குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, June 29, 2015

ஆத்ம ஞான யோக சபா தலைவருடனான கலந்துரையாடல்.

*****************************************************************
ஆத்ம யோக ஞான சபை அகத்தியனின் மூல சபை என்று ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வரரால் உறுதியளிக்கப்பட்ட சபை. எழுபது வருடங்களுக்கு முன்னர் சென்னையில் குருநாதர் ஸ்ரீ கண்ணைய யோகியரால் ஆரம்பிக்கப்பட்டது. இதன் நோக்கம் அகத்தியர் ஆணையின் படி இறை ஆர்வம் உள்ளவர்கள் எதுவித வியாபர நோக்கமும் இன்றி, இறை சாதனைகளை குருமுகமாக கற்று முன்னேற வேண்டும் என்பது. சபை என்பது குருவை பிரதானமாக கொண்டது. அந்தக்காலத்தில் கண்ணையயோகீஸ்வரர் குருவாகவும், தலைவராகவும் இருந்து அகத்திய மகரிஷியால் வழிகாட்டப்பட்ட இறை சாதனையில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு சித்தி மனிதன் பயிற்சி, பரிணாம துரித பயிற்சி, காயத்ரி குப்த விஞ்ஞானம், சித்த யோக பயிற்சிப்பாடம், என பல்வேறு ஆத்ம, யோக, ஞான பயிற்சியுடன் கற்பிக்கப்பட்டு உயர்ந்த ஆன்மீக நிலை அடைந்தனர். இன்று உலகளாவிய யோக மையங்களை நடாத்திவரும் குருமார் பலரும் ஸ்ரீ கண்ணைய யோகியாரிடம் பாடம் பயின்றவர்கள், சபையின் சிறப்பியல்பு நிறுவன மயமாக்கல் இல்லை, கண்ணைய யோகியாரது காலத்தில் இலங்கையில் அவரது பிரதான முதன்மை சீடர்களில் ஒருவரான ஸ்ரீ காயத்ரி சித்தர் முருகேசு சுவாமிகளுக்கு சபை அமைக்க அனுமதி அளிக்கப்பட்டது. அந்த சபை இன்று முருகேசு சுவாமிகளது ஸ்ரீ காயத்ரி பீடம் சார்வதேச நம்பிக்கை நிதியமாக உருப்பெற்றுள்ளது.

ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வரரது காலத்திலேயே அவரிற்கு பின்னர் சென்னை ஆத்ம யோக ஞான சபை முதன்மை மாணாக்கர்களான ஸ்ரீ இராமச்சந்திர முதலியார் ஐயா அவர்களிடமும், அருட்திரு. இராஜயோகி இராஜமோகன் ஐயா அவர்களிடமும் கையளிக்கப்பட்டது. இன்று குருநாதர் பணியாக இராஜமோகன் ஐயா அவர்கள் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வரர் மாணவர்களுக்கு தொகுத்து அளித்த பாடங்களை ஆன்மீக படைப்புகள் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டு வருகின்றன. இன்று சபையின் தலைவராகவும், குருவாகவும் இராஜமோகன் ஐயா அவர்கள் செயற்பட்டு வருகிறார்.
அதன் இலங்கை பணிகள் இலங்கை கிளையின் ஊடாக திரு. குமரகுரு, ஸ்ரீ ஸக்தி சுமனன், திரு துஷ்யந்தன் ஆகியோரால் முன்னெடுத்து வரப்படுகிறது. வெகுவிரைவில் ஆர்வம் உள்ள சாதகர்களுக்கு ஸ்ரீ கண்ணைய யோகீச்வரரது ஆத்ம யோக ஞான பாடங்கள் கிடைப்பதற்கான ஏற்பட்டுகள் செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் சென்னை சென்றிருந்த போது அருட்திரு. இராஜயோகி இராஜமோகன் ஐயா, ஸ்ரீ தனலட்சுமி அம்மையார் அவர்களுடன் நானும் சென்னை சபையின் செயலாளர் Dr. Pranav Bp உரையாடிய பின்னர் விடைபெறும் போது எடுத்துக்கொண்ட படம்.


2 comments:

  1. ஐயா,
    அருமை ஈடு இனையற்றது தங்களின் சேவை நன்றி அய்யா
    நன்றி
    வி.ரவீந்திரன்.

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...