நிலையே ஏற்படுகிறது. இதனையே தாந்திரீகத்தில் “மைதுனம் - உடலுறவு” எனக்குறிப்பிடுவார்கள், உடலுறவினை எப்படி பகிங்ரங்கப்படுதுவதில்லையோ அதுபோல் சாதனையும் இரகசியமாக செய்யப்படவேண்டியது. ஆன்மா பெண் கடவுள் ஆண், கடவுளாகிய ஆணிடமிருந்து தெய்வசக்தியாகிய விந்தினை பெற்றுக்கொள்ளும் செய்முறையே சாதனை, இதனை இன்னும் ஒரு படி மேலே க்ருஷ்ண பக்தர்கள் “பக்தி” மார்க்கமாக கண்டறிந்துள்ளார்கள். ஆன்மாவும் கடவுளும் இரண்டறக்கலக்கும் போது உண்டாகும் அதீத இன்ப உணர்வே சமாதி என யோக மொழியில் குறிப்பிடப்படுகிறது. தாந்திரீகம் மனித அடிப்படையிலான உடலுறவிலிருந்து இந்த நிலையினை அடைவதற்குரிய வழியினை போதிக்கிறது. காயத்ரி உப நிஷத்தும் ஸாவித்ரி உப நிஷத்தும் இப்படியான பல தெய்வீக உறவுகொள்ளலை பற்றி விபரிக்கின்றன, ஸவிதாவும் ஸாவித்ரியும் இணையான ஜோடிகள். ஸாவித்ரி (காயத்ரி) சாதனையினை தொடங்கும் சாதகனது ஆன்மாவும் பஞ்சகோசங்களும் யோனியாக மாறுகின்றது. இந்த யோனியினுள் பிரபஞ்ச பேரின்ப சக்தி விந்தாக பாய்கின்றது. இந்த சக்திப்பாய்ச்சலே “சக்திப்பரிமாற்றம் – ஸக்திபட்” என அழைக்கப்படுகிறது. இந்த சக்திப்பரிமாற்றம் கணவன் மனைவியாக சாதனைபுரிவபர்கள் உடலுறவின் மூலமும் பரிமாறிக்கொள்ளலாம் (இது வாமாச்சார கௌலாச்சார தாந்திரீக மார்க்கத்தில் இருப்பவர்கள் மட்டும்). அல்லாமல் வெறுமனே பிராண மன கோசங்களினூடாகவும் ஒருவரிலிருந்து ஒருவருக்கு பரிமாறிக்கொள்ளலாம். பிரபஞ்ச மூல சக்தியினை வசப்படுத்திய உயர் நிலை சாதகர் இந்த சக்திபரிமாற்றத்தினை எந்த நிலையிலும் செய்யலாம். இதுவே உண்மையான தீட்சை எனப்படும். உலகில் உள்ள ஒவ்வொரு சக்தியும் இத்தகைய ஆண் பெண் என்ற இரு சக்திகளின் இணைவிலேயே தோற்றம் பெறுகின்றன. மின்சாரம் என்பது நேர் அயனும் மறை அயனும் இணைவதால் உருவாகும் ஒரு சக்தி, இத்தகைய சக்தி கலப்புகளையே தாந்திரீகம் மைதுனம் என அழைக்கிறது. இந்த சக்தி கலப்பின் குறியீடே தாந்திரீகத்தில் மைதுனம் எனப்படுகிறது.


சாதனை என்பதன் பொருள் மேலான சக்தியுடன் ஒன்றற கலந்து தோடர்ச்சியான பயிற்சியின் மூலம் புதிய சக்தி ஒன்றினை உருவாக்குவதே, அதனையே சித்திகள் எனப்படுகிறது. இந்த சித்திகளை அடைவதற்கு சில முன்தகுதிகள் உள்ளன. ஒரு தூர பயணிக்கும் மனிதன் தனது பயணத்திற்கு தேவையான உணவு, உடை, பணம் இல்லமல் தனது பயணத்தை பூர்த்தி செய்ய முடியாததுபோல் சாதனையாகிய ஆன்ம பயணத்தின் மூலம் தெய்வ சக்தியினை அடைய முயற்சிப்பவர்கள் சரியான ஒழுக்கங்களையும், மன விருத்திகளையும் கொண்டிருத்தல் அவசியம். ஒழுக்கமற்ற வாழ்க்கையினையும், பாவங்களையும் செய்யும் ஒருவர் ஒருக்காலும் சித்திகளை அடைய முடியாது. ஒரு சாதகர் தனது மனம், சொல், உடலளவில் தன்னை எப்போதும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். இதன் பின்னரே சித்திகளைப்பற்றி ஒருவர் நினைக்கத்தொடங்க வேண்டும். 

