குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, February 25, 2012

யோக சாதனையின் நோக்கம், தெளிவு, பாதை


இந்த கட்டுரையில் யோக சாதனையின் நோக்கம், தெளிவு, பாதை என்பது பற்றி நாம் எமது சாதனையிலும், அனுபவத்திலும், தெளிவிலும் கண்டவாறு விளக்குவதே நோக்கம். இந்த கட்டுரையின் முடிவில் நீங்கள் யோகம் ஏன் பயிலவேண்டும்? ஏப்படி பயிலவேண்டும்? அதற்கு நீங்கள் அறிந்து வைத்திருக்க வேண்டிய அடிப்படை அறிவு என்ன என்பது பற்றி ஒரு தெளிவும் புரிந்துணர்வும் ஏற்படும் என்று நம்புகிறோம்.

இன்று யோக சாதனை என்றாலோ, யோகா பழகுகிறேன் என்றாலோ ஆசனம் செய்வதையே பெரும்பாலும் குறிக்கிறார்கள், ஒரு சிலர் பிராணாயாம பயிற்சியினையும் சேர்த்து யோகா எனப் பொருள் கொள்கிறார்கள். அதாவது ஆசனம் செய்வதில் தொடங்கி, பிராணாயாம பயிற்சியுடன் குண்டலினி தியானம் வரைக்கும் செய்து வருகிறர்கள், இந்த நோக்கம் தான் என்ன? ஏன் இவற்றை செய்ய வேண்டும்? இப்படி செய்வதுதான் யோகமா?

பலரும் நினைப்பதனைப்போல் ஆசனம், பிராணாயமம் தொடங்கித்தான் யோக சாதனை செய்வதானால் இராமகிருஷ்ண பரமஹம்சர், ரமண மகரிஷி போன்றோர் அவ்வாறு செய்யவில்லையே?

பலர் யோக சாதனை செய்யத்தொடங்கி ஒரு சில படிகளுடன் மேலே செல்லாது காலம் பூராகவும் ஆசனப்பயிற்சியினையும் , பிராணாயாமத்தினையும் செய்தவண்ணம் சிறந்த உடல் ஆரோக்கியத்தினை பெற்றிருப்பர், அடுத்த படி என்னவென்று தெரியாமல் இருப்பர்.

இந்த கட்டுரை இப்படி தனிப்பட உடல் ஆரோக்கியத்தினை மட்டும் கருத்தில் கொண்டு ஆசனம் பிராணாயாமம் செய்பவர்களுக்கு எழுதப்படவில்லை, அதையும் தாண்டி யோகப்பாதையில் செல்ல விரும்புபவர்களுக்காகவே எழுதுகிறோம் என்பதனை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

எப்போதும் ஒருகாரியத்தினை செய்வதற்கு முன் கீழ்வரும் மூன்று கேள்விகளை கேட்டபின்பே செய்யத்தொடங்க வேண்டும் என்பது எமது வாழ்க்கையில் பொதுவாக கொள்ளப்படவேண்டிய விதி!
  1.  இதை நான் ஏன்  செய்கிறேன்?
  2.   இதன் விளைவுகள் என்ன?
  3.  இதில் நான் வெற்றியடைவேனா?  

இந்தக்கேள்விகளுக்கு திருப்தியான பதில் கிடைத்த பின்பே எந்தக்காரியத்தினையும் செய்யவேண்டும், அதுபோல யோக சாதனை செய்ய விரும்புபவர்களும் இந்த கேள்விகளை தமது யோக சாதனை எதற்காக செய்கிறோம் என்பதனை இக்கேள்விகளை கேட்டு அதற்குரிய திருப்தியான பதிலினை அடைந்த பின்னரே அவற்றினை செய்ய தொடங்க வேண்டும்.

