குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, May 07, 2013

ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 27: நாமங்கள் 68 - 69


சக்ரராஜ-ராதாரூட-ஸர்வாயுத-பரிஷ்க்ருதாயை (68)
ஸ்ரீ சக்கரமான தேரின் மேல் எல்லா ஆயுதங்களும் புடைசூழ விளங்குபவள்

சக்ர ராஜம் என்பது லலிதையின் தேர், அது சகலவிதமான ஆயுதங்களையும் உடையது. ஆயுதங்கள் எனப்படுவது ஸுத்தவித்தையாகிய தூய அறிவினை அடைவதற்கான வழிமுறைகள். இதுவே பிரம்மத்தினை அறிவதற்கான வழிமுறைகள். இந்த தேர் ஒன்பது சில்லுகளை உடையது. சக்ர ராஜத்தினை சூழ மேலும் இரு தேர்களை உடையது. அதுபற்றி அடுத்த நாமங்களில் விபரிக்கப்படும். சக்ர ராஜம் லலிதாம்பிகை வசிக்கும் ஸ்ரீ சக்கரம் எனவே கூறப்படுகிறது. பரிஷ்க்ருத என்றால் அலங்கரிக்கப்பட்ட என்று பொருள்.

இந்த நாமத்தினை விளங்கிக்கொள்ள ஸ்ரீ சக்கரம் பற்றிய சுருக்கமான அறிவு அவசியம், ஸ்ரீ சக்கரம் ஒன்பது ஆவரணங்களையும் ஐந்து சக்தி சக்கரங்களையும், நான் கு சிவசக்கரங்களையும் உடையது. மேல் நோக்கிய முக்கோணங்கள் சிவச்சக்கரம் என்றும், கீழ் நோக்கிய சக்கரங்கள் சக்தி சக்கரங்கள் என்றும் கூறப்படும். இந்த இரண்டு சக்கரங்களும் சேர்ந்து நாற்பத்தி நான் கு முக்கோணங்களையும், நாற்பத்தி மூன்று தெய்வங்களையும் (44வது தெய்வம் லலிதை), எழுபத்தி ஒன்பது யோகினிகளும் வசிக்கின்றனர். ஸ்ரீ சக்கரத்தில் எல்லா தேவதேவியரும் உறைவதாக கூறப்படுவதால்தான் ஒருவன் எந்த தெய்வத்தினை பூஜிப்பதானாலும் ஸ்ரீ சக்கரத்திற்கு பூஜை செய்வது போதுமானது எனக்கூறப்படுகிறது. ஸ்ரீ சக்ரராஜ நிலையாயை எனும் 996 வது நாமம் தேவி ஸ்ரீ சக்கரத்தில் வசிக்கிறால் என்பதனை உறுதிப்படுத்துகிறது.

