குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, November 01, 2023

சிருஷ்டியின்

இந்த முறை பல சாதகர்களை நேரில் சந்தித்தனர்; இந்த சந்திப்பில் புரிந்துகொண்ட விஷயம் - எல்லோரும் ஆன்மீகம் என்றால் கண்ணை மூடி ஜெபம் செய்தல், பூசை செய்தல், குருவிற்கு உதவி செய்தல் இப்படி பலவிதமான மயக்கங்களுடன் தினமும் சாதனை செய்வதால் நல்ல பலன் கிடைக்கிறது என்பதால் தொடர்ச்சியாகச் செய்து வருவதாக கூறினார்கள்.

எப்படி இருப்பினும் அனேகருக்கு - கர்மம் - செயலின் இரகசியம் புரியவில்லை; நாம் நினைபதெல்லாம் ஏன் நடக்கவில்லை? இறைவனை வழிபடுதல் என்பது எமது பண்பு மாற்றமே என்ற உண்மைகள் இலகுவாக விளங்கப்படுத்தப்படவில்லை.
சைவத்தில் சரியை சரியாகச் செய்தால் அது கிரியையில் கொண்டு செல்லும், கிரியை சரியாகச் செய்தால் அது யோகமாக மாறும்; யோக சித்தி பெற்றால் மாத்திரமே ஞானம் உள்ளிருந்து உதிக்கும்!
எல்லாவற்றிற்கு அடிப்படை சரியை - இதை வேதாந்த - சுவாமி விவேகானந்தரின் மொழியில் சொன்னால் கர்ம யோகம். கர்மத்தைச் சரியாகச் செய்வதால் நமக்கு யோகத்தில் சித்தியுறும் பண்பு தானாக உண்டாகும்.
உங்களுக்கு வாழ்க்கை விரக்தியுடனும், பலன் அற்றும், சந்தோஷமற்றும் காணப்படுகிறதா?
உங்களுக்கான கற்கை நெறி இது!
இதில் மொத்தம் எட்டுப் பாடங்கள் - இது சுவாமி விவேகானந்தர் அருளியது! இந்த எட்டுப்பாடங்களையும் அக்குவேறு ஆணிவேறாக புரிந்து கொள்ள படிப்படியாக உங்களுக்கு வழிகாட்டப்படும்.
ஒரு பாடம் முடிந்தவுடன் Google form இல் புரிதலை உறுதிப்படுத்த MCQ - short answer பரீட்சை; எட்டுப்பாடங்களிலும் எட்டுப்பரீட்சை.
ஒன்பதாவது பரீட்சை எப்படி கர்ம யோக தத்துவங்களை உங்களது தனிப்பட்ட நாளாந்த வாழ்க்கைக்குப் பயன்படுத்துவது என்ற திட்டம் தரப்படும்.
இந்தக் கற்கைக்கு கட்டணம் உண்டா என்றாம் ஆம்! நீங்கள் உங்கள் நிதி வளத்திற்கு தக்க குரு பணிக்காக உங்களால் இயன்றதை பங்களிக்க வேண்டும்! இதை தந்தால் தான் கற்கலாம் என்று இல்லை! விருப்பம் உள்ள அனைவரும் இணைந்துகொள்ளலாம்! இணைவதற்கு நிபந்தனைகள் எதுவும் இல்லை.
கற்கையில் இணைய விரும்புவர்கள் கீழ்வரும் வாட்ஸப் குழுவில் இணைந்து கொள்ளவும்.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...