இதை நான் ஏன் செய்கிறேன்? என்பதற்கான பதில் பலவகையில் இருக்கலாம், இது நீங்கள் எந்த நோக்கத்திற்காக யோகம் பயில்கிறீர்கள் என்பதனை தெளிவு படுத்தும், அந்த நோக்கங்களை கீழ்வருமாறு பாகுபடுத்தலாம்;
  1. சாதாரண உலக வாழ்க்கையில் நலமாக வாழ்வதற்குரிய அடிப்படையினை பெறுவதற்கு: "நண்பன் கூறினார்" "இவற்றை பழகினால் உடலாரோக்கியம் வரும், மன ஒருமை அதிகரிக்கும்" "வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கலாம்" என்பன காரணமாக இருக்கலாம், இவையே பெரும்பாலான காரணங்கள், இன்றைய உலகில் நாளாந்த வாழ்க்கை உடலிற்கும் மனதிற்கும் சுமை மிகுந்ததாகி விட்டது அதற்கு ஒரு நிவாரணியாக "யோகா" பிரபலப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் யோகம் பழகுபவர்களே பெரும்பாலானவர்கள்
  2. அற்புத சித்திகளை பெறுவதற்கு: அடுத்தவகையினர் அற்புத, அதீத சக்திகளை விரும்பி யோகம் பயிலவந்திருப்பவர்கள், அவர்களை பொறுத்தவகையில் யோகம் பயில்வதால் அற்புத சித்திகள் அடையலாம் என்பது நோக்கமாக இருக்கும்
  3. இறைவனை அடைவதற்கு: இவர்கள் இறைவனை அடைவதற்குரிய வழிமுறையாக யோகத்தினை தேர்ந்தெடுத்தவர்கள்,


சரி இந்த மூன்று வகையினரிலும் யார் சரியான நோக்கம் உடையவர்கள்? அனைவரும் சரியான நோக்கம் உடையவர்களே, அவரவர் இருக்கும் நிலைக்கு ஏற்றவாறு அனைவரும் சரியானவர்களே!

அப்படியானால் யோகம் பயில்வதன் இறுதி நோக்கம்தான் என்ன? இதனைக் கூறுவதற்கு முன்னர் யோக சாதனையினை தொடங்குவதற்கான முன்னேற்பாடு என்ன என்பது பற்றி பார்ப்போம்; இது மூன்று படிமுறைகள் உடையது;
  1.  முதலில் நாம் யார் என்பதனை அறிதல் வேண்டும், இதனை ஒருவரியில் கூறுவதானால் "தன்னையறிதல்", அதாவது நாம் யார் என்பதனை பகுத்து அறிய   வேண்டும்,
  2. பின்னர் நாம் யார் என்று அறிந்த எமது பகுதிகளை சுத்தம் செய்யவேண்டும்.
  3. எமக்கு மேலிருக்கும், எம்மைவிட வலுவான சக்தியான தலைவனை அறியவேண்டும்.
இந்த முன்று படிமுறைகளையும் உள்ளடக்கியதே முழுமையான யோக சாதனை, எந்த யோக சாதனை இந்த மூன்றையும் உள்ளடக்கியிருக்கிறதோ அதுவே முழுமையான யோகப்பயிற்சியாகும். இப்படியான பயிற்சியில் நாம் மேலே கூறிய பொதுவான யோகம் பழகுவதற்கான நோக்கங்கள் அனைத்தும் அடங்க்கிவிடும்.

இனி இந்த மூன்று படிமுறைகளது உள்ளடங்கங்களைப்பற்றியும் சுருக்கமாக பார்ப்போம்;

