குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, October 25, 2017

அகத்தியர் கூறும் வைத்தியன் இலக்கணம்

 
 
பார்தனில் வேதந்தன்னைப் பார்த்ததில் பெரியோன் சொன்ன
சீர்பெரு வாகடத்தைச் செய்பவர் குணங்கள் கேளாய்
நேருரை மாறானாகில் நினைவுதன் மனைவியன்றி
யாரியுமுடன் பிறப்பா என்றவை யவன் வல்லானே
பொய்யது பேசானாகப் புகழறிவுடையானாக
மெய்யது சொல்வானாக வினங்குரு மறவானாக
தொய்யவே தாட்சியுண்டாய் சொல்மன திரக்கமுண்டாய்
நைவினைப் பாவமின்றி நன்மையில் நடப்போன்றானே!
நீதியாய் வாகடத்தை நெறியுடன் திங்கள் தோறும்
ஓதிய பொருள்கடன்னை யுசாவியே யிருப்பானாகில்
தீதிலானவைகளுள்ளான் செகம்திலிருக்க் மட்டு
மேதினியதனில் காலன் விதியில்லால் வியாதியுண்டோ
சினவெறியேறு போலதிடமுள்ளான் மனதுமுள்ளான்
கனமெனவுயிரைக்காக்குங் கருணையான் கதித்தசீரில்
இனமுள்ளானேத்தமுள்ளா னெற்கையால் தோற்றமுள்ளான்
மனமதில் தயவுமுள்ளான் வைத்தியனாகு மென்றே
 
அகத்தியர் வைத்தியம் 2000 நூலில் ஒரு வைத்தியன் பெற்றிருக்க வேண்டிய மனப்பண்புகள் பற்றி மேலேயுள்ள பாடல் அறிவிக்கிறது. 
 
எமக்கு முன்னர் இந்த உலகில் வேதம் எனும் அறிவின் துணைகொண்டு பிணிதீர்க்கும் வாகடத்தை தமது அனுபவத்தாலும் அறிவாலும் தொகுத்துத்தந்த பெரியோர்கள் வைத்தியனுக்குரிய குணங்கள் என கீழ்வரும் குணங்களை வரையறுக்கிறார்கள்
  1. சொன்ன சொல் மாறாதவனாக
  2. தனது நினைவில் மனைவியை தவிர அனைத்துப் பெண்களையும் சகோதரியாக எண்ணும் மனப்பக்குவம் உள்ளவனாக
  3. பொய் உரைக்காதவனாக
  4. புகழும் அறிவும் உடையவனாக
  5. உண்மை கூறுபவனாக
  6. தனது குருவை மறவாதவனாக
  7. மனதில் தாட்சணியமும் இரக்கமும் உடையவனாக
  8. பாவச்செயல் செய்யாமல் நன்மையில் நடப்பவனாக
  9. ஒவ்வொரு மாதமும் வைத்திய நூற்களை கற்றவனாக
  10. கற்றதன் பொருளை எப்போதும் மனதில் ஆராய்ந்தவனாக
  11. இந்த புவியில் வாழுமட்டும் யமனின் விருப்பம் இன்றி எவருக்கும் உயிர் பிரியுமேயன்றி வியாதியால் அன்று என்பதை உணர்ந்தவனாக
  12. சினம் கொண்ட சிங்கம் போன்ற மனத்திடம் உடையவனாக
  13. தன்னை நாடிவரும் உயிரை காக்கும் கருணை உள்ளவனாக
  14. நல்ல உயர்ந்த பண்புகள் கொண்ட குடும்பத்தில் உதித்தவனாக
  15. நல்ல தோற்றமுள்ளவனாக
  16. மானதில் தயை உள்ளவனாக
இருக்க வேண்டும் என வரையறுத்துள்ளார்.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...