காயத்ரி சாதனைமூலம் ஒருவன் ஸவிதாவாகிய இறைசக்தியிடமிருந்து ஸாவித்ரி (காயத்ரி) எனும் யோனியில் அதனைப்பெற்று தெய்வசக்தியினை பதித்து ஆன்ம வளர்ச்சியான கருவினை உருவாக்கி கர்ப்பமுறுகின்றான். இந்த ஆன்ம கர்ப்பமுறுதலுக்கு ஒருவன் தனது சரியான ஆன்ம மனப்பண்புகளை  உருவாக்கிக்கொள்ளவேண்டும். இந்த நிலை ஒருவித இடை நிலையாகும், அதாவது பெண் ஒருத்தி கர்பமுற்றிருக்கும் போது இருக்கும் கவனமும், பராமரிப்பும் அவசியமனது போன்று ஆன்ம முன்னேற்றத்திற்கு அவசியமாக கவனிக்கப்படவேண்டிய நிலை. இந்த நிலையில் பொதுவாக சாதகர்களுக்கு உடலில் வலிகள், உலக வாழ்க்கையில் பற்று அற்ற நிலை, எதனையும் மனம் ஒன்றி செய்யமுடியாத நிலை, சோம்பல் போன்றவை அதிகமாக காணப்படும். சாதனையினை தொடர்ந்து செய்துவரும்போது தனது முதிர்ச்சியின் மூலம் அடுத்த நிலையினை அடைவான். அதாவது சுகப்பிரசவம் போன்ற நிலை. இந்த இடை நிலையில் இருக்கும் போது சாதகர்கள் மிகக்கவனமாக இருக்க வேண்டும். உணவு, தினசரி ஒழுக்கங்கள், மன அமைதி, ஓய்வு என்பவை மிகவும் அவசியாமான ஒன்றாகும்.


மனிதன் தந்து எந்த வேலையினை தொடங்கும் போது இடையூறு வராமல் இருப்பதில்லை. அந்த இடையூறுகளை சகித்து தனது ஆற்றல் மூலம் எதிர்கொண்டு அதனை சவாலாக ஏற்றுக்கொண்டு எதிர் நோக்குபவன் மட்டுமே வெற்றியடைகிறான். அது போல சாதனை புரிய ஆரம்பிக்கும் சாதகன் ஆரம்பத்தில் மனம் தீய உணவு ஒழுக்கங்கள், சோம்பல், பொறுமையின்மை, வெறுப்பு, கோபத்தில் துன்புறுத்தும் நிலை, நியாயம் அற்ற தன்மை, தீய சகவாசங்கள் என்பவற்றை நோக்கி செல்ல முயற்சிக்கும். மிகுந்த கவனத்துடன் சாதனையினை இந்த விடயங்களில் இருந்து விலத்தி சாதனை செய்பவரே சித்தியினை அடைகிறான். இவ்வாறு ஒழுக்கங்களை பயிற்சிக்காமல் திருட்டு, ஊழல் மற்றவரை துன்புறுத்த வேண்டும் என்ற மன நிலை போன்றவற்றை கொண்டிருப்பவர்கள் எக்காலத்திலும் சித்தியினை அடைய முடியாது. சாதனையில் சித்தியினை விரும்புபவன் தனது மன, உடல் ஒழுக்கங்களை மிகுந்த கவனத்துடன் கடைப்பிடித்து பலன் களைப்பெறவேண்டும். 

இது கர்ப்பமுற்ற பெண் மிகுந்த கவனத்துடன் கர்ப்ப காலத்தில் தனது உடல, மனங்களை கவனித்து பிள்ளையினை ஈணுவது போன்றது. ஒரு சாதகனுக்கு பிள்ளை அவனது சாதனையில் ஏற்படும் சித்தி ஆகும். இந்த சித்திகளில் மிக உயர்ந்த நிலை பிரம்மத்துடன் இரண்டறக்கலந்த நிலையான தூரியாதீதம் எனும் ஜீவன் முக்த நிலையேயாகும். இது தனியுணர்வு பிரபஞ்ச உணர்வுடன் கலந்த நிலையாகும். இதுவே காயத்ரி சாதனையினால் பெறப்படும் அதீத சித்தியாகும். இப்படி சித்தியினை சாதனியின் மூலம் அடைந்தாலும் அடைந்தவுடன் மிகக்கவனமாக இருத்தல் வேண்டும். ஏனெனில் பிறந்த குழந்தை வளரும் வரை நோயிற்கும், அதனை தூக்கும் போது மிகக்கவனத்துடன் கையாள்வது போன்று கவனமாக கையாளவேண்டும். ஒரு தாய் தனது பிறந்த குழந்தையினை மிகுந்த கவனத்துடன் போசிப்பது போன்று பெற்ற சித்தியினை மிககவனமாக தவறான வழியில் பயன்படுத்தாமல் நன்மைக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். அப்படி நல்வழியில் வளர்க்கப்பட்ட சித்தியே ஞானத்தினை தரும். அப்படியல்லது ஒழுக்கமில்லாமல் வளர்க்கப்பட்ட குழந்தை பெற்றோரை கவனிக்காததுபோல் தவறாக உபயோகிக்கப்பட்ட சித்திகள் சாதகனிற்கு துன்பத்தினை தரும்.