தன்னையறிதல்:
பொதுவாக நாம் யார் என எம்மையே கேட்டால் என்ன பதில் வரும்; எமது பெயரை சொல்வோம்; அல்லது இன்னாருடைய மகன்/மகள் என்போம், எமது பதவி பட்டங்களை சொல்வோம், ஆனால் அவையெல்லாம் பௌதீகம் சார்ந்தவை, எமது பேச்சிலேயே நாமும் அவையும் வேறு என்பதனை அறிந்திருக்கிறோம், எனது பெயர் சந்திரன் என்றால் நான் வேறு, எனக்கு இட்ட பெயர் சந்திரன் என்றுதானே கூறுகிறோம்? எனது என்ற வார்த்தையினை பிரயோகிக்கும் போதே நான் வேறு, அதுவேறு என்பதுதானே பொருளாகிறது. அப்படியானால் நாம் யார் என்பதற்கு எமது சித்தர்களும், முனிவர்களும் யோகிகளும் என்ன பதில் கூறுகின்றனர்? நான் என்பது ஆன்மா! அப்படியானால் எனக்கு உடல் இருக்கிறது, எண்ணுவதற்கு மனம் இருக்கிறது, காரியங்களை செய்வதற்குரிய ஆற்றலான பிராணன் இருக்கிறது, எதையும் பகுத்தறியும் புத்தி இருக்கிறது இவையெல்லாம் என்ன என்ற கேள்வி எழுகிறதல்லவா? ஆம் இதற்கான பதில் அவை ஆன்மாவினை சூழவுள்ள கவசங்கள். இவற்றையே யோக மொழியில் பஞ்ச கோசங்கள் என்போம். நான் ஆகிய ஆன்மா பஞ்சகோசங்க்களால் சூழப்பட்டுள்ளது. ஆக தன்னையறிவதற்கு என்ன செய்யவேண்டும்? எனவே யோகசாதனையில் சித்தியுற எண்ணுபவர்கள் அனைவரும் பஞ்சகோசங்கள் பற்றியும், அவற்றின் அமைப்பு செயல்முறை பற்றியும் தெளிவாக அறிந்திருத்தல் அவசியமாகும்.

பஞ்ச கோசங்கள் எவை?
  • அன்னமய கோசம்: எமது ஸ்தூல உடலும் மற்றைய உடல்களின் இணைப்பும் சேர்ந்த பகுதி, இதனை வசப்படுத்தும் சுத்தி செய்யும் முறைதான் ஆசனப்பயிற்சி, உணவு கட்டுப்பாடு, உபவாசம் எனபன,
  • பிராணமயகோசம்: இதுவே அனைத்தையும் இணைக்கும் உயிர் சக்தி, இது மூச்சின் மூலம் பிரதானமாக கட்டுப்படுத்தப்படுகிறது,  பிராணன் என்பது மூச்சு அல்ல, உடல், மனம், புத்தியாலும் கட்டுப்படுத்தக் கூடியது.
  • மனோமயகோசம்: எண்ணங்களையும், மனம், சித்தம் என்பவற்றை ஆக்குவது,
  • விஞ்ஞானமய கோசம்: புத்தி அதாவது பொருட்களை, எண்ணங்களை பகுத்தறிவது, மற்றைய கோசங்களை கட்டுப்படுத்தும் வலிமை உடையது. 
  • ஆனந்தமயகோசம்: ஆன்மாவினை சூழவுள்ள உறை, இந்த கோசத்தில்தான் மனிதனுடைய ஆத்ம சக்தி உறைந்துள்ளது, இந்த ஆத்ம சக்தியே புத்தியின் மூலம் செலுத்தபட்டு மனதினூடாக எண்ணமாகி பின்னர் பௌதீக நிலையில் செயல் நிலைக்கு வரும். இது அனைவருக்கும் பொதுவான செயல்முறை, அந்தந்த கோசங்களின் வலிமையிலும் சுத்தியிலுமே அவர்களின் வேற்றுமை தங்கியுள்ளது.

