இன்று பலரும் ஆரோக்கியத்தை முன்னிறுத்தி பல உடற்பயிற்சிகள், சிகிச்சைகள் என்று ஆயுவேதத்தை நாடி வருகிறார்கள். உண்மையில் ஆயுர்வேதத்தின் அடிப்படைத் தத்துவம் அறியாமல் மருந்து உண்பதையும், மசாஜ் செய்வதையும், பஞ்ச கர்மசிகிச்சையையும் ஆயுர்வேதம் என்ற பெயரில் நம்புகிறார்கள்.
ஆரோக்கியமாக இருந்த பலர் அற்ப ஆயுளில் இறந்து போகக் காண்கிறோம். அப்படியென்றால் ஆரோக்கியத்திற்கும் ஆயுளுக்கும் என்ன தொடர்பு!
ஒருவனின் ஆயுள் என்பது
. ஶரீராத்மமன꞉ ஸம்ʼயோக³ ஆயு꞉ .
சரீரம் - மனம் - ஆத்மா ஆகிய மூன்றினதும் ஸம்யோகம் என்று ஆயுர்வேதம் கூறுகிறது.
ஒருவன் நீண்ட ஆயுளைப் பெற வேண்டுமென்றால் அவனது உயிரும், மனமும், உடலும் ஒத்திசைந்து இணைந்து செயற்பட வேண்டும். இப்படிச் செயற்பட்டால் மாத்திரமே அவனுக்கு ஆயுள் வாய்க்கும்.
உடல், மனம், உயிர் இந்த மூன்றையும் எப்படி ஒன்றிணைத்து ஒத்திசைத்து செயற்பட வைப்பது என்ற ஞானத்திற்கு, அறிவிற்குப் பெயர்தான் ஆயுர்வேதம்.
ஆகவே அகத்திய குல மாணவர்களே ஆயுர்வேதம் என்பதன் உண்மைப் பொருள் அறிந்து குரு வழி நின்று ஆயுர்வேதம் கற்று மேன்மையடையுங்கள்! ஆயுவேதம் என்பதை மொழி, அரசியலில் பயன்படுத்து அர்த்தங்களைக் கண்டு குழம்பி அறியாமையில் வீழ்ந்து விடாதீர்கள்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.