சாதகரது சாதனை முழுமையாக சித்தியடையும் வரை சாதகரில் ஒருவித மந்த நிலையும், சோம்பலும் காணப்படும். சாதனை வளர்ச்சியடையும் போது அது சித்திக்கான அறிகுறிகளை ஏற்படுத்தத்தொடங்க்கும். சாதகன் அறிவு மற்றவர்களது அறிவினை விட மேம்பட்ட ஒன்றாக பிரகாசிக்கத்தொடங்கும், உடல், மனம், பிராணன், அறிவுகளில் ஒளிவீசத்தொடங்கும், பஞ்சகோசங்களும் மென்மையாகத்தொடங்கும். இதனை கீழ்வரும் அறிகுறிகளைக்கொண்டு சாதனை சித்தியாகத்தொடங்குகிறது என அறிந்து கொள்ளலாம்;
  1. உடல் மெதுவாக இருப்பது போன்று இருக்கு, பலமணி நேர தியானத்தின் போதும் உடலில் வலி தோன்றாமல் தொடர்ச்சியாக இருக்க கூடிய ஆற்றல் உண்டாகும். மனம் மிகுந்த உற்சாகத்துடன் எந்த விடயத்தினையும் அணுகத்தொடங்கும். கவலை, பதட்டம், பொறாமை போன்ற தீய எண்ணங்கள் மறையத்தொடங்கும்.
  2. உடலில் புதுவித மணம் வெளிப்படும்
  3.  தோல் மென்மையாகவும் பிரகாசமாகவும் மாறும்.
  4. தாமசிக உணவுகளில் (மாமிசம்), பழக்கவழக்கங்களில் மனம் தானாகவே விருப்பமற்று போகும். 
  5. சுய நலம் அற்றுபோய் மனம் அனைத்து உயிர்களைப்பற்றியும் கரிசனை கொள்ளத்தொடங்கும்.
  6. கண்களில் ஒரு வித ஓளி வீசும்.
  7. சாதகன் தான் சந்திக்கும் நபர்களதோ அல்லது சிந்திக்கும் வேலையினைப்பற்றியோ சரியான முடிவிற்கு கண நேரத்திற்குள் வரும் ஆற்றல் உண்டாகும்.
  8. மற்றவர்களது எண்ணங்களையும் உணர்வுகளையும் நொடிப்பொழுதில் புரிந்துகொள்ளும் ஆற்றல்.
  9. எதிர்காலத்தில் நடக்கப்போவதை அறியும் ஆற்றல்
  10. தனது தெய்வீக ஆற்றலகளைக்கொண்டு மற்றவர்களுக்கு நல்லதோ கெட்டதோ செய்யும் ஆற்றல்.

இத்தகைய சித்திகள்  வர ஆரம்பித்தவுடன் சாதகன் கவனமாக அதனை நல்லறிவுடன் சரியான வழியில் மாத்திரம் உபயோகித்து வரவேண்டும், அத்தகைய சாதகன் தனது குழந்தையினை நல்வழியில் வளர்த்து முதுமைக்காலத்தில் சந்தோஷமாக இருக்கும் தாயினைப்போன்ற சந்தோஷத்தினைப்பெறுவான், அல்லது அற்பவிடயங்களுக்காக இவற்றை பாயன்படுத்தும் சாதகன் ஒரு தாய் தனது குழந்தையினை இழந்தால் ஏற்படும் துன்பத்திற்கு ஆளாவான். 

4 comments:

  1. தத்துவாம்ச ரீதியில் மனம் கவரும் சாதனா முறைகளை, செயல் விளக்க முறையில், உளவியல், உடற்கூறியல் மற்றும் நரம்பில் ஆய்வுகள் ஊடாய் நிரூபிக்கும் சாத்தியங்கள் உண்டா?

    ReplyDelete
  2. நிரஞ்சன் தம்பி//

    நிச்சயமாக நிருபிக்கப்பட முடியும் என்பதனை ஹரித்துவாரில் அமைந்துள்ள பிரம்மவர்ச்சாஸ் ஆய்வு நிறுவனம் முறையான விஞ்ஞான ஆய்வு மூலம் நிருபித்து வருகின்றன. அடிப்படை பிரச்சனை தத்துவாம்ச ரீதியில் மனங்கவரும் சாதனா அமிசங்கள் எனும் பொது இவற்றை நடைமுறையில் பயிற்சித்து பார்க்க முடியாது என்று எண்ணுகிறீர்கள் என நினைக்கிறேன்.

    தத்துவங்கள், விதிகள் என்பன மனித சமூகத்தின் அனுபவ அறிவின் செறிவாக வந்தவையே! அவற்றை பயிற்சிப்பதற்கு தக்க சூழலை நாம் ஏற்படுத்தினால் கட்டாயம் அவற்றை நாம் பயிற்சித்து அனுபவிக்க முடியும்.

    ReplyDelete
  3. nanri unkaludaya pathippukalai aarvathudan padithu naan vaalkaiyil tediya pala vidayamkali arithullen mikka nanri todaraddum unkal tondu....

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...