அதாவது எந்தவிதமான செயல்முறைக்கும் ஆத்மசக்தியின் தூண்டுதல் இருக்கவேண்டும், இது எப்படி செயற்படுகிறது எனப்பார்ப்போம், பொதுவாக மக்கள் எந்த செயல் முறையினையும் உடலினூடாகவும் பிராணனினூடகவுமே செய்கின்றனர், இது எமது ஆற்றலில் மிககுறைந்த அளவினை பயன்படுத்தும் செயல்முறை, உதாரணமாக உடலால் உழைக்கும் வர்க்கத்தினர் இதனை மட்டுமே பயன்படுத்துகின்றனர், பின்னர் ஆற்றல் வலுப்படும் போது உடல் உழைப்பினைகுறைத்து மனதாலும் புத்தியாலும் உழைக்கப்பழகுகின்றனர், ஆத்மசக்தி விழிப்படைந்து வலிமையடைந்தவர்கள் தமது இச்சாசக்தியினாலேயே தமது காரியத்தினை சாதிக்கவல்லவராகின்றனர். இதனை சாதிப்பது எப்படி என்பதனையே யோகம் போதிக்கும்,

பஞ்ச கோசங்களை சுத்தி செய்தலும் வலிமைப்படுத்தலும்:
பஞ்ச கோசங்களே எமது அமைப்பு என்பதும் அவை ஆன்மாவாகிய எம்மை சூழ்ந்த கவசங்கள் என்பதனையும் தற்போது புரிந்திருப்பீர்கள் என எண்ணுகிறேண், அனைத்து செயல்களுக்கு ஆனந்தமயகோசத்தின் அசைவு சலனம் அவசியம் என்பதனைப் பார்த்தோம், அதேவேளை அந்த அளவும் மற்றைய கோசங்களின் வலிமையும் அனைவருக்கும் ஒரேயளவில் இருப்பதில்லை, அவரவர் வாழ்க்கைமுறை, சூழல், பிறப்பு என்பவற்றிற்கேற்றவாறு வேறுபடும். ஆதலால் அவற்றை சுத்தி செய்தல் வேண்டும், இந்தபடியினை பதஞ்சலி மகரிஷி அட்டாங்கயோகத்தின் முதல் ஐந்து படிகளான இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம் என்பவற்றில் விளக்கியுள்ளார், இதில் பிராணாயாமம் சுத்திமுறையிலும் வரும், வலிமைப்படுத்தும் பகுதியிலும் வரும், ஆரம்ப நிலை பிராணாயாமங்களான நாடி சுத்தி போன்றவை சுத்தி முறைகள் கும்பக பிராணாயாமங்கள் வலிமைப்படுத்தும் செயல் முறைகள். இனி பதஞ்சலி மகரிஷியின் அட்டாங்க யோகமுறையில் எந்த படிமுறைகள் பஞ்சகோச சுத்தியுடன் தொடர்புடையது, எவை பஞ்சகோச வலிமைப்படுத்தும் செயன்முறையுடன் தொடர்புடையவை என்பதைப்பற்றி கீழ்வரும் அட்டவணையில் பார்ப்போம்;

அட்டாங்க யோக படிமுறை
சுத்தி

வலிமைப்படுத்தல்
இயமம்
மனோமய கோச சுத்தி 
விஞ்ஞானமய கோச வலிமைப்படுதல்
நியமம்
விஞ்ஞானமய கோச சுத்தி
மனோமய கோச வலிமைப்படுதல்
ஆசனம்

பிராணமய கோச சுத்தி (நாடிகள், சக்கரங்களை சுத்தி செய்யும்)
அன்னமய கோச சுத்தி
பிராணாயாம

அன்னமயகோச சுத்தி, பிராணமயகோச சுத்தி,
அன்னமய, பிராணமயகோச வலிமை
பிரத்தியாகாரம்
மனோமய கோச சுத்தி,
விஞ்ஞானமய கோச வலிமை
தாரணை
விஞ்ஞானமயகோச சுத்தி,
மனோமயகோச வலிமை
தியானம்
ஆனந்தமயகோச சுத்தி,
விஞ்ஞானமய கோச வலைமை
சமாதி

இது அனைத்து கோசங்களும் சுத்தியாகி, வலிமை அடைந்த நிலை, பரிபூரணமாக ஆனந்தமய கோச நிலை விழிப்புற்ற நிலை


