குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, November 14, 2023

தீபாவளி கொண்டாட்டம்

 


தீபாவளியை 70 ஆண்டுக்கு முன்னர் இப்படிக் கொண்டாடவில்லை, அப்படிக் கொண்டாடவில்லை! இப்படியொரு பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருக்கிறது.

இதெல்லாம் என்ன விதமான சிந்தனை? வாதம்? கொண்டாட்டம் என்பது பொருளாதாரத்துடனும், அவரவர் மன நிலையுடனும், குடும்ப குல வழக்கத்துடனும் தொடர்புடையது!

அம்மாவின் உழைப்பில் சிறுவயதில் வடை சுட்டு சாப்பிட்டு கோயில் போய் பிறந்த நாள் கொண்டாடினோம்! அப்போதைய குடும்ப நிலை அது! இப்போது கொழுத்த உழைப்பில் காசு மெத்திப்போய் பல்லாயிரம் செலவழித்து ஹோட்டலில் பிள்ளைகளுக்கு Birthday party செய்கிறோம்! இதை எப்படி புரிந்துகொள்கிறோமோ அப்படித்தான் எல்லாப் பண்டிகைகளும்!

பணமுள்ளவன் காசை கரியாக்கி வெடிபோடுவான்; அவனிடமுள்ள அளவுக்கதிகமான பணம் பட்டாசுத் தொழிலாளியை வாழ்விக்கிறது.

கோயிலுக்கு ஆடம்பரமாக பூசைக்கு பூ வாங்கிக்கொடுத்தால் அது பூந்தோட்டக்காரனிற்கு வாழ்வாதாரமாகிறது! ஒருவனுடைய கொண்டாட்டம் இன்னொருவருக்கு வாழ்வாதாரமாகிறது.

மாமிசப் படையல் போடும் குலவழக்கம் இருந்தால் அது சிலரை வாழ்விக்கிறது! குடும்பத்தை உறவினர்களை விருந்துக்கு அழைத்து ஒருங்கிணைக்கிறது.

கொண்டாட்டங்கள், திருவிழாக்கள் எல்லாம் சமூகத்தை பொருளாதாரத்தை இயக்கும் விசைகள்! சமூகத்தின் பொருளாதாரம், உறவு என்பவற்றைப் பலப்படுத்தும் தளங்கள்!

இதை அதிமேதாவித்தனமாக கருத்து சொல்லுகிறோம், ஆராய்கிறோம் என்று கிளம்பி இறுதியில் தீபாவளிக் கொண்டாட்டத்தில் விரக்தியை கிளப்பாதிங்கப்பா!

கொண்டாட்டம் என்பது எமது தர்க்க மனதை சற்று தள்ளிவைத்து விட்டு அனுபவிப்பதற்கானது!

சந்தோஷமாக அனுபவிப்போம்! கொண்டாட்டங்களூடாக சமூகத்தை பலமுறச் செய்வோம்!


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...