குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, June 27, 2016

நூல் மதிப்புரை 03 - அகத்தியர் யோக ஞானத் திறவுகோல்





உயரிய சிந்தனைகளும் அவற்றின் வழியமைந்த செயல்களும் இடம்பெற்று வருவதனாலேயே இந்த உலகம் இன்றளவும் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஞானியர்களும் சித்தர்களும் மகரிஷிகளும் இடையறாது வழங்கிக்கொண்டிருக்கின்ற அருளுபதேசங்களும் அவற்றை அடைந்து நன்மை பெறுவதற்கான வழிகாட்டல்களும் எமக்கு என்றென்றும் துணைநிற்கின்றன. இத்தகைய உயரிய உபதெசங்களைத் தேடியறிவதற்கு முயற்சிப்போர் எத்தனை பேர் எம்மத்தியில் உள்னர்? ஆயினும் அவற்றை அறிந்தோர் தாம் அறிந்த விடயங்களை மற்றவர்களின் நன்மைக்கும் மேன்மைக்குமாக எடுத்துரைக்க முற்படுவது இன்றியமையாத ஒரு பொறுப்பாகும்.

இன்று எமது கைகளிலே கிடைத்துள்ள அகத்தியர் யோக ஞானத் திறவுகோல் என்னும் விளகக நூலை ஸக்தி சுமனன் அவர்கள் எழுதியுள்ளார். இத்தகையதொரு அரும்பெரும் பொக்கிசத்தை வழங்கியமைக்கு முதற்கண் எனது மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அகத்தியரின் ஞானப்பாடல்களுக்கு விளக்கவுரை தருவது ஒரு சாமான்யனால் இயலக்கூடிய விடயமல்ல. இதற்கு ஆன்ம ஞானத் தொடர்பு இருத்தல் வேண்டும். சுமனன் அவர்கள் உயர் ஞானியரோடும் மகரிஷிகளோடும் சித்தர்களோடும் பிறப்பால் தொடர்புபட்டுள்ளார். அன்றேல் அகத்தியர் பாடலுக்கு விளக்கம் மற்றும் வியாக்கியானங் கூறுவது அவ்வளவு எளிமையான விடயமல்ல. இதற்கு நல்லதோர் உதாரணத்தைக் கூறவிரும்புகிறேன். ஒரு நாள் காயத்ரி பீடத்திலுள்ள பல கடவுளரையும் வணஙகிய வேளையில் அகத்தியார் திருவுருவின் முன்னிலையிலிருந்து பணிந்து “எனக்கும் உயர்ஞானம் கிடைக்க அருள்வீர்களாக” என வேண்டிக்கொண்டு அதன் பின்னர் முருகேசு சுவாமிகளை வணங்கச் செண்றேன்.ஏன்னே அற்புதம்! நீங்கள் அகத்திய மகரிஷியிடம் கேட்டவற்றை அவர் நேரடியாக வழங்கமாட்டார். குருவின் மூலம் வேண்டுங்கள். அவை கிடைக்கும் என்றார். சுமனன் பிள்ளைப் பருவத்திலிருந்தே மகரிஷி முருகேசு சுவாமிகளுடன்கூட இருந்து அருள்ஞானம் பெற்றவர். அவர் வழியாக அகத்தியாரின் அருளாசி கிடைத்திருக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

அகத்தியர் யோக ஞானத் திறவுகோல் என்னும் இந்த நூல் 30 பாடல்களுக்கான விளக்கவுரையைத் தந்துள்ளது. யோக ஞானத்தைத் தேடும் ஒருவருக்கு இருக்க வேண்டிய முதல் தகுதி தொடக்கம் ஞானம் அடையும் வரையிலுள்ள விடயங்களைச் சிந்தித்துச் செயற்பட்டு, பயற்சிசெய்து விருத்தியடைய வேண்டிய அணுகுமுறைகள், வழிமுறைகள் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

இந்த 30 பாடல்களும் ஆத்மீக ரீதியாக முன்னேறிச் செல்லும் ஒருவர் தமது ஒவ்வொரு நிலையிலும் செயற்படவேண்டிய படிமுறைகள் வழிமுறைகள் தொடத்பான விளக்கங்கள் திறவுகோல்களாகத் தரப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றினையும் கற்றுத் தேர்ச்சியும் தெளிவும் பெறும்போது அதன் உட்பொருள் மேலும் தெளிவுபெறும் என்பதைச் சுமனன் தெளிவுபடக் குறிப்பிட்டுள்ளார்.

மகரிஷி கண்ணையா யோகி அவர்கள் எமது குரு முருகேசு சுவாமிகளுக்கு வழங்கிய அருளுபதேசப் பாடங்களைப் பார்த்தும் ஒருசிலவற்றைப் படித்தும் உள்ளேன். இப்பாடங்களிலே கண்ணையா யோகிகள் தமது மாணவர்களை விழித்துப் பாடங்களை ஆரம்பிக்கும் முறை அருட்தாகங்களைக் கவரும் பாங்குடையது. சுமனன் அவர்களிலும் அத்தகைய பாங்கினை ஒவ்வொரு பாலுக்குமான விளக்கததை ஆரம்பிக்கும்போது இடம்பெற்றிருப்பது இந்நூலைக் கற்பவர்களிடத்தில் அண்மிய நிலையை எற்படுத்திக் கவனத்தை ஈர்க்கும் எனலாம்.



பாடல் ஒவ்வொன்றும் முடிவடைந்த பின்னர் அந்தப் பாடலின் வாயிலாக ஒருவர் அறிந்திருக்க வேண்டிய முக்கியமான விடயங்கள் எவையென்பதை வினாக்களாக முன்வைத்துச் சிந்திக்கத் தூண்டுவது சிறந்ததொரு அணுகுமுறையாகும்.

இந்நூலிலே சுமனன் கையாண்டள்ள மொழிநடையும் பரவசமூட்டுகிறது. இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வழக்கிலிருந்த தமிழ்மொழி இன்றில்லை. அது மிகவும் ஆழமான அர்த்தத்தைத் கொண்ட சொற்களாலானது. பல்கால் பயிலும்போதே அதன் உட்பொருளை ஒருவரால் விளங்கிக்கொள்ள முடியும். மிகக் கடுமையான பிரயத்தனங்களில் மத்தியில் சொற்களுக்கான உரிய விளக்கங்களைப் பெற்று நாம் எல்லோரும் அறியும்படி தந்திருப்பதும் ஒருவகையில் அருள்வழித் தொடர்பே. இந்நூலின் இலகுவான மற்றும் தெளிவான மொழிநடை வாசிப்பதற்குத் தூண்டுதலளிப்பதாக உள்ளது. 

சுமனன் எங்கள் ஒவ்வொருவர் கைகளிலும் ஓரு ஞானத் திறவுகோலைத் தந்துள்ளார். இதன் துணைகொண்டு மேலான யோக ஞானத்தை அறிந்து உணர்ந்து வாழ்க்கையில் திகட்டாத பேரின்பத்தை அடைவோமாக. சுமனனுடைய இத்தகைய முயற்சி மேலும் தொடர்ச்சிபெற்று இன்னும் பல ஞான நூல்களைஈ அறிவுரைகளை மக்கள் கைகளில் இடம்பெறச் செய்தல் வேண்டும் எனவும் மகரிஷிகளின் அருள்மழை சுமனன் ஊடாக பொழிய வேண்டும் எனவும் எதிர்பார்க்கின்றோம்.

நன்றி
வணக்கம்

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...