குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, August 18, 2022

ஸ்ரீ அரவிந்தரின் ஸாவித்ரி எனும் அருள் மழை - 05

 த்யுமசேனன் - தியுமன் என்றால் ஒளிமிகுந்தவன் என்றும் சேனன் என்றால் சேனைகளை உடையவன் என்றும் அர்த்தம், ஸத்யவானின் தந்தை; கண்களை இழந்த அந்தகன் என்பதால் இராஜ்யத்தை விட்டு விரட்டப்பட்டவனாகிறான். காட்டில் இருளில் வாழ்கிறான். 


ஸ்ரீ அரவிந்தர் த்யுமசேனனை தெய்வீக மனதின் குறியீடாக்குகிறார். ஒளி மிகுந்த தெய்வீக மனம் புலன் வழி சென்று குருடாகியதால் தனது தெய்வத்தன்மையை இழக்கும் நிலையைக் குறிக்கும் குறியீடு. 


உண்மையில் மனம் என்பது ஒரு தெய்வீகத் தன்மையுடைய ஒளியாற்றல் நிறைந்த ஒரு ஆற்றல்; ஆனால் அது உடலிற்குள் வந்து புலன்களில் கலக்கும் போது இந்த உடலை இழப்பதால் அடிக்கடி தனது தெய்வத்தன்மையை இழந்து குருட்டுத் தன்மையை அடைகிறது. மனம் என்பது அதன் உண்மை நிலையில் ஒளிமிகுந்த தெய்வத்தன்மை உடையது; ஆனால் புலன் வழி நடக்கும் போது குருடாகிறது. 


இதுவே த்யுமசேனன் என்ற ஸத்தியவானின் தந்தை என்ற பாத்திரத்தின் குறியீட்டு விளக்கம். 


ஸத்யவானும், த்யுமசேனனும் ஒரு யோக ஸாதகனுடைய இரண்டு பிரச்சனைகள். 


ஸாதகன் தனது உடல் வலிமையற்று அற்ப ஆயுளைப் பெற்றிருப்பதால் யோகத்தில் சித்தி பெறமுடியாமல் போகும்! இது ஸத்தியவானின் நிலையால் ஸ்ரீ அரவிந்தர் விளக்குகிறார். 


இரண்டாவது சாதகனின் மனம் புலன்கள் வழி சென்று குருடாவதால் தனது தெய்வீக ஆற்றலை இழந்து பராஸக்தியை நேரடியாக அழைக்க முடியாத நிலை! 


உடலும் பலமில்லை, மனமும் தனது தெய்வ நிலையை இழந்து விட்டது; எப்படி யோக சாதனை செய்வது என்றால் அதற்குரிய உதாரணம் அஸ்வபதி - இவர் புலன் களை அடக்கியவர், பிராணனாகிய குதிரையை வசப்படுத்தி ஆள்பவர்; நீண்ட தபஸினை செய்யக்கூடிய ஆற்றலைப் பெற்றவர். 


ஸ்ரீ அரவிந்தர் இந்த யோக காவியத்தில் சொல்லும் செய்தி அடிப்படையில் ஒரு யோக சாதகன் ஸத்யவான், த்யுமசேனன் போன்ற வலிமையற்ற நிலையில் இருக்கிறான். அவன் தனது தபஸினூடாக அஸ்வபதியாக மாறினால் மாத்திரமே பராஸக்தியைத் தரிசிக்க முடியும் என்பது!  அவள் அஸ்வபதியின் - பிராணனூடாக  - மகளாக வந்து உடலினது அற்ப ஆயுளை நீக்கி யோகம் புரியும் வல்லமையும். மனதை மீண்டும் தெய்வ நிலைக்கு உயர்த்தி ஒளியை நோக்கிச் செல்லும் வல்லமையும் தருவாள் என்று புரிய வைக்கிறார். 


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...