சக்ரராஜம் என்பது மூலாதாரம் தொடக்கம் ஆக்ஞா வரையிலான ஆறு சக்கரங்களையும் குறிக்கும். ரதா என்றால் அடிப்படை என்று பொருள். அருதா என்றால் கட்டுப்படுத்தல் என்று பொருள். ஸர்வாயுத என்றால் தூய அறிவு என்று பொருள். ஆறு சக்கரங்களும் தூய அறிவினை அடைவதற்கான அடிப்படை, ஆறாவது ஆக்ஞா சக்கரத்தினூடாக மனதினை கட்டுப்படுத்தலாம். முதல் ஐந்து சக்கரங்களும் பஞ்ச பூத அமிசமானவை, ஆக்ஞா சக்கரம் மனதினை குறிக்கும், தூய அறிவினை அடைவதற்கு பஞ்சபூதங்களையும் மனதினையும் கட்டுப்படுத்தும் ஆற்றலும் அறிவும் பெறவேண்டும். இந்த சக்கரங்களை கட்டுப்படுத்தும் போது சித்திகள் கிடைக்கின்றன. சுத்த வித்தை பற்றி பேசும் போது சிவ சூத்திரம் என்ன சொல்கிறது என்று பார்க்க வேண்டும். “ஸுத்தவித்யோதயாசக்ரேஸத்வ”, இதன் பொருள் சுத்தவித்தையின் மூலம் மட்டுமே சக்தியினை கட்டுப்படுத்த முடியும். இங்கு சக்தி என்பது சக்கரங்களை குறிக்கும். தூய அறிவின் மூலம் ஒருவன் சிவத்தன்மையினை அடையமுடியும். சிவத்தன்மை என்பது சிவத்துடன் ஒன்றிய நிலை. இந்த நிலையில் சிவத்தை தவிர வேறெதுவும் எஞ்சியிராது. இந்த நிலையில் அனைத்தும், எல்லோரும் சிவமாகவே தெரிவர். இந்த நிலை பிரபஞ்ச உணர்வுடன் ஒன்றிய நிலை எனப்படும். மாயை விலகிய பின்னரே சுத்த வித்தை சாத்தியமாகும். பகவத்கீதையில் கிருஷ்ணன் “ எல்லா தியாகங்களினதும் முடிவு எல்லையற்ற அறிவில் முடியும்” என்கிறார். எல்லையற்ற அறிவு என்பது பிரம்மத்தைப்பற்றிய அறிவு. இதன் விளக்கம் சக்கரங்களையும் மனதினையும் கட்டுப்படுத்தும் ஆற்றலினை பெறுவதன் மூலம் எல்லையற்ற அறிவினை பெறலாம். இதனை தவிர வேறு ஏதும் தேவை சாதகனுக்கு தேவையில்லை.

வாக்தேவிகள் தன்னை அறியும் இந்த உபாயத்தினை இவ்வளவு சூட்சுமமாக இந்த நாமத்தில் கூறியுள்ளார்கள்.

கேயசக்ர-ரதாரூட-மந்த்ரிணீ-பரிஸேவிதாயை (69)
கேயசக்ரமென்னும் தேரில் வீற்றிருக்கும் மந்த்ரிணீ சக்தியால் சேவிக்கப்பட்டவள்

முந்தைய நாமத்தின் உரையில் சக்ரராஜத்தினை சூழ இரண்டு தேர்கள் உள்ளன எனகூறப்பட்டது, அவற்றும் ஒன்று இந்த நாமத்தில் விபரிக்கப்படுகிறது. அதன் பெயர் கேயச்சக்ரம். இது மந்திரிணி தேவி என அழைக்கப்படும் சியாமளா தேவியின் தேர். இந்த தேவி பற்றி பத்தவது நாமத்தில் விபரிக்கப்பட்டுள்ளது. இதன் வார்த்தைப்பொருள் கேயச்சக்கரத்தில் வீற்றிருக்கும் மந்திரிணீயால் வணங்கப்படுபவள் என்பதாகும். மந்திரிணி என்பது லலிதையின் முக்கியமான அமைச்சர்களில் ஒருவர். மந்திரிணி தேவி லலிதையின் மீது மிகுந்த மதிப்பும் அவளை வணங்கவும் செய்கிறாள். வணங்குதல் என்பது மதித்தலைவிட வேறானது.

