குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, November 20, 2023

குமார தந்திரம் கூறும் ஸுப்ரமண்யரின் சோடஷ (பதினாறு) தியான ரூபங்கள் - 13 : வள்ளி கல்யாண சுந்தர ஸ்வாமி தியானம்

{கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, விசாகம், ஒவ்வொரு மாத சஷ்டியிலும் முருக உபாசகர்கள் தியானிக்கத் தக்க ரூபங்கள் வள்ளி கல்யாண சுந்தர ஸ்வாமி தியானம்}
______________________________________________
பதின்மூன்றாவது ரூபம் வள்ளீ கல்யாண சுந்தர ஸ்வாமி தியானம்

குமார தந்திரம் வள்ளீ தேவியை மகாவிஷ்ணுவின் மகளாகக் குறிப்பிடுகிறது. இந்த ரூபத்தில் வள்ளியை விஷ்ணுவின் க்ருஷ்ண வர்ணத்திலும், சுப்பிரமணியரை செம்மை நிறமாகவும் தியானிக்க வேண்டும். 

வள்ளி என்பதன் பொருள் நிலத்தினையும், நிலத்தில் விளையும் கிழங்கு, அதன் கொடி இவற்றைக் குறிக்கும் சொல்! மகாவிஷ்ணு நீடித்து நிலைத்திருக்கும் காக்கும் சக்தி! பூமியில் உணவுப் பஞ்சம் வந்தால் எக்காலத்திலும் நிலைத்து நின்று எம்மைப் போஷிக்கக் கூடியது வள்ளிக் கிழங்கு! அத்தகைய ஆற்றல் மகாவிஷ்ணுவின் அருளால் கிடைப்பது! உடலைப் போசிப்பது வள்ளிக் கிழங்கு! 

வள்ளியைக் கைப்பிடிப்பது என்பது பெரும் யோக இரகசியம் அடங்கிருக்கிறது; ஒரு யோகி தனது அசுர குணங்களை வென்று தேவேந்திரனின் தெய்வ மனதை முதற்படியில் அடைந்து விடலாம்; ஆனால் உடலாகிய பிருத்வி தத்துவத்தை சித்தி செய்ய மூலாதாரத்து கணபதி உதவி செய்ய, மணிப்பூரகத்து மகாவிஷ்ணு தன் பெண்ணாம் வள்ளியை – என்று நிலைத்து நிற்கும் யோக சித்தியை – கைப்பிடித்துத் தந்தால்தான் ஆறு இதழ் சுவாதிஷ்டான ஆறறிவு ஆறுமுகன் பூரண சக்தி அடைய முடியும். 

தெய்வானையைக் கைப்பிடித்தல் தெய்வ மனம் பெறுதல் எனும் முதல் தெய்வ சக்தி! 

வள்ளியை மணம்புணரல் என்பது உடலை யோகத்திற்கு சித்தி செய்யும் காய சித்தி! காய சித்திக்கு வேண்டிய மூலிகைகள் எல்லாம் தெரிந்த வேட்டுவப் பெண் என்பதும் இதனால்தான்! 

வள்ளீ கல்யாண சுந்தரர் என்ற இந்த ரூப தியானம் யோகத்தில் மணிபூரக சித்தியடைந்து மகாவிஷ்ணுவின் அருளைப் பெறுதலைக் குறிக்கும்! இந்த ரூப தியானம் பூரண லக்ஷ்மி கடாக்ஷத்தையும், உடல் உறுதியையும் சாதகனில் உருவாக்கும். 

ஹஸ்த த்வந்த்தேக்ஷமாலா 

மபய மபித்ருதம் குண்டிகாச்ரோணி பந்தம்

ஸ்வ்யே வாமே நிஷண்ணம்ஸ்ருவ 

த்ருத விதி நா ஹூய மாநேந யுக்தம் 

ஸர்வாலங்கார் யுக்தம் ஜலகலச த்ருதா விஷ்ணுநா சாருணாபம்

வள்ளீ கல்யாண மூர்த்திம் 

ஸகலசுரகணை ஸ்தூய மாநம் ப்ரபத்யே 

வலது இரண்டு கைகளில் அக்ஷமாலை, அபயம் தரித்து, மற்ற இடது இரண்டு கைகளில் கெண்டியும், இடுப்பில் கை வைத்தவராகவும்,

வலது பக்கத்தில் ஸ்ருவத்தை தரித்து ஹோமம் செய்து கொண்டு இருப்பவருமான பிரம்மாவுடன், 

ஜலகலசத்தைத் தரித்துக்கொண்டு இடது பக்கத்திலுள்ள விஷ்ணுவுடன் கூடியவரும், வள்ளிதேவியை கைப்பிடிக்க ஆபரணங்களொடு பீதாம்பரங்களோடு வீற்றிருக்கும், எல்லா தேவர்களாலும் துதிக்கப்படுபவரான வள்ளி கல்யாண மூர்த்தியை தியானிக்கிறேன்.



அடுத்தது பால ஸ்வாமி தியானம்


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...