குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, February 27, 2012

ஆன்மீகமும் மதங்களும்


இன்றையகாலகட்டத்தில் மதங்கள் என்பன ஆன்மீகத்துடன் கலக்கபட்டு பெரும் குழப்பத்தில் மக்களை ஆழ்த்தி வைத்திருக்கின்றன என்பது மறுக்கமுடியாத உண்மை.இந்த சிறுபதிவில் மதம், ஆன்மீகம் என்பவற்றுக்கிடையிலான வேற்றுமைகள் எவை என்பது பற்றிப் பார்ப்போம். மதம் அல்லது சமயம் என்படுவது இரு கூறுகள் உடையதாகவே காணப்படுகிறது. 
  • ஒன்று உண்மையான ஆன்மீகம் 
  • மற்றது சமயம் என்ற பொதுக்கட்டமைப்பு. 

உண்மையான ஆன்மீகம் என்பது மனிதனை தான் யார் என்பதனை அறிந்து தனக்கு மேலுள்ள ஒரு சக்தியுடன் ஒன்ற செய்யும் தனிமனித செயற்பாடு. இந்த செயற்பாடுகளுக்குள் அடங்கும் விடயங்கள் மெதுவாக குழுமக்கட்டமைப்பிற்குள் வரும் போது சமயம் தோற்றமாகிறது. எப்படியென்றால் ஒருவன் தான் அனுபவித்த இன்பத்தினை, உணர்வினை பகிரங்க படுத்த முனையும் போது அது அவரை சூழ உள்ள பலரிற்கு வியாக்கியானப்படுத்தப்படுகிறது. பின்னர் அதனை ஒழுங்காக நடைமுறைப்படுத்த ஒரு அங்கீகரிக்கப்பட்ட குழு உருவாகிறது, அவர்களே அதற்கு அதிகாரமுடையவர்களாகின்றனர், பின்னர் அவர் மட்டுமே அதிகாரம் உடையவர்களாகின்றனர், இது ஒரு அதிகார அலகாக, அரசியல் அலகாக தோற்றம் பெறுகிறது. இந்த மாயையில் சமூகம் சிக்கி உண்மை ஆன்மீகத்தினை சமூகம் மறக்கின்றது. 

இதுவே எந்தவொரு மதத்தினதும், ஆசிரமங்களதும், மடங்களது வரலாறாக இருக்கிறது, கிருஸ்தவம், இஸ்லாம், இந்து மதம் உட்பட எல்லாம் இப்படி கலப்படமடைந்த சரக்காகவே இருக்கிறது. உண்மையான வழிமுறை அதை உணர்ந்து உரைத்த முதல் மனிதனுடன் அற்றுப்போகிறது, யேசுவுடன், நபிகளுடன், கிருஷ்ணருடன், ரிஷிகளுடன், சித்தர்களுடன் அவை அற்றுப்போகின்றன. 

அதுபோல் ஆன்ம உயர்விற்கு தனிமனித சாதனை மட்டுமே சிறந்த வழி, மற்றைய எந்த கூட்டமும், ஆசிரமும் ஒரு வகை களியாட்டமாகவே அமையும் (அதுவும் மன மகிழ்ச்சியிற்கு தேவையான ஒன்றுதானே!), அது தவிர ஆன்ம விழிப்பிற்கு உதவாது. 

4 comments:

  1. தனி மனித சாதனைகள்தான் ஆன்மீக உயர்விற்கு வழி வகுக்கும் என அழகாக விளக்கி இருக்கிறீர்கள்..

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    http://anubhudhi.blogspot.in/

    ReplyDelete
  2. சிறப்பான பதிவு ! நன்று ! நன்றி !

    ReplyDelete
  3. Thanks for the posting after a long wait.

    ReplyDelete
  4. Thanks for the posting after a long wait.

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...