குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, June 11, 2023

தந்திரசாஸ்திரத்தில் பசுபலி - விலங்குகளைப் பலியிடுதலும் யாழ்ப்பாணத்து வேள்வியும்

ஒரு அறிவிலி இரகசியமாக பாரம்பரியமாகச் செய்ய வேண்டிய சடங்கினை தனது பிரபலத்திற்காக முக நூலில் பதிய அது இப்போது பேசுபொருளாகியிருக்கிறது. இதைப்போல் KFC slaughter house வீடியோ வெளியாகியவுடன் உருக்கமாக KFC ஐ மூடச்சொல்லி போராடுவார்கள் என்று நம்புவோம். 
யாழ்ப்பாணத்து மரபில் கிடாய் - சேவல் பலியிடுதல் வேள்வி என்று சொல்லப்படும். 
பலியிடுதல் என்பது தொன்று தொட்டு மனிதகுலத்தில் இருந்து வரும் மரபு.
பலி என்பதன் அடிச் சொல்; பலம் என்பதாகும்; ஒருவன் தான் உண்மையான பலத்தைப் பெற எல்லையற்ற பலமுடைய இறைவனுக்கு தன்னை அர்ப்பணிக்க வேண்டும் என்று யோக தந்திர சாஸ்திரம் கூறுகிறது; எம்மிடம் இருக்கும் உயர்ந்த ஒன்றை ஈஸ்வரனுக்கு அர்ப்பணிப்பதன் மூலம் நாம் பலத்தைப் பெறலாம் என்பதே அடிப்படைக் கோட்பாடு. 
இந்த பலியிட்டு படைத்தல் என்பது இந்த அடிப்படையில்.. 
பலியிடுதல் பைரவ - சக்தி வாமாச்சார தந்திர முறையினைச் சார்ந்தது; இது மிகவும் procedural ஆக எப்படிச் செய்ய வேண்டும் என்ற விதி இருக்கிறது. காளிகா புராணம் எப்படி முறைப்படி மகிஷ (எருமை) பலி தேவிக்குத் தருவது என்பதைப் பற்றி விபரிக்கிறது. 
ஒரு மகிஷ பலியின் கட்கம் - வாள் மந்திரங்களால் சுத்திகரிக்கப்பட வேண்டும். வெட்டப்படும் மகிஷத்தின் முதல் இரத்தம் ஒரு துளியும் தரையில் சிந்தக்கூடாது; நைவேத்திய பாத்திரத்தில் பிடித்து தேவியின் கர்ப க்ரஹத்தில் எடுத்துச் சென்று தகுந்த மந்த்ரம், முத்திரைகளுடன் அர்ப்பணிக்க வேண்டும். பலிதருபவன், பூசாரி, அனைவரது தகுதிகள் ஒவ்வொன்றும் விரிவாக விபரிக்கப்பட்டுள்ளது. 
யாழ்ப்பாணத்தின் அனேக கோயில்கள் வேள்வி எனப்படும் அஜ - ஆட்டுக் கிடாய், குக்குட - சேவல் பலி என்று தந்திர சாஸ்திர மரபு இருந்திருக்கிறது. குறிப்பாக வைரவர் கோயில்களிலும், அம்மன் கோயில்களிலும். இருந்தவை ஆறுமுக நாவலர் காலத்தில் ஆகம முறைப்படி வைதீக முறைகள் புகுத்தப்பட்டன. 
முற்காலத்தில் போர்க்குணம் பெறுவதற்கும் தன்னை தற்காத்துக்கொள்வதற்கு குறித்த ஒரு வீர பாவத்திற்கு தனது மனதைப் பழக்கும் ஒரு சடங்காக நாம் இதை கருதலாம். 
காளிகா புராணம் அரசர்களுக்கே உரியதான நரபலி பற்றிக் கூறுகிறது. இதன் அடிப்படை களத்தில் உணர்ச்சிகளற்று எதிரியைக் கொல்ல மனவலிமையைப் பெறுவதற்கான ஒன்றாகும். 
ஒன்றை எதிர்த்து வெல்லும் போர்க்குணம் பெற பலி அவசியம், இப்படி இல்லாவிட்டால் அந்த சமூகம் வத்தையும் சொத்தையுமாக ஆற்றல் அற்று அடிமைப்பட்டு விலங்குகளாக இருப்பார்கள் என்று சொல்கிறது தந்திர சாஸ்திரம்; 
நாம் பரிணாம முன்னேற்றத்தில் புத்தியின் ஆற்றல் பெருகும் போது இப்படி பலியிட்டு பலம் பெறத்தேவையில்லை என்று அறிந்துகொண்டதால் யோக ஞான மார்க்கங்கள் உருவாகியது.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...