குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, February 04, 2023

அமரத்துவத்தின் இயற்பியல்

தமிழில் இருக்கக் கூடிய so-called அறிவியல் பேசுகிறோம் என்பவர்களது சிந்தனைப்போக்கு அறவே அறிவியல் தன்மை அற்றது! வாசகர்களைக் கவர்வதற்கு, உசுப்பேத்துவதற்கு, உணர்ச்சிகளைத் தூண்டுவதற்கு கடவுளை வம்பிழுப்பதும், நக்கலடிப்பது கொண்ட மமதைத்துவமானது. 

ஆனால் உண்மையான சிந்தனாவாதி தனது சிந்தனையின் உச்சத்தில் பௌதீகப் பிரபஞ்சத்தின் அனைத்து அமிசங்களையும் சிந்திக்க ஆரம்பிக்கும் போது அவன் ஒரு இயற்பியலாளனாக வந்து நிற்பான்! பொருண்மை நிறைந்த பௌதீக உலகத்தை தனது புலன்களால் அளந்து, பிறகு கருவிகளை நுண்மையாகி அளந்து அதனாலும் அளக்க முடியாமல் போகும் போது கணிதத்தின் துணை தேவைப்படுகிறது. 

மேற்கத்தேய இறையியலில் கடவுள் இருக்கிறார் என்பதை நிறுவுவது என்பது ஒரு இயற்பியலாளன் எப்படி கணிதத்தின் உதவி கொண்டு இலத்திரன் இருக்கிறது என்று நிறுவுகிறானோ அதற்கு ஒப்பான செயல் என்று இயற்பியல் விஞ் ஞானி Frank J. Tipler அழகாக Physics of immortality என்ற நூலில் விளக்கியுள்ளார். இந்த நூலின் ஆசிரியர் ஒரு cosmologist - அத்துடன் ஆரம்பகால நாத்திகர். 

இந்த நூலாசிரியர் தனது PhD இனை Stephan Hawking and Roger Penrose ஆகிய இருவராலும் ஆராயப்பட்ட Globel General Relativity இல் பெற்றிருக்கிறார். 

அறிவியல் என்பது எதையும் உண்மை என்று உறுதிபட உரைக்கும் ஒரு முறையன்று! அறிவியலின் அடிப்படையே இது மாறக்கூடியது. இந்த நிபந்தனைகளில் இந்த விளைவைக் காட்டக்கூடியது என்ற புரிதலைப் பெறுவதுதான். ஆகவே எப்போது அறுதியான உண்மை என்பதைப் பற்றி அறிந்துகொள்வது அறிவியலின் நோக்கம் அன்று. இந்திய மெய்யியலில் மாறக்கூடிய அனைத்தும் பிரக்ருதி அல்லது ஸக்தியின் அமிசம் என்று சொல்லப்படுகிறது. 

இந்த நூல் மேற்கத்தேய இறையியலின் கோட்பாடுகளின் ஒன்றான The Omega Point theory இனை அடிப்படையாகக் கொண்டது. இந்தக் கோட்பாட்டினை விளங்கிக்கொள்ள பெரிதாக மண்டையைக் குழப்பிக்கொள்ளத் தேவையில்லை. சிவத்திலிருந்து முப்பத்தாறு தத்துவமாக விரிந்த பிரபஞ்சம் மீண்டும் ஊழிக்காலத்தில் சிவத்தில் ஒடுங்கும் என்று எமது புராணங்களும், தத்துவங்களும் கூறுவதை கத்தோலிக்க மத வார்த்தைகளில் சொல்லியிருக்கிறார்கள்; அவ்வளவுதான்! 

ஆர்வமுள்ளவர்களுக்கும், இறைவன் - அறிவியல் என்று தம்மை குழப்பிக் கொள்பவர்களுக்கும் நல்ல வாசிப்பு!




No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...