குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, July 02, 2012

சூட்சுமப் பார்வையின் செயல்முறை அடிப்படை என்ன? - பகுதி 02

எந்த ஒரு விடயத்திற்கும், செயலுக்கும், காரியத்திற்கும் காரண காரியத் தொடர்பு இருக்கும் என்பது பற்றி பொதுவாக அடிப்படை அறிவியல் பயின்றவர்கள் அறிந்திருப்பார்கள். பௌதீக விஞ்ஞானத்தில் பொதுவாக ஒரு காரியத்தின் மூலமாக பௌதீக காரணத்தினையே கண்டறிவார்கள். உதாரணமாக உடலில் நோய் வந்தது என்றால் அதற்கு காரணம் ஊட்டச்சத்து குறைவு, பற்றீரியாத்தாக்கம், நோய்க்கிருமி என பௌதீக காரணங்க்களேயே கண்டறிவார்கள். ஆனால் எமது முன்னோர்கள் சித்தர்கள் ஒரு காரியத்திற்கான காரணம் பௌதீகத்திற்கு வருவதற்கு முன் அது சூஷ்மத்தில் உருவாகி வலுப்பெற்ற பின்னரே பௌதீகத்திற்கு வருகிறது என்று கண்டறிந்தார்கள். 

அதுபோல் இந்தப்பௌதீக உலகில் எல்லாவற்றையும் ஒழுங்கு படுத்தும் ஓர் அறிவு சக்தி நிறைந்துள்ளது என்பதனையும் கண்டறிந்தார்கள். எப்படியென்றால் ஓர் விதை எப்படி மரமாகிறது என்பதற்கு கேள்வி பௌதீக விஞ்ஞானத்தில் விதையில் உள்ள டி.என்.ஏ அதன் பெற்றோரிலிருந்து சேகரித்த தகவலுக்கும் அதன் சுற்றுப்புற சூழலின் தன்மைக்கும் ஏற்ப வளர்ச்சி அடைகிறது எனப்பதில் கிடைக்கும். இவற்றையெல்லாம் உணர்ந்தறியும் உணர்வு ஒன்று எல்லாவற்றிலும் உள்ளது என்பதனையும் சித்தர்கள் கண்டறிந்தார்கள். 

ஆக ஒரு பொருள், செயலிற்கான சூஷ்ம செயல் முறையும் அதனை ஒழுங்கு படுத்தும் அறிவு சக்தியுமே உலகின் அனைத்து செயல், காரியங்களுக்கான அடிப்படை என்பதே சித்த வித்தை, யோக வித்தை கற்க விரும்புபவர்கள் அடிப்படையில் புரித்து கொள்ளவேண்டிய விடயமாகும். இந்த அடிப்படையிலேயே அனைத்து சாதனைகள், தியானம், அற்புதங்கள் எல்லாம் நடைபெறுகின்றன. 

சூஷ்ம காரணங்கள் திடுமென ஸ்தூலத்தில் வெளிப்படுவதில்லை. உதாரணமாக புற்றுநோய் ஒருவருக்கு வருகிறது என்றால் வெளிப்படையாக தெரிவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே அதற்கான குறிகள் சூஷ்ம உடலில் தோன்றி செயல் கொள்ளத்தொடங்கி இருக்கும். இப்படி அனைத்து செயல்களும் சூஷ்மத்தில் செயல்கொள்ளத்தொடங்கியே ஸ்தூலத்திற்கு வெளிப்படும்.

இந்த அடிப்படையில் சூஷ்மப் பார்வை எப்படி செயல் புரிகின்றது என்பதனை விளக்குவோம். 

ஸ்தூலத்தை தாண்டி சூஷ்மத்தினை பார்க்கும் சக்தியினை விழிப்படையச் செய்து, பின்னர் அதனை உணர்வுமயமான அறிவு சக்தியுடன் சேர்க்கத்தெரிந்தவனுக்கும் ஒரு பொருளின் பரிணாமம் விளங்கும் என்று ஒரு வார்த்தையில் குருதேவர் கூறுவார். இந்த வார்த்தை சற்று செறிவாக உள்ளதால் இதனை தற்கால உதாரணம் ஒன்றுடன் ஒப்பு நோக்கி விளங்கிக்கொள்வோம். 

உதாரணமாக கணிதக் கோட்பாடுகள் அடங்கிய மாதிரியுரு மென்பொருள் (Mathematical modeling software) ஒன்றினை எடுத்துக்கொள்வோம். இவற்றில் நீங்கள் உள்ளீட்டைக் (Input) கொடுத்தால் அது வரைபடமாக (Graph) ஒரு தொகுதியின் செயன்முறையினை (Functionality of the System) வெளிப்படுத்தும். இந்த செயன்முறைக்கு பின்னால் உள்ள அடிப்படையினை எடுத்து நோக்குவோமானால் குறித்த உள்ளீட்டினைக் கொடுக்கும் போது அவற்றை பெற்று, எமது தெரிவிற்கு ஏற்ற கணிதக் கோட்பாடுகளை தானாக தெரிவு செய்து, உள்ளே ப்றோகிறாம் மொழியில் எழுதப்பட்டுள்ள சமன்பாடுகள் மூலம் தீர்த்து எமக்கு விடையினை தருகிறது. இதே போன்ற செயன்முறைதான் சூஷ்மப் பார்வையிலும் நடைபெறுகிறது. உள்ளீடு என்பது எமது மனம் ஒருமைப்படும் விடயம் (நாம் சூஷ்ம பார்வையில் தெரிந்து கொள்ள எடுக்கும் பொருள்) அவற்றை சரியான இடத்தில் (இது எப்படி என்பது பின்வரும் பதிவுகளில் கூறப்படும்) ஒன்ற அவை இந்த பிரபஞ்ச விதிக்கேற்ப (பிரபஞ்ச விதியே கணிக்கும் சமன்பாடுகள்) எப்படி பரிணாமம் அடையும் என்பதனை தெய்வ அறிவு கணித்து நேருக்கு நேர் படத்தினைப் பார்ப்பது போல் காட்டும். மேற்கூறிய விளக்கத்தின் மூலம் சூஷ்ம திருஷ்டி எப்படி செயற்படுகிறது என விளங்கியிருக்கும் என எண்ணுகிறோம். 

இந்த அடிப்படையில் எந்தவொரு பொருளினதும் நிகழ்கால, எதிர்கால, கடந்த கால அமைப்பு, பரிணாமங்களை அறிந்து கொள்ளலாம். 

அடுத்த பதிவில் மேலும் சில விடயங்களை விளங்கிக்கொள்ளலாம், காத்திருங்கள்,

சத்குருபாதம் போற்றி

4 comments:

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...