குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, November 13, 2023

கர்ம யோகத்தின் இரகசியம்!

 


சிலரின் மனப்போக்கும் தாம் ஆன்மீகத்தில் மிகவும் முன்னேறிவிட்டதாகவும், சித்தாந்தம், வேதாந்தம் எல்லாம் கரைத்துக்குடித்திருப்பதாகவும், நிறைய சமய அறிவு இருப்பதாகவும் கர்ம யோகம் என்பது ஏதோ அடிப்படை ஆரம்ப நிலை என்றும் அறியாமையில் நினைக்கிறார்கள்.

இன்னும் சிலர் தாம் உயர்ந்த தீட்ஷை, மந்திர ஜெபங்கள் எல்லாம் செய்வதால் இவையெல்லாம் தேவையில்லை என்று நினைக்கிறார்கள்.

உண்மையில் நாம் எண்ணும் எண்ணமெல்லாம் செயல், எம் உடலாலும், மனதாலும் செய்வதெல்லாம் செயலே! இந்தச் செயல் என்ன மன நிலையுடன் செய்யப்படுகிறதோ அதற்கு ஏற்ப விளைவு ஏற்படும் என்பதே கர்ம யோகத்தின் இரகசியம்!

ஆகம/ தந்திர மொழியில் சொன்னால் சரியையின் இரகசியம்! வேதாந்த மொழியில் - சுவாமி விவேகானந்தர் பிரபலப்படுத்திய மொழியில் சொன்னால் கர்ம யோகம்.

கோயிலிற்கு பூ கொடுத்தோம் என்பது சிறப்பல்ல! அதை என்ன மன நிலையில் செய்தோம் என்பதே அதன் பலனைத் தீர்மானிக்கும்.

இறைச்சி வெட்டுபவனும் உயர்ந்த ஆன்மீக நிலையில் இருக்க முடியும் அவன் கர்மத்தின் செயலின் கடமையின் இரகசியத்தை அறிந்தால்!

பலவித தான தர்மங்களைச் செய்துகொண்டிருக்கிறோம்? ஆனால் எனக்கு ஏன் பிரச்சனை, நோய் துன்பம் என்ற கேள்விகளுக்கு விளக்கம் கர்ம யோக விதி புரியாமையே! இப்படி மனக்குழப்பம் இருந்தால் இந்தப்பாடங்கள் உங்களுக்கு உதவி புரியும்.

ஒவ்வொரு வாரமும் ஒரு பாடமாக சுய கற்கையும், ஞாயிற்றுக்கிழமைகளில் உங்கள் கேள்விகளுக்கு பதிலாக, நேரடி உரையாடல் zoom வழியாக நடைபெறுகிறது!

செயலின் இரகசிய விதிகளைப் புரிந்துகொள்ள விரும்பவர்கள் இணையுங்கள்.

வகுப்பு என்றவுடன் எவ்வளவு கட்டணம் என்ற எண்ணமும் என்னிடம் இருக்குமா என்ற குழப்பமுமே எல்லோரிடமும் உருவாகுவதை அவதானிக்கிறோம்.

நாம் எந்தக் கற்கைக்கும் கட்டணம் கட்டி இணையுங்கள் என்று கேட்பதில்லை! விருப்பம் உள்ள அனைவரும் இணைந்து உங்களால் இயன்றளவில் குருகுலம் வளர பங்களியுங்கள் என்பதே எமது மாணவர்களிடம் நாம் எதிர்பார்ப்பது! நீங்கள் பங்களிப்புத் தந்தாலும், தராவிட்டாலும் உங்களுக்கு கற்பிப்பதில் எந்த ஏற்றத்தாழ்வும் காண்பிக்கப்படமாட்டாது! நீங்கள் எம்மிடம் கற்பதால் உங்களில் மாற்றம் ஏற்பட்டு நீங்கள் நன்மை பெறுகிறீர்களா என்பது மாத்திரமே எமது இலக்கு!

ஒவ்வொருவரும் அவரவர் timeline இல் இதை கற்கலாம்! ஆகவே வகுப்பு ஆரம்பித்து விட்டது அடுத்த அணியில் சேரலாம் என்று எண்ணி ஒதுங்க வேண்டாம்!

இணையுங்கள்:


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...