குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, February 01, 2018

கேள்வி பதில்: தீட்சை பெற எவ்வளவு சார்ஜ் ? எங்கே வரனும் ?

தீட்சை பெற எவ்வளவு சார்ஜ் ? எங்கே வரனும் ? 

இந்த கேள்விக்கு கட்டாயம் பதில் அளிக்க வேண்டும் என்ற எண்ணம் என்னில் உருவானதற்கான காரணம் புரிதல்களை ஏற்படுத்துவதற்காக. 

முதலாவது தீட்சை என்பது என்ன என்பது பற்றிய புரிதல் அவசியம். 

தீட்சை என்பது அறியாமையை அழிப்பதற்கான அறிவினை/ஆயுதத்தினை தரும் செயல். 

இந்த செயல் ஒரு யுத்தபிரகடனத்தின் பின்னர் தயாரான போர்வீரனுக்கு ஆயுதம் வழங்கு செயல்முறையுடன் ஒத்தது. 

அஞ்ஞானம், அறியாமை, மனதின் தீய ஒழுக்கம் என்பவற்றை அழிப்பதற்கு உறுதிபூண்ட மாணவனுக்கு ஞானம் எனும் தீயை/ஆயுதத்தை தரும் செயல்முறைதான் தீட்சை. 

ஆகவே மாண்வனுக்கும் தாம் எதற்காக தீட்சை கேட்கிறோம் என்ற தெளிவு முதல் நிலை, இரண்டாவது வாங்கப்போகும் ஆயுதத்தை நாம் பயன்படுத்தும் அளவிற்கு வலிமை வாய்ந்தவரா என்ற பக்குவம் இரண்டும் முக்கியமானது.

இரண்டாவது தீட்சை பெறுவதற்கு நாம் பக்குவம் உடையவர்களா என்பதை எப்படி அறிவது, எதையும் தேடிப்போகாமல் தனது பக்குவத்தை வளர்ப்பதை மாத்திரம் இலக்காக கொண்டு செயல் புரிவது. 

பக்குவம் இருந்தால் தானாக கிடைப்பதுமட்டும்தான் தீட்சை! கட்டணம் கட்டி, வேடங்கள் இட்டு, ஆடம்பரமாக நடாத்துவதல்ல தீட்சை! 

ஆகவே அன்பரே, நீங்கள் இறைவழியில் முன்னேற விருப்பம் இருப்பின் உங்கள் பக்குவத்தை வளர்ப்பதற்கு முயற்சி செய்யுங்கள், எங்கும் பரந்திருக்கும் இறைசக்தி உங்களுக்கு அந்த பக்குவத்தை தந்து தீட்சையும் தந்தருளும். இதற்காக எங்கும் வரத்தேவையில்லை. 

இந்த பக்குவத்தை ஏற்படுத்துதான் குரு- அகத்திய-காயத்ரி சாதனை உபதேசம், இந்த நூலை பெற்று அதில் காட்டியபடி உங்கள் சாதனையை தொடருங்கள். மற்றவை தானாக நடைபெறும்.  




3 comments:

  1. அருமையான விளக்கம் குருவே.
    நன்றிந

    ReplyDelete
  2. அருமையான விளக்கம் ஐயா.

    ReplyDelete
  3. தீட்சை பற்றி தெளிவாக விளக்கியதற்கு நன்றி மாஸ்டர். போருக்கு உரிய உத்வேகம் மற்றும் மனம் வாக்கு செயலில் தெளிவு - இறை அறிவை பெறும் ஏக்கமும் முயற்சிக்கும் விசை தீட்சை என்பதை புரிந்து கொண்டோம் மாஸ்டர், நன்றி

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...