நாம் முன்னர் ஸ்ரீ சக்கரத்தில் 79 யோகினிகள் இருக்கின்றார்கள் என்று பார்த்தோம். இந்த யோகினிகளும் லலிதையின் வணங்குபவர்கள். இவர்களையும் மந்திரிணி என அழைப்பர். இது சியாமளையினை விட வேறானது. அவர்களை ஸ்ரீ வித்தை பூஜை முறைகளில் தேர்ச்சி பெற்றவர்கள், சாதகர்களை தேர்ச்சி பெறவைப்பவர்கள். இந்த நாம இவர்களையும் குறிப்பதாக இருக்கலாம். கேயசக்ர என்றால் முக்கியமான சக்கரம் என்றும் பொருள். இது ஸ்ரீ சக்கரத்தினை குறிக்கும். யார் ஸ்ரீ சக்கரத்தினை தியானிப்பவர்கள் மந்திர சித்தியினை அடைவார்கள், அவர்களையும் மந்திரிணி எனப்படுவர். தேவியை பஞ்சதசி மற்றும் சோடஷி மந்திர சித்தியடைந்த உபாசகர்கள் வழிபடுவார்கள். இங்கு ஸ்ரீ சக்கரத்தினை வழிபடுவதம் முக்கியத்துவம் விளங்கப்படுத்தப்படுகிறது. பல நூற்களில் மனித உடல் ஸ்ரீ சக்கரத்துடன் ஒப்பிடப்படுகிறது. ஒன்பது ஆவரணங்களும் மனித உடலின் ஒன்பது பகுதிகளுடன் ஒப்பிடப்படுகிறது. பிரமாந்திரம் எனப்படும் தலை உச்சி சஹஸ்ராரம், நெற்றி ஆக்ஞா சக்கரம், விசுத்தி சக்கரம் கழுத்தில், அநாகத சக்கரம் இருதயத்தில், மணிப்பூரகம் நாபியில், இடுப்பு (சுவாதிஷ்டான மூலாதார சக்கரங்கள்), ஒரு தொடைகளும், கால்களும் ஆக ஒன்பது பகுதிகளை குறிக்கிறது. இந்தக்குறிப்பு தெய்வ சக்தி உடலினூடாக பயணிக்கும் பாதையினை விபரிக்கிறது. சஹஸ்ரார பகுதியில் உள்ள தலையுச்சிப்பகுதியால் உட்புகுந்து எல்லாச் சக்கரங்களிலும் நிறைந்து மேலதிக சக்தி பாதத்தினூடாக வெளியேறும்.

சிவசூத்திரம் (2.3) மந்திரத்தின் இரகசியார்த்தம் பற்றி குறிப்பிடும். அறியாமை அகன்ற “நான்” என்ற உணர்வு எல்லா மந்திரங்களதும் முக்கியமான பகுதி, அதன் சாராம்சம் பிரம்மத்தினை அறிவதற்கான அறிவினை பெறுவது, இதுவே மந்திரத்தின் இரகசியம். ஆதலால் மந்திரங்கள் என்பவை எழுத்துக்களின் கோர்வை மட்டும் அல்ல, அது சக்தியின் வடிவேயாகும். இந்த எழுத்துக்கள் மாத்ரிகா எனப்படும். மாத்ரிகா என்றால் தாயிற்கு சொந்தமானது எனப்பொருள் படும். முதலாவது நாமத்தின் விளக்கத்தினை பார்க்கவும். ஆன்மீக சாதனையின் ஆரம்ப காலத்தில் மந்திர ஜெபம் மிகமுக்கியமான ஒன்றாகும்.

இந்த நாமத்தில் மந்திரத்தின் முக்கியத்துவமும், எமது உடலுடன் ஸ்ரீ சக்கரத்தினை தொடர்பு படுத்தப்பட வேண்டிய முறையும் விபரிக்கப்பட்டுள்ளது. எமது உடலிற்கும் ஸ்ரீ சக்கரமும் வேறானது இல்லை என்று உணர்வதே ஆன்மீகத்தில் தன்னையுணர்தல் எனப்படுகிறது. 



*****************************************************************************************************************************************
{இந்த லலிதா சஹஸ்ர நாம பதிவு ஆங்கிலத்தில்  ஸ்ரீமான் வீ. ரவி அவர்கள் Manblunder வலைப்பின்னலில் வெளியிட்ட Lalitha Sahashra Nama - A COMPREHENSIVE TREATISE என்ற ஆங்கில உரையினை தழுவி எம்மால் அவருடைய அனுமதியுடன் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படுகிறது. ஆங்கில மூல நூலினை கீழ்வரும் இணைய முகவரியில் காணலாம்: http://www.manblunder.com" }  சுமனன் 
******************************************************************************************************************************************

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பதஞ்சலி யோக சூத்திர வகுப்பு – 02

    15-ஜனவரி-2024 பதஞ்சலி யோக சூத்திர வகுப்பு – 02 இன்று நீங்கள் கற்றுக்கொண்ட பதஞ்சலி சூத்திரங்கள்: சூத்திரம் – 03: ததா த்ரஷ்டு: ஸ்வ...