குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, July 03, 2012

சித்தர் காப்பு பிரயோகம்

எனது ஆன்மீக சகோதரர் ஒருவர் என்னிடம் பகிர்ந்து கொண்டது, வாசகர்களுக்கு பயன்படும் எனக் கருதி இங்கு பதிகின்றோம், விநாயகர் கவச பதிவில் கூறப்பட்டது போன்று இதனையும் பிரயோகிக்கலாம். 

"முக்தி கொண்டமோட்சமது மவுன தீட்சை முனையறிந்து செல்லுதற்கு வாலைகாப்பு; 
வெத்தி கொண்ட நந்தீசர் பாதங் காப்பு ; 
வேதாந்தம் மூவாயிரம் திருமூலர்பாதங் காப்பு ; 
அட்டமா சித்திக்கும் அகத்தியன் பாதங் காப்பு ; 
அன்பே உருவாக்கும்அகப்பேய் பாதங் காப்பு ; 
பரம கயிலாய குரு போகர் பாதங் காப்பு ; 
கொடுஞ் சீற்றம் மாறிட கொங்கணவர் பாதங் காப்பு; 
சூழி முனை சூட்சும குரு சுந்தராணந்தர் பாதங் காப்பு ; 
இகத்தில் கிரகம் வென்ற இடைக்காடர் பாதங் காப்பு ; 
வரும் வாழ்நாள் சிறந்திட வால்மீகர் பாதங் காப்பு ; 
மாயத்தை நீக்கிட மச்சமுனிவர் பாதங் காப்பு ; 
முன் கர்மம் நீக்கி ஞானம் காட்டும் முனிகமலர் பாதங் காப்பு ; 
காரியம் உணர்ந்து வெல்ல கருவூரார் பாதங் காப்பு ; 
பாவங்கள் நீங்கிட யோகம் தந்த பதஞ்சலி பாதங் காப்பு ; 
மனப்பாம்பை அடக்கிட பாம்பாட்டி பாதங் காப்பு ; 
தன்னுடல் சிறக்க செடி தந்த தன்வந்திரி பாதங் காப்பு ; 
காலம் அறிந்து வாழ ஞானம் தரும் காசிபர் பாதங் காப்பு ; 
வெட்ட வெளியை உணர்த்திட்ட கடுவெளி சித்தர் பாதங் காப்பு ; 
கொல்குணம் போக்கும் கோரக்கர் பாதங் காப்பு ; 
பரத்தை அறிந்திட ஞானம் போதித்த புலஸ்தியர் பாதங் காப்பு ; 
தேரா மருத்துவம் தெளிந்து உரைத்திட்டதேரையர் பாதங் காப்பு ; 
வான் உலகில் மனு வாழ சிவவாக்கியர் பாதங் காப்பு ; 
போகத்தை துறந்திட புகழ் ஞானம் தந்த புண்ணாக்கீசர் பாதங் காப்பு ; 
நல் ஞான ஜோதியை நலமாய் கூறிய நற்குதம்பை பாதங் காப்பு ; 
அறியாமை இருள் நீக்கிய அமலன் அழுகுண்ணி பாதங் காப்பு ; 
பூஜா , ஞானம் புகன்றிட்ட புலிப்பாணி பாதங் காப்பு ; 
காலம் கடந்து வாழ கலை கூறிய காகபுஜண்டர் பாதங் காப்பு ; 
கர்மம் நீக்கி காலனை வென்றிட காலங்கி பாதங் காப்பு ; 

காப்பான கருவூரார் , போகநாதர்கருணையுள்ள அகத்தீசர் , சட்டைநாதர் மூப்பான கொங்கணரும் பிரமம சித்தர் முக்கியமாய் மச்சமுனி , நந்திதேவர் கோப்பான கோரக்கர் , பதஞ்சலியார்கூர்மையுள்ள இடைக்காடர் சண்டிகேசர் வாப்பான வாதத்திற்கு ஆதியான வாசமுனி கமலமுனி காப்புதானே ".

1 comment:

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

"உதவி கேட்காதவரே பலவீனமானவர்"

  "உதவி கேட்காதவரே பலவீனமானவர்" முதலில் பார்க்கும்போது, உதவி கேட்பது பலவீனம் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் இதற்கு நே...