குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, November 23, 2019

எண்வகை குணங்களை உருமாற்றும் தாய்சக்திகள்


நாம் எட்டுவகையான உணர்ச்சிகளால் (emotions) ஆக்கப்பட்டிருக்கிறோம். இந்த உணர்ச்சிகள் அடிப்படையில் மனிதனின் அனுபவத்திற்காக இருக்கிறது. இந்த உணர்ச்சிகளைச் சரியாகப் பயன்படுத்தும் அறிவினைத் தரும் சக்திகளை எண்வகைத் தாய்சக்திகள் - அஷ்ட மாத்ருகா என்று கூறுவோம்.

இது காயத்ரி சாதனையிலும், ஸ்ரீ வித்யா சாதனையிலும் இருக்கும் ஒரு நுட்பம்.
சாதகர்கள் எவராவது தமது உணர்ச்சிகள் ஏற்படுத்தும் தடைகளால் சாதனையில் முன்னேறிச் செல்ல முடியாமல் இருந்தால் இந்தத் தாய் சக்திகளின் உதவியுடன் துரித முன்னேற்றம் பெறலாம்.

1)காமம்/ஆசை - எதையாவது ஆசைப்பட்டுக்கொண்டிருப்போம் ஆனால் நிறைவேற்றமுடியாதபடி இருப்போம். இப்படி எமது மனதிலுள்ள ஆசைகளை நிறைவேற்றும் அறிவினைத் தருபவள் பிராம்ஹி என்ற தாய்சக்தி

2)கோபம் - ஆசை அல்லது நமது எண்ணங்கள் நிறைவேறாத போது ஏற்படும் நிலை. கோபத்தினை உருமாற்றி நிதானத்தினைத் தரும் தாய்சக்தி மாகேஷ்வரீ.

3) லோபம்/பேராசை - தமது தகுதிக்கு வலிமைக்கு மேல் உள்ள விஷயங்களை அடையவேண்டும் என்ற அதி ஆசை, ஆசையிருக்கும் ஆனால் தகுதி இல்லை, ஆனால் அறிவின் சொல்லைக் கேட்காது. ஆகவே அவசரமாகச் செயல்புரிந்து துன்பத்தில் மாட்டிக்கொள்வோம். பேராசையை உருமாற்றி தியாகத்தினைத் தரும் தாய்சக்தி கௌமாரி.

4) மோஹம் - ஒன்றைப் போலியாக எண்ணி மயங்கும் நிலை. பலரும் எதைப்பார்த்தாலும் அதை நம்பி மயங்கி அதை அடைய எண்ணி முயற்சி செய்து துன்பத்தில் விழுந்துவிடுவார்கள். இப்படி மோகத்தை அன்பாக மாற்றும் தாய்சக்தி வைஷ்ணவி.

5) மதம் - தன்னைப்பற்றி அதிகமாகச் சிறப்பாக எண்ணும் தற்புகழ்ச்சி: ஒருவன் தன்னைப் பற்றி அதிகமாகச் சிந்திக்குபோது சிறப்பாக மற்றவர்களுடன் இணைந்து செயற்பட முடியாது. யானைக்கூட்டத்தில் மதம் பிடித்த யானை தனது குழுவுடன் இணைந்து செயற்படமுடியாமல் கூட்டத்துடன் சண்டையிட்டு தன்னைப் கூட்டத்திலிருந்து பிரிந்து அழிவு நடவடிக்கையில் ஈடுபடும். இதைப்போல் மதம் கொண்ட மனிதன் தன்னைப்பற்றி அதிகமாக எண்ணி சுய நலத்துடன் செயல்புரிந்து துன்பம் ஏற்படுத்திக்கொள்வான். இந்த மதகுணமாகிய தற்புகழ்ச்சியை உருமாற்றி அடக்கத்தை அளிக்கும் தாய்சக்தி வாராஹி

6) மாத்ஸர்யம் - பொறாமை: ஒருவன் நம்மை விட சிறப்பாக இருந்தால் மனதில் எப்போதும் ஒரு எரிச்சல் அல்லது அந்த நபரைப்பற்றி ஏதாவது குறை கூறும் மன நிலை இருக்கிறது என்றால் மாத்ஸர்யம் என்று பொருள். இந்த பொறாமை குணம் இருந்தால் நாம் எப்போதும் மற்றவர்களைக் குறை கூறி மன நிம்மதி இன்றி இருப்போம், இப்படி மாத்ஸர்ய பொறாமை குணத்தை உருமாற்றி அமைதியை அளிக்கும் தாய்சக்தி மாஹேந்த்ரீ.

7) பாபம்: நாம் தர்மத்திலிருந்து விலகி செய்யும் செயல்கள் எல்லாம் எமது ஆழ்மனமாகிய சித்தத்தினை பதிவினை ஏற்படுத்தி மீண்டும் மீண்டும் எம்மை பாபங்களை செய்வித்து அதனால் துன்பம் ஏற்படுத்தும் நிலையைத் தரும். இப்படி பாவங்களை உருமாற்றி புண்ணியமாக்கி, மீண்டும் பாவங்கள் செய்யாமல் தடுத்க்கும் தாய்சக்தி சாமுண்டா.

8) ஐஸ்வரியம்: மேலே உள்ள ஏழுகுணங்களையும் சரியாக உருமாற்றினால் எமக்குக் கிடைக்கும் பலன் ஐஸ்வரியம். எமது மனோ காமியங்களை அடையச் செய்து, கோபத்தினை உருமாற்றி நிதானம், லோபத்தை உருமாற்றி தியாகம், மோகத்தை உருமாற்றி அன்பு, மதத்தை உருமாற்றி அடக்கத்தை, மாத்ஸர்யத்தை உருமாற்றி அமைதியை, பாவங்களை உருமாற்றி புண்ணியத்தை தரும் நிலையினை சாதகன் காப்பாற்றி நிலைபேறாக வைத்திருக்கும் சக்தி மகாலக்ஷ்மி தாய் சக்தி.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...