முடிவுரை:
இறுதியாக இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் முன்வைக்கப்பட்ட கேள்வியான் யோகம் பழகுவதற்கான உண்மையான நோக்கம் எதுவெனக்கூறி முடிக்கலாம் என எண்ணுகிறோம். யோகம் என்பது எம்மை நாம் அறிந்து, எமது பலகீனங்களை அகற்றி சுத்தி செய்து வலிமைப்படுத்தி ஆதியாகிய பராசக்தியுடன் ஒன்ற செய்வதான செயல்முறையே ஆகும். அதனை முழுமையாக புரிந்துகொள்வதற்கு அதன் பகுதிகள் அனைத்தையும் அறிதல் வேண்டும், அவற்றை பற்றிய அறிமுகமாகவே அனைவருக்கும் பரீட்சையமான அட்டாங்க யோக பகுதிகளுடன் ஒப்பிட்டு விளங்கப்படுத்தி இக்கட்டுரையினை முன்வைக்கிறோம். இதனை சாதிக்கும் மற்றைய வழி சக்தி உபாசனை அதுபற்றியும் சுருக்கமாக கூறி நிறைவு செய்கிறோம், அதாவது அட்டாங்க யோகம் உடல், பிராணன், மனம், புத்தியினூடாக ஆன்ம சக்தியினை வலுப்படுத்தி ஆன்மாவினை அறிந்து சக்தியுடன் ஒன்றும் முறையினை விபரிக்கும்.

இதன் எதிர் திசையான முறைதான் சக்தி உபாசனை, அவற்றுள் குறிப்பானவை ஸ்ரீ காயத்ரி உபாசனையும் ஸ்ரீ வித்யா உபாசனையுமாகும். இந்த சாதனையில் ஆத்ம சக்தியின் மூலம் பராசக்தியின் சக்தியினை ஈர்த்து பஞ்சகோசங்களை சுத்தி செய்து, வலிமைப்படுத்தும் முறைகள் உள்ளன. 

4 comments:

  1. நல்ல ஒரு தகவல் நானும் முயற்சித்து பார்கிறேன் நன்றி ஐயா

    ReplyDelete
  2. எல்லோரும் பின்பற்றி வாழ ஏதுவாக இருக்கும் முறை அஷ்டாங்க யோக முறை. விளையாட்டுப்போக்காக வாழும் நாட்கள் வரை யாருக்குமிந்த முறைகளில் ஈடுபாடு வருவதில்லை. ஆசனமும், பிரணயாமமும், தியானமும் ஹிந்துக்களின் மதம் சார்ந்த பழக்கங்கள் என்கின்ற ரீதியில் நம்பிக்கை உருவாகிவிட்டது.

    தன் உணர்வுப்பாதையில் அடி எடுத்து வைக்கும் ஒவ்வொருவரும் படிப்படியாக இயமம்,நியமம், ஆசனம், பிரணயாமம், பிரத்தியாகரம் இவற்றின் அவசியத்தை சட்டென உணர்வார்கள். பிறகு சக்தி உபாசனைப் பற்றிய விழிப்புணர்வு கிட்டும்.தாரணையை அனுபவிப்பார்கள்.உலக சுகங்களில் பற்று இருக்கும் வரை இந்த ஆறு படிகளும் சிறந்த பலன் தரும். உலக அமைதிக்கு அதிகமான மக்கள் இந்தப் படிகளில் முன்னேறி வந்தால் நல்லது

    தியானம், சமாதி இவ்விரு நிலைகளும் பற்றற்ற நிலையை மனம் ஏற்றுக் கொண்டால் கைகூடும். இவை இரண்டும் முற்றும் துறந்த நிலை.

    ReplyDelete
  3. யோகப் பயிற்சிகளின் சாரத்தை அற்புதமாக ஒரே கட்டுரையில் விளக்கி விட்டீர்கள்.. சிறப்பாக இருக்கிறது.

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    http://anubhudhi.blogspot.in/

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...